Home » Home 18-01-23

வணக்கம்

சென்ற புதன் கிழமை (ஜனவரி 11, 2023) மெட்ராஸ் பேப்பர் வாசகர் திருவிழா - 13 புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் சிறப்பாக நடந்தது. அமுதசுரபி மாத இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தின் ராம்ஜி-காயத்ரி இருவரும் புத்தகங்களை வெளியிட்டார்கள். எழுத்தாளர் என். சொக்கன் நூலாசிரியர்களை வாழ்த்திப் பேசினார். அரங்கு நிறைந்த கூட்டமாக நடந்தது பெரிதல்ல. நன்றியுரை முடியும்வரை யாரும் எழுந்து செல்லாமல் இறுதி வரை இருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தமிழ்ச் சூழலில் ஒரு ‘முதல்’. இத்தனைக்கும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுள் ஐம்பது பேருக்கு மேல் உட்கார இடம் கிடைக்கவில்லை. அதைப் பொருட்படுத்தாமல் இறுதி வரை நின்றுகொண்டே அவர்கள் நிகழ்ச்சியைக் கண்டு களித்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒவ்வொருவரும் தவறாமல் கேட்ட கேள்வி, ‘நீங்கள் ஏன் ஒரு பெரிய மண்டபத்தில் நிகழ்ச்சியை வைத்திருக்கக் கூடாது?’

செய்திருக்கலாம். இன்னும் நிறையப் பேர் நிகழ்ச்சிக்கு வந்திருக்க முடியும். ஆனால் இப்படிக் குடும்ப விழா ஒன்றைக் கொண்டாடுவது போன்ற மன நிறைவு அதில் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். வந்திருந்த ஒவ்வொருவரும் அப்படித்தான் உணர வைத்தார்கள். நமது எழுத்தாளர்களான அ. பாண்டியராஜன், பிரபு பாலா, பாபுராஜ், கோகிலா, ஶ்ரீதேவி கண்ணன் எல்லோரும் கல்யாண வீட்டில் அரட்டை அடித்தபடி சாத்துக்குடி பை போடுவது போல விருந்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசுப் பொதிகளைத் தயார் செய்யத் தொடங்கியதில் இருந்து , நிகழ்ச்சி முடிந்ததும் ஸஃபார் அஹ்மத் மீதமிருந்த பொருள்கள் அனைத்தையும் எடுத்து வந்து மெட்ராஸ் பேப்பர் அலுவலகத்தில் சேர்த்துவிட்டுச் சென்றது வரை எதைச் சொல்ல, எதை விட?

ஒன்று சொல்லலாம். ஊரைக் கூட்டிக் கொண்டாடும் நோக்கம் உண்மையிலேயே யாருக்கும் இருக்கவில்லை. உறவுகளோடு சேர்ந்து ஒரு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் உணர்வுதான் அனைவருக்குமே இருந்தது. அதனால்தான் சிறிய இடம், நிறைந்த அனுபவம். வந்திருந்த மெட்ராஸ் பேப்பர் வாசகர்களும் அவ்வண்ணமே உணர்ந்ததாகச் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது.

புத்தக வெளியீடுகள் இன்று சாதாரணமாகிவிட்டன. தினமும் பத்து புத்தகங்களாவது வெளியாகின்றன. ஆனால் வெளியாகும் புத்தகங்களில் எத்தனை மக்கள் மத்தியில் கவனம் பெறுகின்றன? நம்முடைய பதிமூன்று புத்தகங்களும் இந்த விழாவுக்கு முன்னரே சென்னை புத்தகக் காட்சியில் விற்பனையில் முத்திரை பதிக்கத் தொடங்கிவிட்டதைப் பதிப்பாளர் ராம்ஜி குறிப்பிட்டார். மக்களுக்குப் பிடிக்கும் விதமாக, அவர்களின் தேவை அறிந்து எழுதப்படும் புத்தகங்கள் விற்பனையில் தவறு செய்வதில்லை. இதில் தொடராக வந்தவை - நேரடிப் புத்தகங்களாக எழுதப்பட்டவை என்ற பாகுபாடே இல்லை. என். சொக்கன் தனது உரையில் நேரடிப் புத்தக எழுத்து எப்படி ஓர் இயக்கமாகிக் கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிப் பேசியதை, நல்ல நூல்கள் காலம் வெல்லும் விதத்தைச் சுட்டிக்காட்டிய திருப்பூர் கிருஷ்ணனின் உரையுடன் ஒப்பிட்டு நோக்கினால் நாம் சரியான பாதையில் செல்லத் தொடங்கியிருப்பதை உணர முடிகிறது.

