Home » Home 23-11-2022

வணக்கம்

தினமும் நம் வீடுகளுக்குப் பால் பாக்கெட் போடுகிறவர்கள், பேப்பர் போடுகிறவர்கள், செயலியில் ஆர்டர் செய்தால் வாசலில் கொண்டு வந்து உணவு தந்துவிட்டுப் போகிறவர்கள் - இவர்களையெல்லாம் என்றைக்காவது நாம் நிறுத்தி முகம் பார்த்திருக்கிறோமா? அவர்களது பெயர் தெரியுமா நமக்கு? ஆனால் நம் பொழுதைப் போக்க உலாவும் ஃபேஸ்புக்குக்கு நம் ஜாதகத்தையே தருகிறோம். நமது ஒவ்வொரு நடவடிக்கையையும் பின் தொடர்ந்து, நம் விருப்பங்களைத் தெரிந்துகொண்டு விளம்பரங்கள் மூலம் அது நம்மைச் செலவு செய்யச் சுண்டி இழுக்கிறது. நமது அந்தரங்கத் தகவல்கள் பலவற்றை எடுத்து யார் யாருக்கோ விற்றுக் காசாக்குகிறது. நவீன வாழ்வில் நாம் பெறுவதும் இழப்பதும் பலதரப்பட்டவை. இத்தகைய முரண்களை இனி நம்மால் தவிர்க்கவே முடியாது. இவற்றோடுதான் வாழ்ந்தாக வேண்டும். ஆனால் எப்படி வாழ்கிறோம் என்று அவ்வப்போது கணப் பொழுது நின்று எண்ணிப் பார்க்கலாம் அல்லவா? இந்த இதழின் முகமற்றவர்கள் பகுதி அதைத்தான் செய்கிறது.

பன்னெடுங்காலமாக இஸ்ரேலின் பிரதமர் என்றால் பெஞ்சமின் நெதன்யாஹுதான். உலகறிந்த இஸ்ரேலியத் தலைவர். இப்போதைய தேர்தலுக்குப் பிறகும் அவரேதான் வந்திருக்கிறார். அதே அடாவடிதான், அதே கெடுபிடிகள்தாம். இம்முறை கூட்டு வைத்துக் குழப்பவிருக்கிறார் என்பதுதான் விசேடம். ஸஃபார் அஹ்மதின் கட்டுரை, இஸ்ரேலியப் பொதுத் தேர்தல் காட்சிகளைக் கண்முன் நிறுத்துகிறது.

சென்ற இதழின் புத்தகக் காட்சி சிறப்புப் பக்கங்களை வரவேற்றுக் கொண்டாடிய வாசகர்கள் பலர். முன்பே அறிவித்தபடி புத்தகக் காட்சி சிறப்புக் கட்டுரைகள் ஜனவரி வரை அடிக்கடி வரும். இந்த இதழில் எதிர் வெளியீடு அனுஷின் சிறப்புப் பேட்டியும் கொழும்பு புத்தகக் காட்சி குறித்த ரும்மானின் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. இவை இரண்டுமே சர்வதேசப் புத்தகச் சந்தை குறித்த தெளிவான பார்வையைத் தரவல்லவை.

தியாகராஜனின் போர்ட்டோ ரிக்கோ பயணக் கட்டுரை, நஸீமா எழுதியுள்ள எகிப்தின் அதி நூதனக் குற்றவாளி ஒருவரைப் பற்றிய கட்டுரை, மூன்றாம் உலக யுத்தமாக மாற இருந்து மயிரிழையில் தப்பித்த ரஷ்ய உக்ரைன் போரின் ஒரு குறிப்பிட்ட கட்டம் குறித்த ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை, சீனாவிலும் வட கொரியாவிலும் மீண்டும் பரவத் தொடங்கியிருக்கும் கோவிட் 19 குறித்த பூவராகனின் எச்சரிக்கைக் கட்டுரை என்று இந்த இதழெங்கும் நீங்கள் கருத்தூன்றி வாசிக்கப் பல முக்கியமான கட்டுரைகள் உள்ளன.

வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மெட்ராஸ் பேப்பர் உங்கள் பத்திரிகை. உங்களுக்கு இது பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள். புதிய தொடர்கள் குறித்த அறிவிப்பு இந்த இதழில் வெளியாகியுள்ளது. அடுத்த இதழிலிருந்து அவற்றை வாசித்து ரசிக்கத் தொடங்கலாம்.

திசை எட்டும்

உலகம்

இருண்டு போன இரண்டு நாடுகள்

28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...

உலகம்

அமெரிக்காவின் கம்யூனிசத் தோழன்!

வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...

உலகம்

நைஜீரியா: ஒரு புதிய அடையாளப் புரட்சி

நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...

உலகம்

100 நாள் ஆட்சி: டிரம்ப் நாட் அவுட், நாடு நாக் அவுட்!

அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...

உலகம்

கனடா: கொண்டையில் ஒரு கூட்டணிப் பூ

கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில்...

முகமற்ற மனிதர்கள்

கதம்பம்

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

நகைச்சுவை

லைசென்ஸ்! லைசென்ஸ்!

எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக்...

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
error: Content is protected !!