Home » Home 18-01-23

வணக்கம்

சென்ற புதன் கிழமை (ஜனவரி 11, 2023) மெட்ராஸ் பேப்பர் வாசகர் திருவிழா - 13 புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் சிறப்பாக நடந்தது. அமுதசுரபி மாத இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தின் ராம்ஜி-காயத்ரி இருவரும் புத்தகங்களை வெளியிட்டார்கள். எழுத்தாளர் என். சொக்கன் நூலாசிரியர்களை வாழ்த்திப் பேசினார். அரங்கு நிறைந்த கூட்டமாக நடந்தது பெரிதல்ல. நன்றியுரை முடியும்வரை யாரும் எழுந்து செல்லாமல் இறுதி வரை இருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தமிழ்ச் சூழலில் ஒரு ‘முதல்’. இத்தனைக்கும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுள் ஐம்பது பேருக்கு மேல் உட்கார இடம் கிடைக்கவில்லை. அதைப் பொருட்படுத்தாமல் இறுதி வரை நின்றுகொண்டே அவர்கள் நிகழ்ச்சியைக் கண்டு களித்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒவ்வொருவரும் தவறாமல் கேட்ட கேள்வி, ‘நீங்கள் ஏன் ஒரு பெரிய மண்டபத்தில் நிகழ்ச்சியை வைத்திருக்கக் கூடாது?’

செய்திருக்கலாம். இன்னும் நிறையப் பேர் நிகழ்ச்சிக்கு வந்திருக்க முடியும். ஆனால் இப்படிக் குடும்ப விழா ஒன்றைக் கொண்டாடுவது போன்ற மன நிறைவு அதில் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். வந்திருந்த ஒவ்வொருவரும் அப்படித்தான் உணர வைத்தார்கள். நமது எழுத்தாளர்களான அ. பாண்டியராஜன், பிரபு பாலா, பாபுராஜ், கோகிலா, ஶ்ரீதேவி கண்ணன் எல்லோரும் கல்யாண வீட்டில் அரட்டை அடித்தபடி சாத்துக்குடி பை போடுவது போல விருந்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசுப் பொதிகளைத் தயார் செய்யத் தொடங்கியதில் இருந்து , நிகழ்ச்சி முடிந்ததும் ஸஃபார் அஹ்மத் மீதமிருந்த பொருள்கள் அனைத்தையும் எடுத்து வந்து மெட்ராஸ் பேப்பர் அலுவலகத்தில் சேர்த்துவிட்டுச் சென்றது வரை எதைச் சொல்ல, எதை விட?

ஒன்று சொல்லலாம். ஊரைக் கூட்டிக் கொண்டாடும் நோக்கம் உண்மையிலேயே யாருக்கும் இருக்கவில்லை. உறவுகளோடு சேர்ந்து ஒரு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் உணர்வுதான் அனைவருக்குமே இருந்தது. அதனால்தான் சிறிய இடம், நிறைந்த அனுபவம். வந்திருந்த மெட்ராஸ் பேப்பர் வாசகர்களும் அவ்வண்ணமே உணர்ந்ததாகச் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது.

புத்தக வெளியீடுகள் இன்று சாதாரணமாகிவிட்டன. தினமும் பத்து புத்தகங்களாவது வெளியாகின்றன. ஆனால் வெளியாகும் புத்தகங்களில் எத்தனை மக்கள் மத்தியில் கவனம் பெறுகின்றன? நம்முடைய பதிமூன்று புத்தகங்களும் இந்த விழாவுக்கு முன்னரே சென்னை புத்தகக் காட்சியில் விற்பனையில் முத்திரை பதிக்கத் தொடங்கிவிட்டதைப் பதிப்பாளர் ராம்ஜி குறிப்பிட்டார். மக்களுக்குப் பிடிக்கும் விதமாக, அவர்களின் தேவை அறிந்து எழுதப்படும் புத்தகங்கள் விற்பனையில் தவறு செய்வதில்லை. இதில் தொடராக வந்தவை - நேரடிப் புத்தகங்களாக எழுதப்பட்டவை என்ற பாகுபாடே இல்லை. என். சொக்கன் தனது உரையில் நேரடிப் புத்தக எழுத்து எப்படி ஓர் இயக்கமாகிக் கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிப் பேசியதை, நல்ல நூல்கள் காலம் வெல்லும் விதத்தைச் சுட்டிக்காட்டிய திருப்பூர் கிருஷ்ணனின் உரையுடன் ஒப்பிட்டு நோக்கினால் நாம் சரியான பாதையில் செல்லத் தொடங்கியிருப்பதை உணர முடிகிறது.

