Home » Home 08-03-23

வணக்கம்

இன்று மகளிர் தினம். இது மகளிர் சிறப்பிதழ். AI முதல் Me too வரை இன்றைய தலைமுறைப் பெண்கள் சம்பந்தப்பட்ட பல நுணுக்கமான பிரச்னைகள் இந்த இதழில் அலசப்பட்டிருக்கின்றன. அரசியலில் கோலோச்சத் தொடங்கியிருக்கும் ரோஜா முதல் மாத நாவல் துறையில் சாதித்த மகளிர் வரை பல்வேறு துறைகளைச் சார்ந்த பெண் சாதனையாளர்கள் இந்த இதழை அலங்கரிக்கிறார்கள்.

இந்த இதழில், இந்தப் பகுதியின் சிறப்பாசிரியராக இருந்து பணியாற்ற ‘லேடீஸ் ஸ்பெஷல்’ மாத இதழின் ஆசிரியர் கிரிஜா ராகவனைக் கேட்டுக்கொண்டோம். மறுக்காமல் ஒப்புக்கொண்டு, சிறப்பாகச் செய்துகொடுத்த அவருக்கு மெட்ராஸ் பேப்பரின் மனமார்ந்த நன்றி.

பத்திரிகை, தொலைக்காட்சி உலகில் சுமார் முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் செயலாற்றி வருபவர் அவர். நிராகரிப்புகள், அவமானங்கள், பொறாமைகள், கவிழ்ப்பு முயற்சிகள் என்று சந்திக்காத இடர்பாடுகளில்லை. எந்தப் பின்புலமும் இல்லாமல் தனது திறமை ஒன்றினால் மட்டுமே அனைத்தையும் வென்று தனது பத்திரிகையை நடத்தி வருகிறார். ஆண்டுதோறும் பல துறைச் சாதனையாளர்களுக்கு அவரது லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழ் சார்பில் அவர் வழங்கும் சக்தி விருதுகள் தமிழ்ச் சூழலில் மிகவும் பிரபலம். பெண்கள் முன்னேற்றத்தை மட்டுமே தன் வாழ்வின் அர்த்தமாகவும் இலக்காகவும் கொண்டு செயல்புரிபவர். இச்சிறப்பிதழை அவர் ஆசிரியராக இருந்து கொண்டு வருவதன் பொருத்தத்தை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

இதழைக் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களையும் சந்தாதாரராக்குங்கள். வாசகர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

சிறப்புப் பகுதி: பெண்ணுலகம்

ருசிகரம்

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

நீல வானம்

ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...

Read More
error: Content is protected !!