Home » Home 05-10-2022

வணக்கம்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி, பெருவெற்றி கண்டிருக்கிறது. இது அந்நாவல் அடைந்த வெற்றிக்குச் சற்றும் குறைந்ததல்ல. எழுபதாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழர்களால் கொண்டாடப்படும் நாவல் இன்னொன்றில்லை. தமிழ்நாட்டில் வாசிப்பு என்னும் செயல்பாட்டை ஒரு கடமையாக - இன்னும் சொல்லப் போனால் மதமாக வார்த்தெடுத்த நாவல் அது.

கல்கி அதனை எழுதிய காலம் தொட்டே அது இலக்கியமில்லை என்றொரு எதிர்க்குரல் இருந்து வந்திருக்கிறது. இன்று வரை அதுவும் ஓயவில்லை. பொன்னியின் செல்வன் ஒரு வெகுஜன வாசிப்புப் பிரதிதான். அதில் சந்தேகமில்லை. ஆனால், ஏராளமானோரின் விருப்பத்துக்குரியதாக இருப்பது கொலைபாதகமும் அல்ல. இன்று நவீன இலக்கியம் வாசிக்க வந்து சேர்ந்திருக்கும் சிறுபான்மை சமூகத்தில் பெரும்பாலானவர்கள் அங்கே கிளம்பி வந்தவர்கள்தாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் இன்று வரை நமக்குக் கல்கியும் பொன்னியின் செல்வனும்தான் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கலாம்.

இந்த இதழின் சிறப்புப் பகுதியாகப் பொன்னியின் செல்வன் இடம் பெறுகிறது. திரைப்பட விமரிசனத்தைப் பெனாத்தல் சுரேஷ் எழுதியிருக்கிறார். கல்கி தமது நாவலுக்குள் காட்டியிருக்கும் (சிறிதளவு) சரித்திரத்துக்கு இந்தப் படம் எவ்வளவு நெருங்கி வருகிறது என்று சு. க்ருபாசங்கர் ஆராய்கிறார். கல்கி என்கிற ஆளுமையின் சில அறியாத பக்கங்களை எஸ். சந்திரமௌலியின் கட்டுரை தொட்டுக் காட்டுகிறது. இத்திரைப்படத்துக்கோ, பொன்னியின் செல்வன் நாவலுக்கோ சற்றும் சம்பந்தமில்லாமல் சோழர்களின் முழுமையான வரலாற்றை மிகச் சுருக்கமாக - அதே சமயம் எதுவும் விடுபடாமல் விவரித்திருக்கிறார் அறிவன்.

நாம் இங்கே ஒரு திரைப்படத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஈரானில் ஓர் இளம் பெண் சரியாக ஆடை அணியவில்லை என்று (பொய்யான) காரணம் சொல்லிக் கொலையே செய்துவிட்டது காவல் துறை. கொதித்துப் போன மக்கள் அங்கே அரசுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபடத் தொடங்கி, நாளுக்கு நாள் அங்கே நிலவரம் தீவிரமடைந்து வருகிறது. இது ஒரு புரட்சியாக வெடித்து ஆட்சி மாற்றம் வரை சென்றாலும் வியப்பதற்கில்லை. ஈரான் நிலவரம் பற்றி இந்த இதழில் ஸஃபார் அஹ்மத் எழுதியுள்ள கட்டுரை மிகவும் முக்கியமானது.

ஈரானில் ஹிஜாப் பிரச்னை என்றால், பிரிட்டனில் பவுண்ட் பிரச்னை. வரலாறு காணாத நாணய மதிப்புச் சரிவு ஏற்பட்டு, புதிய பிரதமர் விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறார் அங்கே. ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை, பிரிட்டன் நிலவரத்தைத் துல்லியமாக விளக்குகிறது.