இந்த விழாவுக்கென நமது அயலக எழுத்தாளர்கள் பலர் சென்னை வந்திருந்தார்கள். சிங்கப்பூரில் இருந்து முருகு தமிழ் அறிவன், துபாயிலிருந்து நஸீமா ரஸாக், இலங்கையில் இருந்து ஸஃபார் அஹ்மத், ரும்மான், ஹாங்காங்கில் இருந்து பூவராகன் - மெட்ராஸ் பேப்பர் என்பது வெறும் ஓர் இதழல்ல; அது ஓர் இயக்கம் என்பதை வலியுறுத்தும் விதமாக இருந்தது இவர்களுடைய வருகையும் ஈடுபாடும். முன்னரே அறிவித்திருந்த வாசகர் கேள்வி நேரத்தில் நமது எழுத்தாளர்களும் வாசகர்களும் ஆர்வமுடன் கலந்துரையாடினார்கள். வாசகர்களுடன் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பொறுப்பை ஏற்ற ரும்மானின் வினாக்களுக்கும் பதிலளித்தார்கள். ஒரு கட்டத்தில் இக்கேள்வி நேரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்குமானதாக ஆகிப் போனது. திருப்பூர் கிருஷ்ணன், ராம்ஜி, சொக்கன் உள்ளிட்ட அத்தனை பேரிடமும் சரமாரியாகக் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்களும் சலிக்காமல் பதில் சொல்லி அசத்தினார்கள்.

இந்த வாசகர் திருவிழா - 13 புத்தக வெளியீட்டு விழா என்பது ஜூன் மாதம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள மெட்ராஸ் பேப்பரின் ஆண்டு விழாவுக்கு ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டிப் பேசினார்.

மொத்த நிகழ்ச்சியையும் ஸ்ருதி டிவி கபிலன் நேரலையில் கொண்டு வந்து உடனடியாக உலகம் கண்டு களிக்க ஏற்பாடு செய்திருந்தார். நமது சிறப்புச் செய்தியாளர் கோகிலா பாபு நிகழ்ச்சி முழுவதையும் புகைப்படம் எடுத்தார். இந்த இதழில் அவையும் பிரசுரமாகியிருக்கின்றன. நிகழ்ச்சிக்கு வர முடியாதவர்கள், நேரலையில் காணாதவர்கள் இப்போது கண்டு ரசிக்கலாம்.

  • உலகைச் சுற்றி

    ஆளுமை

    ப்ரூஃப் மிஸ்டேக்கில் பிறந்த கடவுள்

    இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் காலமானார். அவர் கண்டுபிடித்த ஹிக்ஸ் போசான் என்ற துகள், காலத்தால் அழியாதது. கடவுளும் இயற்பியலும் இருக்கும்வரை இருக்கப்...

    உலகம்

    ஈரான் நடத்திய ஒன் டே மேட்ச்

    பள்ளிக்கூடத்தில் வம்பு செய்வதற்கென்றே சில பிள்ளைகள் இருப்பார்கள். இதில் யாராவது தன்னை அடித்துவிட்டார்கள் என்று முறையிட்டால், “நீ என்ன செய்தாய்?” என்ற...

    உலகம்

    இலக்கை அடைய இரண்டு வழி

    ரஷ்யா – உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளாக உச்சத்தில் இருக்கிறது. மேற்காசியப் பகுதியில் உருவாகிய போர், வளர்ந்துகொண்டே போகிறது. பொதுவாக, போர்க்...

    உலகம்

    பட்டம் கட்டி ஓரம் கட்டு!

    “ரஷ்யா ரஷ்யர்களுக்கே!” மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் கேட்கின்றன இந்த கோஷங்கள். சைபீரிய யாகுட் இனத்தைச் சேர்ந்தப் பெண்மணி ஒருவரைத்...

    உலகம்

    வீடு கட்டி அடிக்கும் அரசு!

    நிறவெறிக்குப் பெயர் பெற்ற தென்னாப்பிரிக்காவில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்கிற மக்கள் தங்களுக்கான வீடு கேட்டு அரசாங்கத்துக்கு மனுச் செய்து...

