Home » Home 14-12-2022

வணக்கம்

இந்த இதழின் சிறப்புப் பகுதி, தங்கம் பற்றியது. சரித்திர காலம் தொடங்கி, சமகாலத் தங்க வேட்டைகள் வரை இதில் அலசப்படுகிறது. தங்கத்துக்குத் தொடர்பில்லாவிட்டாலும் ராசிக் கற்கள் பற்றிய ருசிகரமான கட்டுரை ஒன்றும் அப்பகுதியுடன் இணைவதன் பொருத்தம், அனைத்தையும் படித்து முடிக்கும்போது புரியும்.

மாணவர்களுக்கு செருப்பு தைத்துத் தரும் இலங்கையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவரைக் குறித்து ரும்மான் எழுதியுள்ள கட்டுரை மிக முக்கியமானது. ஆசிரியர்-மாணவர் உறவு இங்கே சட்டபூர்வமாகிக்கொண்டிருக்கும் காலம். பிள்ளைகளைத் திட்டக் கூடாது, அடிக்கக் கூடாது, கண்டிக்கக் கூடாது; வெறுமனே வகுப்புக்கு வந்து பாடம் எடுத்துவிட்டுப் போனால் போதும் என்பது கிட்டத்தட்ட மாநிலம் முழுதும் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த சௌகரியத்தில் சில மாணவர்கள் வரம்பு மீறி நடந்துகொள்ளும் செய்திகளும் அடிக்கடி வருகின்றன. கண்ணுக்குத் தெரியாமல் ஒரு தலைமுறையை நாசம் செய்துகொண்டிருக்கிறோம். பலனை அறுவடை செய்யும்போது பாவத்தின் கனம் புரியும்.

அது ஒரு புறம் இருக்க, மேற்படி இலங்கை ஆசிரியர் தனது அன்பான ஒரு கூடுதல் செயல்பாட்டின் மூலம் மொத்த மாணவர் சமுதாயத்தையும் தன்வயப்படுத்தியிருக்கிறார். இப்படி ஒரு ஆசிரியரிடம் நாமும் படிக்க மாட்டோமா என்று இலங்கை எங்கும் வாழும் மாணவர்கள் ஏங்குமளவுக்கு அவரது பெயரும் செயலும் பிரபலமாகியிருக்கிறது.

ஜி20 மாநாடு குறித்து பாண்டியராஜன் எழுதியுள்ளதும் சவூதி அரேபியாவில் நடைபெற்ற சீன-அரேபிய மாநாடு பற்றி நஸீமா எழுதியுள்ளதும் ஒன்றுடன் ஒன்று நேரடித் தொடர்பில்லாவிட்டாலும் உற்று நோக்கினால் சில பொருத்தங்களைக் கொண்டிருப்பதை உணர முடியும். தேசங்களிடையே மாறி வரும் உறவு நிலைகளைப் பொருளாதாரக் காரணங்களே தீர்மானிக்கின்றன. கைகுலுக்கல்களுக்குப் பின்னால் உள்ள கணக்குகள் புரிந்துவிடுமானால் நாம் வாழும் காலம் எத்தனை அபாயகரமானது என்பது விளங்கிவிடும்.

இந்த இதழின் மிகச் சிறந்த அம்சமாக பீட்டர் ஹாக்ஸின் ‘லயோலா என்ற பெரும்பாம்பின் கதை’ சிறுகதையை (ஆங்கில வழி மொழிபெயர்ப்பு: சுகுமாரன்) முன்வைக்கிறோம். படித்து முடிக்க ஐந்து நிமிடங்கள்கூட ஆகாது. ஆனால் ஒரு மாபெரும் அவல சரித்திரம் அக்கதைக்குள் புதைந்திருக்கிறது. இப்படிக்கூட எழுத முடியுமா என்று திகைக்கச் செய்யும் சிறுகதை. கதை குறித்த மாமல்லனின் சிறப்புக் கட்டுரையைக் கையோடு வாசியுங்கள். ஒரு கலைப்படைப்பை எப்படிப் புரிந்துகொள்வது, எப்படி ரசிப்பது என்று அது சொல்லித் தரும்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

அயல்

உலகம்

இருண்டு போன இரண்டு நாடுகள்

28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...

உலகம்

அமெரிக்காவின் கம்யூனிசத் தோழன்!

வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...

உலகம்

நைஜீரியா: ஒரு புதிய அடையாளப் புரட்சி

நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...

உலகம்

100 நாள் ஆட்சி: டிரம்ப் நாட் அவுட், நாடு நாக் அவுட்!

அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...

சிறப்புப் பகுதி: என் தங்கமே!

கதம்பம்

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

இந்தியா

விசா ரத்து சாம்பியன்!

பாகிஸ்தான் குடிமக்களுக்கு, இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்பட்டன. மருத்துவ விசாக்களுக்கு ஏப்ரல் 29 வரை...

நகைச்சுவை

லைசென்ஸ்! லைசென்ஸ்!

எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக்...

இந்தியா

பதிலடிக் காலம்

அண்மையில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு பிரதமர் மோடி தலைமையில் கூடி விவாதித்தது...

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

நீல வானம்

ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...

Read More
error: Content is protected !!