இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
வணக்கம்
வீட்டுக்கடன், வாகனக் கடன், சொந்தக் கடன், கல்விக் கடன் என்பதெல்லாம் இன்று சாதாரண மனிதர்களின் அன்றாடங்களுள் ஒன்றாகிவிட்டன. கிடைக்கிறதே; பயன்படுத்திக்கொள்வோம் என்பது ஒன்று. தேவைக்குப் பயன்படுத்திக்கொள்வது ஒன்று. ஆனால் பெரும் பணக்காரர்களைப் போல ஏய்ப்பதற்கென்றே வங்கிக்கடன் கோரும் வசதி இன்னும் சாதாரண மனிதர்களுக்கு வரவில்லை; அதற்கு வாய்ப்பும் இல்லை.
இந்த இதழில் வங்கிக் கடன்கள் சார்ந்த பல முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அனைத்தும், கடன் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை. மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் பெறக்கூடிய லாபங்கள் பற்றி ஓரளவு நமக்குத் தெரியும். அதன் அனைத்து வாய்ப்புகளையும் விவரிக்கும் பாபுராஜின் கட்டுரை முதல், கடன் தரும் நிறுவனங்களை எப்படி / எதனைக் கொண்டு தேர்ந்தெடுப்பது என்று விளக்கும் பாண்டியராஜனின் கட்டுரை வரை ஒவ்வொன்றும் பொருட்படுத்தி கவனமுடன் வாசிக்க வேண்டியவை.
விடுதலைப் புலிகள் இருந்தவரை ஈழத் தமிழர்களைக் குறித்து இங்கே பேசிக்கொண்டாவது இருந்தார்கள். இன்று அத்தேசமே பொருளாதாரச் சீர்கேட்டுப் படுகுழியில் விழுந்து கிடக்கும் சூழலில் தமிழர்களின் இன்றைய நிலைமை குறித்துத் தெரிய வருவதே அரிதாகியுள்ளது. இலங்கையில் இன்றைக்கு உள்ள தமிழர் இயக்கங்கள், கட்சிகள், கூட்டமைப்புகள் என்னதான் செய்கின்றன? விளக்குகிறது ஸஃபார் அஹ்மதின் கட்டுரை.
பிரபல அமெரிக்கக் கல்வியாளர் பெஞ்சமின் புளூமின் கருத்தாக்கங்களை முன்வைத்து, நமது கல்வி அமைப்பின் மீது வலுவான வினாக்களை எழுப்பும் அனந்தசாய்ராமின் ‘சரியாகத்தான் படிக்கிறோமா?’ - இன்றைய ஆசிரியப் பெருமக்கள் பொருட்படுத்தி வாசிக்க வேண்டியதொரு கட்டுரை.
ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் காட்சி குறித்த நஸீமாவின் கட்டுரை, நெட்ஃப்ளிக்ஸின் வெற்றிக் கதை, வங்கி இயல் வளர்ந்த வரலாற்றை விவரிக்கும் அறிவனின் கட்டுரை, அரோமா பொன்னுசாமியின் நிறுவனம் பால்பொருள் உற்பத்தித் துறையில் ஆவினுக்கு அடுத்த இடத்தைப் பெற்றதன் சூட்சுமத்தை விவரிக்கும் ராஜ்ஶ்ரீ செல்வராஜின் கட்டுரை என இந்த இதழில் உங்கள் ரசனைக்கு விருந்தளிக்கும் பலதரப்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
இன்னொரு முக்கியமான விஷயம். மெட்ராஸ் பேப்பரின் முதல் இதழிலிருந்து தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கும் சில பகுதிகள் இந்த இதழுடன் நிறைவடைகின்றன. செந்தூரம் ஜெகதீஷின் ‘என் கனவை விட்டுச் செல்கிறேன்’, ராஜேஷ் பச்சையப்பனின் ‘தொண்டர் குலம்’, சுவாமி ஓம்காரின் ‘சித்’, முருகு தமிழ் அறிவனின் ‘வரலாறு முக்கியம்’, ராஜ்ஶ்ரீ செல்வராஜின் ‘வென்ற கதை’ - இவற்றுக்கெல்லாம் நீங்கள் அளித்த வரவேற்பு என்றும் மறக்க முடியாதது. இந்த இதழில் நிறைவடையும் தொடர்கள் மிக விரைவில் புத்தகங்களாகவும் வெளிவரவிருக்கின்றன. அது குறித்த தகவல்கள் விரைவில் வரும்.
அடுத்த தொடர்கள்?
அந்த அறிவிப்பு அடுத்த வாரம்.
சிறப்புப் பகுதி: கடன்படும் கலை
இங்கும் அங்கும்
28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...
வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...
நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...
தொழிலோடு உறவாடு
பத்வா தோலி என்ற சிறிய கிராமத்தை இந்திய வரைபடத்தில் கண்டுபிடிப்பது கஷ்டம். ஆனால் ஐஐடி தேர்வில் வெற்றிபெற்றவர்கள் நிரம்பிய பீகார் கிராமம் என்று...
தொடரும்
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...
ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...