    இன்குபேட்டர்

    மூளையில் ஒரு சிப், முதுகுத் தண்டில் ஒரு சிப்

    ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அப்பழமொழியின் தமிழ் மொழிபெயர்ப்பு “ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்படவில்லை”. பிரமாண்டமான எதையும் குறுகிய காலத்தில்...

    ருசிகரம்

    நம் குரல்

    வாக்களிக்கும் நேரம்

    குடிநீருக்குப் பிரச்னை இருக்கக் கூடாது. ரேஷன் பொருள்கள் தடையறக் கிடைக்க வேண்டும். மாநிலத்தில் எங்கிருந்தும் எந்த இடத்துக்கும் சென்று வர சாலைகள்...

  • தொடரும்

    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 1

    1. நாற்பது வயதுக் குழந்தை எனக்கு ஏழு வயது நிறைவடைய மூன்று மாதங்கள் இருந்தபோது அவன் பிறந்தான். அன்றைக்கு ஜூலை மாதம் இரண்டாம் தேதி, 1979வது வருடம். பிறக்கும்போது அவனுக்கு நாற்பது வயதாக இருக்கும் என்று முதல் நாள் இரவு படுக்கப் போகும் முன்பு அப்பா சொன்னார். அந்தத் தகவல் தந்த திகைப்பில் சரியாகத் தூக்கம்...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை – 1

    பணப் பார்வை தொண்ணூறுகளில் பெரும் புகழ் பெற்ற காதல் திரைப்படம் அது. ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் ஒரு புயலைப்போல் அள்ளிக்கொண்டது, குறிப்பாக, இளைஞர்களை. அப்போது கல்லூரி மாணவர்களாக இருந்த நானும் என்னுடைய நண்பர்களும் அந்தப் படத்தைப் பலமுறை விரும்பிப் பார்த்தோம், அதில் இடம்பெற்ற காதல் வழியும்...

    Read More
    உரு தொடரும்

    உரு – 1

    1. கேரித் தீவு மலேசியாவின் கிள்ளான் நகரிலிருந்தது அப்பள்ளி. தெங்கு பெண்டாஹாரா அஸ்மான் ஆங்கிலப்பள்ளி. அதுவரை அவன் வசித்தது கேரித் தீவில். அங்கே இருந்தோர் ஆடு, கோழிகளிடம் கூட தமிழில்தான் பேசிக் கொண்டிருந்தனர். இங்கோ அவனுக்குப் புரியாத ஏதேதோ மொழிகளைப் பேசும் மக்கள் இருந்தனர். ஒன்றாம் வகுப்பில்...

    Read More
    aim தொடரும்

    AIm it! – 1

    ‘சிப்’புக்குள் முத்து மின்சாரத்திற்கு முன் – மின்சாரத்திற்குப் பின் என்று மனிதகுல வரலாறை இரண்டாகப் பிரிக்கலாம். மின்சாரம் தொடாத துறைகளே இல்லை. பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்கும். இதன் மூலம் வாழ்வை எளிதாக்கும். ஆனால் மிகச் சில...

    Read More
    G தொடரும்

    G இன்றி அமையாது உலகு – 1

    1. உலக நாயகன் ஒவ்வொரு மனிதனுக்கும், ஆயிரம் கரங்கள் கொண்ட தனது பேருருவில், ஏதோவொன்றின் விரல் நுனியைப் பற்றிக்கொண்டு நடை பழகிக்கொடுக்கும் ஆதிபராசக்தியென உலகெங்கும் இன்று விரவியிருக்கிறது கூகுள். இம்மந்திரச் சொல்லை உச்சரிக்காத கணினியில்லை. இது நுழையாத நுட்பங்களில்லை. இதன் ஜீவநாடியைப் பற்றிக்கொண்டு...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு  குடும்பக்  கதை – 100

    100. வந்தேமாதரம் விவாதம் நேருவுக்கும், படேலுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கிய காந்திஜி ஜனவரி 30ஆம் தேதி மாலை கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பற்றியும், காந்திஜியின் பூத உடலுக்கு முன்பாக மவுண்ட் பேட்டன் வேண்டுகோள்படி (தங்களுக்கிடையிலான வேற்றுமைகளை மறந்து) நேருவும்...

    Read More
    error: Content is protected !!