ஏ.ஐயும் விக்கெட் கீப்பரும் ஒன்னு எண்ணற்ற ஏ.ஐ கருவிகள் வந்துவிட்டன. நாள்தோறும் பல புதிய கருவிகள் வந்த வண்ணம் உள்ளன. பார்த்தவுடன், “ஆ.. சூப்பர்…” என்று சில கருவிகள் வியக்கவைக்கின்றன. ஆனால் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், “நான் நெனச்ச மாதிரி இல்லயே…” என்று ஏமாற்றமளிக்கின்றன. இச்சூழலை எவ்வாறு கையாள்வது...
வணக்கம்
இது உணவுச் சிறப்பிதழ். உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களில் தொடங்கி, உணவு பரிமாறும் கலை வரை ஏராளமான விஷயங்கள் இதில் பேசப்பட்டிருக்கின்றன.
இதனினும் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று உண்டு. இந்த இதழில் சமையல் குறிப்புகள் கிடையாது.
இலக்கியம், அரசியல், ஆன்மிகம், பொருளாதாரம் குறித்தெல்லாம் நேரம் மறந்து கூடிப் பேசுவோரை அறிந்திருப்பீர்கள். உணவும் அப்படிப்பட்ட ஓர் இயல்தான். என்ன பேசினாலும் அலுக்காது; எத்தனை விதமாகப் பேசினாலும் சலிக்காது.
ஆனால் தமிழ்ச் சூழலில் உணவைக் குறித்துப் பேசுவது என்றாலே சமையல் குறிப்புகளைச் சொல்வதுதான். இது இன்று நேற்று உருவான வழக்கமல்ல. தொன்று தொட்டே இப்படித்தான். இணையத்தில் தொட்டதற்கெல்லாம் ‘லிங்க் ப்ளீஸ்’ என்று கேட்பதை நிகர்த்தது இது. உண்மையில், சிறந்த சமையல் என்பது குறிப்புகளைப் புறந்தள்ளி உருவாவதே ஆகும். கலை மனமும் மேம்பட்ட ரசனையும் தீராத ஆர்வமும் ஒருங்கிணையும்போதே ருசி மிகுந்த ஓர் உணவு உருவாகிறது. பொருள்களல்ல. அவற்றைக் கையாள்வோரின் திறமையே ருசியின் ஆதாரம்.
இந்த இதழில் வழக்கமான தொடர் பகுதிகளைத் தவிர, உணவு சார்ந்த கட்டுரைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஷாராஜின் சிறுகதையும் அது தொடர்பானதே. மொத்தமாகத் தொகுத்துப் படிக்கும் வாசகர்களுக்கு இது வசதியாக இருக்கும். உலகம் உண்ணும் விதத்தை ஒரு புத்தகத்தில் முழுமையாக வாசித்துத் தெரிந்துகொண்டாற் போன்ற அனுபவத்தைத் தர வேண்டும் என்று எண்ணியதால் இந்த ஏற்பாடு.
இதழ் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மெட்ராஸ் பேப்பர் மேலும் சிறப்பாக வெளிவர உங்கள் ஆலோசனைகள் மிகவும் முக்கியம்.
உலகம் எப்படி உண்கிறது?
அறுசுவை
சிந்தனை செய்
வரலாறு முக்கியம்
தொடரும்
123. ஊரும் சேரியும் ‘என்னடா இப்படிப் பண்ணிட்டிருக்கான் ஜெயகாந்தன்’ என்றான் ம வே சிவக்குமார். ‘என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்’ என்றான் இவன். ‘மைலாப்பூர் சேரில இருக்கற தேவடியாளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்வு குடுக்கப்போறேன்னு அந்த செண்ட்ரல் பேங்க் ஆஃப் இண்டியாகாரன்தான் அறிவில்லாம சொல்றான்னா...
28. அதுவா? நாமா? கடவுளின் இருப்பையும் வாழ்வையும் தெரிந்துகொள்ள விரும்பிப் பிரதிகளின் வழியே மேற்கொண்ட பயணத்தில் எனக்கு இரண்டு விளைவுகள் வாய்த்தன. முதலாவது அவன் இல்லை ஆனால் அது இருக்கிறது என்கிற தெளிவு. இரண்டாவது, மதங்களின் அடியொற்றிச் சென்றால் அதைக் கண்டடைய முடியாது என்கிற இன்னொரு தெளிவு. உலகில்...
28. வென்ற கதை ஒரு கல்லூரிச் செயல்திட்டமாகத் தொடங்கப்பட்டது. தன் முதல் அலுவலகத்தை கார் கேரேஜில் தொடங்கியது. இரண்டு மாணவர்களின் விளையாட்டுச் செய்கை என்று வர்ணிக்கப்பட்டது. ஏகப்பட்ட எதிர்ப்புகளைக் கண்டது. ஆனாலும் திடமாக, தீர்க்கமாகத் தனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக்கொண்டு வலுவாக வளர்ந்தது. இன்று உலகை...
28. தேவைகள், விருப்பங்கள் இணையத்தில் எங்கு பார்த்தாலும் இரட்டைக் கட்சிகள்தான். இவர்கள் நீலம் என்றால் அவர்கள் சிவப்பு. இரண்டுக்கும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாது. இருதரப்பினரும் மற்றவரைக் கண்டபடி விமர்சித்துப் பேசுவார்கள், ‘எங்கள் கட்சிதான் சிறந்தது, அந்தக் கட்சியின் வலையில் சிக்கி...
127. அண்ணன் தம்பி மோதல் ராஜாஜி தன்னை கருணையின்றித் தாக்குவதாக நேரு ஒரு முறை குறிப்பிட்ட சமயத்தில், “நாங்கள் நெருங்கிய நண்பர்களே! ஒருவரிடம் ஒருவர் அன்பு கொண்டவர்களே!” என்று பதில் கூறினார் ராஜாஜி. அது மட்டுமில்லை, “நேருவும் ராஜாஜியும் சண்டை போடலாமா? என்று பலர் கவலைப்படுகிறார்கள். ஆமாம்! நான்...
28 அமைதியோ அமைதி கணித்தமிழ் ஆர்வலர்கள் பலரும் முத்து கார் வாங்கப் போன கதையை அவ்வப்போது சிலர் மேற்கோள் காட்டிப் பேசுவதைக் கேட்டிருப்போம். வால்வோ கார், புதிய மாடல் அறிமுகமானதைத் தொடர்ந்து, அதை வாங்க ஷோரூம் போனார். புதிய காரின் எல்லா புதிய அம்சங்களையும் பார்வையிட்டார். அவருக்குப் பிடித்திருந்தது...