எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக் குடும்பங்களுக்குச் சரிவராது. கார் போன்ற ஃபோர் வீலருக்கும் சேர்த்து எடுப்பதே ட்ரைவிங் ஸ்கூல் கொடுக்கும் தள்ளுபடி விலைக்கு உகந்தது. அடுத்த ஒன்றரை...
வணக்கம்
மக்கள் புரட்சி என்றால் இப்படி இருக்க வேண்டும்.
சிறிதளவு வன்முறைகூட இல்லாமல், அகற்ற விரும்பிய அதிபரை அகற்றிக் காட்டியிருக்கிறார்கள் இலங்கை மக்கள். இனி வரப் போவது யார், என்ன செய்வார், எத்தகைய மாயம் நிகழும், அல்லது அப்படி ஏதாவது நிகழத்தான் செய்யுமா என்பதெல்லாம் பிறகு. இலங்கை மக்களின் இந்த அமைதிப் புரட்சி உலகுக்குச் சொல்லித் தரும் பாடம் இங்கே முக்கியமானது.
ஒருங்கிணைந்த நோக்கம், ஒருங்கிணைந்த செயல்பாடு இருக்குமானால் அமைதியான முறையிலேயே எந்த மலையையும் புரட்டலாம். எப்பேர்ப்பட்ட அராஜக ஆட்சியாளர்களையும் விரட்டி அடிக்கலாம்.
கவனியுங்கள். இது கட்சிகள் முன்னெடுத்த போராட்டமல்ல. இயக்கங்கள் நடத்திய புரட்சியல்ல. மக்கள் தீர்மானித்தது. தன்னியல்பாக அவர்களேதான் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்தார்கள். அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பிறகு அவர்களோடு தம்மை இணைத்துக் கொண்டார்கள். இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவும் பதவி விலகிய அதிகாரபூர்வச் செய்தி இனி வரும்.
இது நிகழ்வதற்கு முன் நடந்த மொத்தச் சம்பவங்களையும் இந்த இதழில் ஸஃபார் அஹ்மத் காட்சிப்படுத்தியிருக்கிறார். கொழும்பு காலி முகத் திடலில் இருந்து புறப்பட்ட மக்கள் கூட்டத்துடன் பயணம் செய்து ஒன்பதாம் தேதி புரட்சி வெற்றி கண்ட கணம் வரை உடன் இருந்து பார்த்து எழுதியிருக்கிறார்.
இலங்கையில் கோட்டபாய ராஜபக்சவுக்குப் பதவி போகிறதென்றால் இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் பதவி விலகியிருக்கிறார். பொருளாதார மந்த நிலையில் சிக்கித் தவிக்கும் தேசத்தை மீட்க முடியாமல் தடுமாறிய ஜான்சன், மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்ததன் பின்னணியில் வேறு பல காரணங்களும் உள்ளன. அவற்றை விளக்கும் ந. ஜெயரூபலிங்கத்தின் கட்டுரையும், ஹாங்காங் இணைப்பின் இருபத்தைந்தாவது ஆண்டுக் கொண்டாட்டத்தை நிகழ்த்திய கையோடு சீனா மீண்டும் தைவானுடன் மல்லுக்கட்ட ஆயத்தமாவதன் வரலாற்றுப் பின்னணியை விவரிக்கும் பூவராகன் கட்டுரையும் இந்த இதழில் முக்கியமானவை.
சிறப்புப் பகுதி, முன்பே அறிவித்தது போல ‘டிவி சீரியல்களும் தமிழ்ப் பெண்களும்’. சுவாரசியம் மிக்க மூன்று கட்டுரைகள் இப்பகுதியில் இடம் பெறுகின்றன. கூடவே சிவசங்கரி வசந்தின் நகைச்சுவைக் கட்டுரை ‘டம்மி பீஸ் மார்க்கெட்’.
சிறப்புப் பகுதி சீரியல்கள் என்பதால் ‘வரலாறு முக்கியம்’ பகுதியில் தாலியைத் தொட்டிருக்கிறார் முருகு தமிழ் அறிவன். தாலி இல்லாமல் தமிழர் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் தாலி இல்லாத சீரியல் ஏது?
கமெண்ட்ஸ் பகுதியில் இருந்த சில பிரச்னைகள் இப்போது முற்றிலும் தீர்க்கப்பட்டுவிட்டன. இனி நீங்கள் உங்கள் கருத்துகளை அந்தந்தக் கட்டுரையின் இறுதியிலேயே தெரிவிக்கலாம். மெட்ராஸ் பேப்பரின் ஒவ்வொரு இதழும் பெறுகிற கவனமும் வரவேற்பும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதழை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். அவர்களையும் சந்தா செலுத்தச் சொல்லுங்கள். இது உங்கள் பத்திரிகை.
சிறப்புப் பகுதி: தமிழ் சீரியல்களும் தமிழ்ப் பெண்களும்
உலகெலாம்
சிந்திக்கலாம்
தொடரும்
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...