இந்த விழாவுக்கென நமது அயலக எழுத்தாளர்கள் பலர் சென்னை வந்திருந்தார்கள். சிங்கப்பூரில் இருந்து முருகு தமிழ் அறிவன், துபாயிலிருந்து நஸீமா ரஸாக், இலங்கையில் இருந்து ஸஃபார் அஹ்மத், ரும்மான், ஹாங்காங்கில் இருந்து பூவராகன் - மெட்ராஸ் பேப்பர் என்பது வெறும் ஓர் இதழல்ல; அது ஓர் இயக்கம் என்பதை வலியுறுத்தும் விதமாக இருந்தது இவர்களுடைய வருகையும் ஈடுபாடும். முன்னரே அறிவித்திருந்த வாசகர் கேள்வி நேரத்தில் நமது எழுத்தாளர்களும் வாசகர்களும் ஆர்வமுடன் கலந்துரையாடினார்கள். வாசகர்களுடன் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பொறுப்பை ஏற்ற ரும்மானின் வினாக்களுக்கும் பதிலளித்தார்கள். ஒரு கட்டத்தில் இக்கேள்வி நேரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்குமானதாக ஆகிப் போனது. திருப்பூர் கிருஷ்ணன், ராம்ஜி, சொக்கன் உள்ளிட்ட அத்தனை பேரிடமும் சரமாரியாகக் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்களும் சலிக்காமல் பதில் சொல்லி அசத்தினார்கள்.

இந்த வாசகர் திருவிழா - 13 புத்தக வெளியீட்டு விழா என்பது ஜூன் மாதம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள மெட்ராஸ் பேப்பரின் ஆண்டு விழாவுக்கு ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டிப் பேசினார்.

மொத்த நிகழ்ச்சியையும் ஸ்ருதி டிவி கபிலன் நேரலையில் கொண்டு வந்து உடனடியாக உலகம் கண்டு களிக்க ஏற்பாடு செய்திருந்தார். நமது சிறப்புச் செய்தியாளர் கோகிலா பாபு நிகழ்ச்சி முழுவதையும் புகைப்படம் எடுத்தார். இந்த இதழில் அவையும் பிரசுரமாகியிருக்கின்றன. நிகழ்ச்சிக்கு வர முடியாதவர்கள், நேரலையில் காணாதவர்கள் இப்போது கண்டு ரசிக்கலாம்.

உலகைச் சுற்றி

உலகம்

அமைதிக்கு யார் தடை?

நெத்தன்யாகுவைக் குறி வைத்து ஆளில்லாத வீட்டுக்கு ஏவுகணையை அனுப்பியது ஹிஸ்புல்லா. இவர்கள் திட்டம் போட்டுத் தோல்வியைத் தழுவ, திட்டமிடாமல் இஸ்ரேல்...

உலகம்

மாற்றிக் காட்டிய எக்ஸ்போ

மாற்றுத்திறனாளிகளுக்கான  ‘அக்சஸ் எபிலிட்டிஸ் எக்ஸ்போவின் 2024’ (Access Abilities Expo 2024) கண்காட்சி துபாயில் நடந்து முடிந்துள்ளது. எந்த இடமாக...

உலகம்

குறி வச்சா இரை விழணும்: இது கிம் ஜாங் உன் ஸ்டைல்

போர் நடப்பதென்னவோ ரஷ்யா – உக்ரைன், மத்தியக் கிழக்குப் பக்கம் தான். என்றாலும் மாதத்திற்கொரு முறையாவது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துவிடுபவர்...

உலகம்

கடலில் மூழ்கிக் காசு எடுக்கும் கன்னிகள்

‘ஜெஜு தீவு’ உலகம் சுற்றும் வாலிபர்களின் பக்கட் லிஸ்டில் கண்டிப்பாக இடம்பெறும் ஓரிடம். சொர்க்கபுரி போன்ற அதன் காலநிலையும், எரிமலைகள் ...

உலகம்

அமெரிக்க அதிபர் அம்மாவா? ஐயாவா?

