இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
வணக்கம்
வழக்கத்தினும் இந்த ஆண்டுக் கோடை ஒரு நவீன கவிதையாகவே காட்சி தருகிறது. வெளியே பத்து நிமிடங்கள் போய்விட்டு வீட்டுக்கு வந்தால் சிறிதுநேரம் ஒன்றுமே புரிவதில்லை. ஆணவமல்லாத ஏதோ ஒன்று கண்ணை மறைக்கிறது. ஐந்து நிமிடங்கள் அமைதியாகப் படுத்து எழுந்தால் சரியாகிவிடும் என்று பார்த்தால், படுக்கத்தான் முடிகிறதே தவிர, எழுந்திருக்க முடிவதில்லை. ஆனால் வெளியே போய்த்தான் தீர வேண்டியிருக்கிறது. வேலை பார்த்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. நமது அன்றாடங்களை எப்படி நம்மால் தவிர்க்க முடியாதோ அப்படித்தான் இயற்கைக்கும்.
இந்தக் கோடையை நேர்த்தியாகச் சமாளித்து வாழ இந்த இதழில் உபயோகமான நூறு டிப்ஸ் தருகிறார் காயத்ரி. ஒய். படித்துப் பயன்படுத்துவதுடன் எடுத்து பத்திரப்படுத்தி வையுங்கள். மீண்டும் அடுத்த கோடைக்கு உதவும்.
கர்நாடகத்தில் சித்தராமய்யாவும் துருக்கியில் எர்டோகனும் கணிப்புகளைப் பொய்யாக்கித் தமது மக்கள் ஆதரவை உறுதி செய்திருப்பதே வாரத்தின் சிறப்புச் செய்திகள். இதில், எர்டோகன் தேர்தலில் வென்ற சூழல் முக்கியமானது. துருக்கித் தேர்தலே என்றாலும் உண்மையில் இது அமெரிக்க-ரஷ்ய பலப்பரீட்சையின் இன்னொரு மறைமுக வடிவம். இந்த இதழ் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல, எண்பதுகளின் பனிப்போர் இப்போது வேறொரு முகம் கொண்டு மீண்டும் அரங்கேறத் தொடங்கியிருப்பது கண்கூடு. துருக்கி தேர்தல் முடிவுகளை முன்வைத்து (என்னதான் மே 28 அன்று இறுதிப் பரீட்சை இருந்தாலும்) ஸஃபார் அஹ்மத் எழுதியிருக்கும் கட்டுரை, உலகம் எதிர்கொள்ளவிருக்கும் அடுத்தக்கட்ட அரசியல் நெருக்கடிகளின் களம் என்னவாக இருக்கப் போகிறது என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது.
வினுலா எழுதியுள்ள ‘அடையாளங்களை அழித்தொழிப்போம்’ இன்னொரு மிக முக்கியமான கட்டுரை. தொடக்க காலம் முதலே உக்ரைனின் கலாசார-பண்பாட்டு வேர்களை நாசம் செய்யும் முயற்சியில் ரஷ்யா இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதை இக்கட்டுரை துல்லியமாகப் படம்பிடிக்கிறது. ஓர் இனத்தை வேரறுப்பது என்பதன் முதல்படி, அதன் பண்பாட்டு அடையாளங்களை அப்புறப்படுத்துவதேயாகும். காலம் காலமாக ரஷ்யா இதனை ஒரு செயல்திட்டமாகவே முன்வைத்து இயங்கி வருவதைத் தோலுரிக்கும் இக்கட்டுரையை நீங்கள் உலகின் பல ஏகாதிபத்திய-கோலோச்சு சக்திகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மிக நிச்சயமாக, இக்காலக்கட்டத்தின் மாபெரும் அச்சுறுத்தல் அமெரிக்காவோ வட கொரியாவோ அல்ல; ரஷ்யாதான் என்பது புலப்படும்.
வட கொரியா என்றதும் அதன் சமீபத்திய உளவு சாட்டிலைட் முயற்சியைக் குறித்துப் பேசாதிருக்க முடியாது. தென் கொரியாவைக் கண்காணிக்க என்று வட கொரிய அதிபர் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விடுவார். உண்மை அதுவல்ல. தெற்காசியப் பிராந்தியத்தின் நிரந்தரத் தலைவலியாக உருவெடுப்பதை ஒரு செயல்திட்டமாக வைத்துக்கொண்டு இயங்கிவரும் வட கொரியாவின் இந்த உளவு சாட்டிலைட் அமெரிக்காவின் கோபத்தை வலுவாகக் கிளறிவிட்டிருப்பது திண்ணம். இது குறித்த விரிவான கட்டுரை ஒன்றைச் சிவராமன் கணேசன் எழுதியிருக்கிறார்.
ட்விட்டரின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகியிருக்கும் பெண்மணி குறித்து, அரிசியே பயன்படுத்தாத அண்ணாநகர் உணவகம் குறித்து, நாய் வளர்ப்போர் அதிகரித்திருக்கும் சூழலில் ஒரு நாயை வளர்க்க ஆகும் மொத்த செலவு என்ன என்பது குறித்து, காலாவதியாகப் போகிற இரண்டாயிரம் ரூபாய் நோட்டின் துர்மரணம் குறித்து, அனைத்து வெப் பிரவுசர்களிலும் உள்ள இன்காக்னிடோ வசதி ஏன் என்பது குறித்து - எது மிச்சம்?
எல்லா விதமான ருசிகளுக்கும் இடம் தரும் கட்டுரைகளுடன் இந்த இதழ் வெளியாகியிருக்கிறது. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழ் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து அவர்களையும் சந்தாதாரர் ஆக்குங்கள்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
நம்மைச் சுற்றி
பாகிஸ்தான் குடிமக்களுக்கு, இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்பட்டன. மருத்துவ விசாக்களுக்கு ஏப்ரல் 29 வரை...
எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக்...
அண்மையில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பிரதமர் மோடி தலைமையில் கூடி விவாதித்தது...
உலகைச் சுற்றி
28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...
வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...
நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...
அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...
கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில்...
ஆயபயன்
தொடரும்
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...
ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...