இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
வணக்கம்
சென்ற வாரம் மகளிர் தினச் சிறப்பிதழுக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. சென்ற இதழின் பல கட்டுரைகளின் சுட்டிகளை யார் யாரோ, யார் யாருக்கோ வாட்சப்பில் அனுப்பி வாசிக்கச் சொல்லிப் பரிந்துரை செய்திருந்தது தற்செயலாகத் தெரிய வந்தது. நமக்கே அப்படிச் சில forward குறுஞ்செய்திகள் வந்தபோது அம்மகிழ்ச்சி, மன நிறைவாக மலர்ந்து அமர்ந்தது. ஒரு பத்திரிகையின் வளர்ச்சி என்பது இத்தகைய வாசகர்களின் எண்ணிக்கை பெருகுவதில்தான் உள்ளது.
இந்த இதழில், கோகிலா எழுதியிருக்கும் ‘ஈழ அகதிகளும் ஓட்டை வாளி உதவிகளும்’ மிக முக்கியமான கட்டுரை. தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கும் ஈழத் தமிழர்களின் தீவிரமான பிரச்னைகளைப் பேசுகிற இக்கட்டுரை, அரசு செய்ய வேண்டிய மிகச் சரியான நிவாரணம் எதுவென்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
இஸ்ரேல் என்றால் கலவரம், குண்டு வெடிப்பு, போர் என்று நம் மனத்தில் பதிந்து போயிருக்கும். இப்போதும் அங்கே கலவரம்தான். ஆனால் பல்லாண்டு காலப் பாலஸ்தீனியருடனான பிரச்னையல்ல விஷயம். இஸ்ரேலிய அரசாங்கம் புதிதாகக் கொண்டு வந்திருக்கும் சில நீதித் துறை சார்ந்த சட்டத் திருத்தங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை உண்டாக்கியிருக்கின்றன. உள்நாட்டில் மட்டும்தானா என்றால் இல்லை. பல்வேறு உலக நாடுகளும் இஸ்ரேலைத் தொடர்ந்து கண்டித்து வருகின்றன. நட்புறவைத் துண்டித்துக்கொள்ளும் எல்லைக்கே சில தேசங்கள் சென்றிருக்கின்றன. மத அடிப்படைவாதிகளின் கைப்பாவையாகிவிட்டது இன்றைய இஸ்ரேலிய அரசு. அதற்கு அவர்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் விலையும் மிகப் பெரிதே. இஸ்ரேலின் இன்றைய இப்பிரச்னையின் வேர் வரை அலசி ஆராய்கிறது ஸஃபார் அஹ்மத் எழுதியிருக்கும் ‘இடியாப்பச் சிக்கலில் இஸ்ரேல்’.
பல்வேறு அரபு தேசங்களில் இன்று பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது? நஸீமா ரஸாக் எழுதியுள்ள ‘ஷேக்கம்மாக்களின் உலகம்’ அடிப்படைவாதம் ஆளும் தேசங்களில் வசிக்கும் நவீனகாலப் பெண்களின் வாழ்க்கையைப் படம் பிடிக்கிறது.
நம் நாட்டில் சமீபத்தில் நடந்த சில வட மாநிலத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. மோடியின் பல நிர்வாகத் தோல்விகள் தேசமெங்கும் பரவலான கண்டனங்களைப் பெற்றாலும் தொடர்ந்து அவர்களால் எப்படித் தேர்தல்களில் மட்டும் வெற்றி காண முடிகிறது? அலசுகிறது பாண்டியராஜனின் கட்டுரை.
பெண்களுக்கான மாதவிடாய்க் கால விடுப்பு ஸ்பெயினில் சட்டபூர்வமாகியிருக்கிறது. வேறு பல நாடுகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதுதான் இது. ஆனால் இந்தியாவில் இன்னும் இல்லை. இங்கே அது நடக்குமானால் அது பெண்களுக்கு சாதகமாக இருக்குமா, சுமையை மேலும் கூட்டுமா என்று வினுலா எழுதியுள்ள கட்டுரை ஆராய்கிறது.
இந்த இதழில் நீங்கள் பொருட்படுத்தி வாசிக்க இன்னும் பல அருமையான கட்டுரைகளும் உள்ளன. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
விருந்து
பாகிஸ்தான் குடிமக்களுக்கு, இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்பட்டன. மருத்துவ விசாக்களுக்கு ஏப்ரல் 29 வரை...
“வாராரு வாராரு அழகரு வாராரு” என்ற தேவாவின் திரைப்பாடலும், வைகைக் கரையின் முழங்கால் மட்ட நீரில் இளைஞர்கள் நடனமாடும் இன்ஸ்டாகிராம்...
அண்மையில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பிரதமர் மோடி தலைமையில் கூடி விவாதித்தது...
மருந்து
28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...
வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...
நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...
கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில்...
அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...
தொடரும்
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...
ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...