28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...
வணக்கம்
சரியாக ஒரு மாதம் முன்பு நாம் எதை எண்ணி, எதற்கு அச்சப்பட்டு எச்சரித்தோமோ அதை இன்று அரசே செய்ய ஆரம்பித்துவிட்டது. இந்தியா முழுதும் கோவிட் தொற்றுப் பரவலின் வேகம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அமைச்சர்களும் சுகாதாரத் துறை அலுவலர்களும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த இதழில் இடம்பெற்றிருக்கும் காயத்ரி. ஒய்யின் ‘மீண்டும் மீண்டும் கோவிட்’ கட்டுரை இந்தப் புதிய ரக (ஆர்க்டூரஸ்) கோவிட் குறித்த விரிவான தகவல்களை அளிக்கிறது.
சென்ற வாரம் சர்வதேச மீடியாவில் உக்ரைன் போர்ச் செய்திகளைக் காட்டிலும் அதிக அளவு பேசப்பட்ட விவகாரம், சீனாவுக்கு இலங்கை அனுப்பவிருக்கிற குரங்குகள். இலங்கையில் குரங்குகள் அதிகம் என்பது எளிய புள்ளி விவரத் தகவல். சீனா அந்தக் குரங்குகளை வாங்கி என்ன செய்யப் போகிறது என்பதுதான் விவகாரமே. மிருகக் காட்சி சாலைகளில் விடப் போவதாகச் சொல்கிறார்கள். கொன்று தின்றாலுமே நாம் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் கோவிடே சீனாவின் ‘உற்பத்தி’ என்கிற கான்ஸ்பிரஸி தியரி உலகெங்கும் உலவும் வேளையில் இக்குரங்குகளை அவர்கள் ஆய்வு நோக்கில் தருவிப்பார்களென்றால் சிக்கல்தான். ஏனெனில் சீனாவில் என்ன நடக்கிறது என்பது பொதுவாகவே ஒரு குத்துமதிப்புத் தகவல்தான். உண்மை என்றுமே முழுதாக அங்கிருந்து வந்ததில்லை. ரும்மான் எழுதியிருக்கும் ‘குரங்கு பிசினஸ்’ கட்டுரை மேற்படி இரு தேசங்களின் ஒப்பந்தத்தின் பின்னணியை விவரிக்கிறது.
மறுபுறம், இலங்கையைத் தாக்கியிருக்கும் இன்னொரு பூதமான க்ரிப்டோ ஊழல் குறித்து (இல்லாத கரன்ஸி, பொல்லாத விளையாட்டு) ஸஃபார் அஹ்மத் எழுதியிருக்கிறார்.
அடுத்த ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் கூட்டணிச் சிந்தனைகள் பல தலைவர்களுக்கு மேலோங்கத் தொடங்கியிருக்கின்றன. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இதனைத் தொடங்கி வைத்திருக்கிறார். ஆளும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான ஒரு பிரம்மாண்டக் கூட்டணியை தேசிய அளவில் அமைக்க விரும்பும் அவரது முயற்சி குறித்துப் பாண்டியராஜன் எழுதியிருக்கும் ‘கைகொடுப்போர் எத்தனை பேர்?’ ஊன்றி வாசிக்க வேண்டிய மற்றொரு கட்டுரை.
யூட்யூபில் சமையல் செய்து காட்டி சம்பாதிக்கும் இல்லத்தரசிகளைக் குறித்து நந்தினி கந்தசாமி எழுதியிருக்கும் கட்டுரை, சென்னை தீவுத் திடலில் உருவாகியிருக்கும் டிரைவ் இன் உணவகம் குறித்து ஶ்ரீதேவி கண்ணன் எழுதியிருக்கும் கட்டுரை, சென்னையில் இயங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் குறித்து கோகிலா எழுதியிருக்கும் கட்டுரை என இந்த இதழில் நீங்கள் ரசித்துப் படிக்க நிறைய உள்ளன.
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழ் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து அவர்களையும் சந்தாதாரராக்குங்கள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
திசையெலாம்
வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...
நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...
அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...
கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில்...
அறுசுவை
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
பாகிஸ்தான் குடிமக்களுக்கு, இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்பட்டன. மருத்துவ விசாக்களுக்கு ஏப்ரல் 29 வரை...
அண்மையில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பிரதமர் மோடி தலைமையில் கூடி விவாதித்தது...
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல் நடந்தவுடன் இந்தியப் பிரதமர் மோடியின் சவூதி சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டது. 23ஆம் தேதி காலையில் டெல்லியில்...
பதினேழு வயது காஷ்மீரி சிறுமியான மும்தாஸாவின் கால் முறிந்திருந்தது. எனினும் சுற்றுலா வந்திருந்த பத்து வயதுச் சிறுவனைக் காப்பாற்ற, அவனை முதுகில்...
ரசித்து ருசிக்க
எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக்...
தொடரும்
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...
ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...