அமெரிக்கத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில் முன் கூட்டியே வாக்களிப்பு தொடங்கிவிட்டிருக்கிறது. அஞ்சல் வழி வாக்களிப்பவர்களும் பதிய...

ருசிகரம்

நம் குரல்

மழையும் பிழையும்

மழை என்ற சொல்லைக் கேட்டதும், அது நம்மை நோக்கித்தான் வருகிறதென்று பாய்ந்து ஓடிப் பதுங்குகிறோம். தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் புயல் ஒன்று மேற்கு...

தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 28

28. தேவைகள், விருப்பங்கள் இணையத்தில் எங்கு பார்த்தாலும் இரட்டைக் கட்சிகள்தான். இவர்கள் நீலம் என்றால் அவர்கள் சிவப்பு. இரண்டுக்கும் ஒன்றுக்கொன்று...

தொடரும்

aim தொடரும்

AIM IT – 28

ஏ.ஐயும் விக்கெட் கீப்பரும் ஒன்னு எண்ணற்ற ஏ.ஐ கருவிகள் வந்துவிட்டன. நாள்தோறும் பல புதிய கருவிகள் வந்த வண்ணம் உள்ளன. பார்த்தவுடன், “ஆ.. சூப்பர்…” என்று சில கருவிகள் வியக்கவைக்கின்றன. ஆனால் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், “நான் நெனச்ச மாதிரி இல்லயே…” என்று ஏமாற்றமளிக்கின்றன. இச்சூழலை எவ்வாறு கையாள்வது...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 123

123. ஊரும் சேரியும் ‘என்னடா இப்படிப் பண்ணிட்டிருக்கான் ஜெயகாந்தன்’ என்றான் ம வே சிவக்குமார். ‘என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்’ என்றான் இவன். ‘மைலாப்பூர் சேரில இருக்கற தேவடியாளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்வு குடுக்கப்போறேன்னு அந்த செண்ட்ரல் பேங்க் ஆஃப் இண்டியாகாரன்தான் அறிவில்லாம சொல்றான்னா...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 28

28. அதுவா? நாமா? கடவுளின் இருப்பையும் வாழ்வையும் தெரிந்துகொள்ள விரும்பிப் பிரதிகளின் வழியே மேற்கொண்ட பயணத்தில் எனக்கு இரண்டு விளைவுகள் வாய்த்தன. முதலாவது அவன் இல்லை ஆனால் அது இருக்கிறது என்கிற தெளிவு. இரண்டாவது, மதங்களின் அடியொற்றிச் சென்றால் அதைக் கண்டடைய முடியாது என்கிற இன்னொரு தெளிவு. உலகில்...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 28

28. வென்ற கதை ஒரு கல்லூரிச் செயல்திட்டமாகத் தொடங்கப்பட்டது. தன் முதல் அலுவலகத்தை கார் கேரேஜில் தொடங்கியது. இரண்டு மாணவர்களின் விளையாட்டுச் செய்கை என்று வர்ணிக்கப்பட்டது. ஏகப்பட்ட எதிர்ப்புகளைக் கண்டது. ஆனாலும் திடமாக, தீர்க்கமாகத் தனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக்கொண்டு வலுவாக வளர்ந்தது. இன்று உலகை...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 28

28. தேவைகள், விருப்பங்கள் இணையத்தில் எங்கு பார்த்தாலும் இரட்டைக் கட்சிகள்தான். இவர்கள் நீலம் என்றால் அவர்கள் சிவப்பு. இரண்டுக்கும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாது. இருதரப்பினரும் மற்றவரைக் கண்டபடி விமர்சித்துப் பேசுவார்கள், ‘எங்கள் கட்சிதான் சிறந்தது, அந்தக் கட்சியின் வலையில் சிக்கி...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 127

127. அண்ணன் தம்பி மோதல் ராஜாஜி தன்னை கருணையின்றித் தாக்குவதாக நேரு ஒரு முறை குறிப்பிட்ட சமயத்தில், “நாங்கள் நெருங்கிய நண்பர்களே! ஒருவரிடம் ஒருவர் அன்பு கொண்டவர்களே!” என்று பதில் கூறினார் ராஜாஜி. அது மட்டுமில்லை, “நேருவும் ராஜாஜியும் சண்டை போடலாமா? என்று பலர் கவலைப்படுகிறார்கள். ஆமாம்! நான்...

Read More
error: Content is protected !!