கண்ணின் அருமை கண்ணின் அருமை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஐம்புலன்களில் மிக முக்கியமான புலன் இது. குறிப்பாகச் சொல்லப்போனால் நமது சுற்றுப்புறத்திலிருந்து வரும் தகவல்களில் கிட்டத்தட்ட 80 % தகவல்கள் கண்கள் மூலமாகத்தான் நமது மூளையை வந்தடைகின்றன. நமது மூளையில் பின்புறத்தில் விஷூவல் கார்டெக்ஸ் எனப்படும்...
வணக்கம்
இது உணவுச் சிறப்பிதழ். உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களில் தொடங்கி, உணவு பரிமாறும் கலை வரை ஏராளமான விஷயங்கள் இதில் பேசப்பட்டிருக்கின்றன.
இதனினும் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று உண்டு. இந்த இதழில் சமையல் குறிப்புகள் கிடையாது.
இலக்கியம், அரசியல், ஆன்மிகம், பொருளாதாரம் குறித்தெல்லாம் நேரம் மறந்து கூடிப் பேசுவோரை அறிந்திருப்பீர்கள். உணவும் அப்படிப்பட்ட ஓர் இயல்தான். என்ன பேசினாலும் அலுக்காது; எத்தனை விதமாகப் பேசினாலும் சலிக்காது.
ஆனால் தமிழ்ச் சூழலில் உணவைக் குறித்துப் பேசுவது என்றாலே சமையல் குறிப்புகளைச் சொல்வதுதான். இது இன்று நேற்று உருவான வழக்கமல்ல. தொன்று தொட்டே இப்படித்தான். இணையத்தில் தொட்டதற்கெல்லாம் ‘லிங்க் ப்ளீஸ்’ என்று கேட்பதை நிகர்த்தது இது. உண்மையில், சிறந்த சமையல் என்பது குறிப்புகளைப் புறந்தள்ளி உருவாவதே ஆகும். கலை மனமும் மேம்பட்ட ரசனையும் தீராத ஆர்வமும் ஒருங்கிணையும்போதே ருசி மிகுந்த ஓர் உணவு உருவாகிறது. பொருள்களல்ல. அவற்றைக் கையாள்வோரின் திறமையே ருசியின் ஆதாரம்.
இந்த இதழில் வழக்கமான தொடர் பகுதிகளைத் தவிர, உணவு சார்ந்த கட்டுரைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. ஷாராஜின் சிறுகதையும் அது தொடர்பானதே. மொத்தமாகத் தொகுத்துப் படிக்கும் வாசகர்களுக்கு இது வசதியாக இருக்கும். உலகம் உண்ணும் விதத்தை ஒரு புத்தகத்தில் முழுமையாக வாசித்துத் தெரிந்துகொண்டாற் போன்ற அனுபவத்தைத் தர வேண்டும் என்று எண்ணியதால் இந்த ஏற்பாடு.
இதழ் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மெட்ராஸ் பேப்பர் மேலும் சிறப்பாக வெளிவர உங்கள் ஆலோசனைகள் மிகவும் முக்கியம்.
உலகம் எப்படி உண்கிறது?
அறுசுவை
சிந்தனை செய்
வரலாறு முக்கியம்
தொடரும்
10 – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (22.11.1839 – 15.7.1897 ) அறிமுகம் ‘தமிழ்க் கடவுள்’ என்று சொல்லப்படுபவர் முருகவேள். தமிழில் முருக பக்த இலக்கியமாகவும், செறிவு மிக்க இலக்கியமாகவும் விளங்கிய ஒரு நூல் என்றால் உடனே நமக்குச் சட்டென்று நினைவுக்கு வரும் ஒரு பெயர் உண்டு. அது திருப்புகழ்...
35 இடம் ஏஓவின் கர்ர்ரில் அலறியடித்துகொண்டு அவன் ஓடிவந்ததைப் பார்த்து இளித்த டிஓஎஸ், தினந்தோறும் நடக்கிற இந்தக் கூத்திற்கு இவ்வளவு நேரம்தான் ஒதுக்கமுடியும் என்பதைப்போல திரும்ப மேஜையில் கைகளை வைத்துக் கவிழ்ந்துகொண்டார். அடுத்து, இங்கிருந்து வரப்போகிற கொர்ர்ரை வேறு கேட்கவேண்டுமா என்பதைப் போல எழுந்து...
தொழிற்சாலைப் பெண்மணி ரேவதி அத்வைதி கல்லூரியில் மெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கப் போகும் போது அவரது வகுப்பில் அவர் மட்டும் ஒரே ஒரு மாணவி. நண்பர்கள், உறவினர்கள், “பெண்பிள்ளை ஏன் மெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கப் போகிறாய்?” என்று கேட்டார்கள். அது மட்டுமல்லாது ஒரு பேராசிரியரே, “நீ வொர்க் ஷாப்பில் வேலை...
36. தேர்தல் வெற்றி முதல் முறை சிறைவாசம் முடிந்து வெளியில் வந்ததும், ஜவஹர்லால் நேரு அகமதாபாத் சென்று சிறையிலிருந்த காந்திஜியைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காந்திஜியின் மீதான வழக்கு அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீதிமன்றம் சென்று பரபரப்பான அந்த வழக்கினைக் கவனித்தார். அந்த நீதிபதி ஒரு...