28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...
வணக்கம்
சரியாக ஒரு மாதத்தில் சென்னை புத்தகக்காட்சி ஆரம்பமாகிறது. சென்னையின் தனிப்பெரும் அடையாளங்களுள் ஒன்றான இத்திருவிழாவில் இந்த முறை நமது மெட்ராஸ் பேப்பர் பத்துக்கும் மேற்பட்ட புதிய புத்தகங்களை வெளியிடுகிறது. ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனம் இந்தப் புத்தகங்களைப் பதிப்பிக்கிறது. நமக்காக ‘மெட்ராஸ் பேப்பர்’ என்றொரு இம்ப்ரிண்டையே அவர்கள் புதிதாகத் தொடங்கியிருக்கிறார்கள்.
எண்ணிப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. BukPet எழுத்துப் பயிற்சி வகுப்புகளுக்கு வந்து, எழுதக் கற்றுக்கொண்டு மெட்ராஸ் பேப்பரில் கட்டுரைகள் எழுதி, எழுத்து என்னும் செயல்பாட்டுடன் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் நெருங்கிக் கலந்து, இன்று தனியாகப் புத்தகம் எழுதும் அளவுக்கு ஓர் அணி உருவாகியிருக்கிறது. இவர்கள் யாரும் இதற்கு முன் பெரிதாக எழுதியவர்களல்லர். பத்திரிகைகளில் பயிற்சி பெற்றவர்கள் அல்லர். உலகின் வெவ்வேறு மூலைகளில் வெவ்வேறு தொழில் செய்பவர்கள். வெவ்வேறு வயதினர். எழுத்தார்வம் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்தவர்கள்.
இந்தப் புதியவர்களின் புத்தகங்களே இந்த ஆண்டின் பேசுபொருளாக இருக்கப் போகிறது என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இவற்றுள் சில மெட்ராஸ் பேப்பரில் தொடர்களாக வந்தவை. நேரடியாக எழுதப்பட்ட புத்தகங்கள் சிலவற்றில் இருந்து மட்டும், சில பகுதிகளை இந்த இதழில் உங்கள் வாசிப்புக்குத் தந்திருக்கிறோம். மற்றவை, அடுத்த வாரம் வரும்.
இந்தப் புத்தகங்களின் வெளியீட்டை ஒரு கொண்டாட்டமாக்க மெட்ராஸ் பேப்பர் வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம். ஜனவரி 11, 2023 புதன் கிழமை அன்று மாலை சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நாம் கூடலாம். மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள்-வாசகர்கள் சந்திப்பாக அந்நிகழ்ச்சி அமைய விரும்புகிறோம். பல்வேறு நாடுகளில் வசிக்கும் நமது எழுத்தாளர்கள் இதற்காகவே அன்று சென்னை வருகிறார்கள்.
நிகழ்ச்சி நிரல் தயாரானதும் இங்கே அறிவிக்கிறோம். இது நம் குடும்ப விழா. கூடிக் களிப்போம்.
உலகம் யாவையும்
வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...
நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...
அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...
சிறப்புப் பகுதி: புத்தக முன்னோட்டம்
சிந்திக்கலாம்
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
தொடரும்
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...
ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...