நமது ரிசர்வ் வங்கி புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் டோக்கனைசேஷன் நடைமுறை குறித்து பிரபு பாலா எழுதியுள்ள கட்டுரை பல நுணுக்கமான விவரங்களை உள்ளடக்கியது. ஆன்லைன் பணப் பரிவர்த்தனை சர்வ சாதாரணமாகியிருக்கும் காலத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தப் புதிய உத்தியின் சாதக பாதகங்களை இதில் அறிந்துகொள்ள முடியும்.

தந்தையின் புகழ் வெளிச்சத்தைத் தன்மீது பட அனுமதிக்காமல் தனது சொந்த முயற்சியால் ஊட்டச் சத்துத் துறையில் கொடி நாட்டியிருக்கும் திவ்யா சத்யராஜின் கதையும், எந்தப் பின்புலமும் இன்றித் தனது சொந்தத் திறமையால் மட்டுமே முன்னேறி உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கும் கௌதம் அதானியின் வெற்றிக் கதையும் நாம் கற்கச் சில பாடங்களைத் தருவன.

மேற்சொன்னவை தவிரவும் இந்த இதழில் நீங்கள் வாசித்து ரசிக்க இன்னும் பல அம்சங்கள் உண்டு. மெட்ராஸ் பேப்பரின் ஒவ்வொரு இதழையும் உங்கள் ரசனையை கௌரவிக்கும் விதமாகவே தயாரிக்கிறோம். இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து, அவர்களையும் சந்தா செலுத்தச் சொல்லுங்கள்.

உலகப் பத்திரிகை ஆனாலும் இது உங்கள் பத்திரிகை.

சிறப்புப் பகுதி: பொன்னியின் செல்வன்

உள்ளே-வெளியே

நம் குரல்

மழையும் பிழையும்

மழை என்ற சொல்லைக் கேட்டதும், அது நம்மை நோக்கித்தான் வருகிறதென்று பாய்ந்து ஓடிப் பதுங்குகிறோம். தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் புயல் ஒன்று மேற்கு...

உலகம்

அமைதிக்கு யார் தடை?

நெத்தன்யாகுவைக் குறி வைத்து ஆளில்லாத வீட்டுக்கு ஏவுகணையை அனுப்பியது ஹிஸ்புல்லா. இவர்கள் திட்டம் போட்டுத் தோல்வியைத் தழுவ, திட்டமிடாமல் இஸ்ரேல்...

உலகம்

மாற்றிக் காட்டிய எக்ஸ்போ

மாற்றுத்திறனாளிகளுக்கான  ‘அக்சஸ் எபிலிட்டிஸ் எக்ஸ்போவின் 2024’ (Access Abilities Expo 2024) கண்காட்சி துபாயில் நடந்து முடிந்துள்ளது. எந்த இடமாக...

உலகம்

குறி வச்சா இரை விழணும்: இது கிம் ஜாங் உன் ஸ்டைல்

போர் நடப்பதென்னவோ ரஷ்யா – உக்ரைன், மத்தியக் கிழக்குப் பக்கம் தான். என்றாலும் மாதத்திற்கொரு முறையாவது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துவிடுபவர்...

உலகம்

கடலில் மூழ்கிக் காசு எடுக்கும் கன்னிகள்

‘ஜெஜு தீவு’ உலகம் சுற்றும் வாலிபர்களின் பக்கட் லிஸ்டில் கண்டிப்பாக இடம்பெறும் ஓரிடம். சொர்க்கபுரி போன்ற அதன் காலநிலையும், எரிமலைகள் ...

உலகம்

அமெரிக்க அதிபர் அம்மாவா? ஐயாவா?

அமெரிக்கத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில் முன் கூட்டியே வாக்களிப்பு தொடங்கிவிட்டிருக்கிறது. அஞ்சல் வழி வாக்களிப்பவர்களும் பதிய...

அறுசுவை

தொடரும்

aim தொடரும்

AIM IT – 28

ஏ.ஐயும் விக்கெட் கீப்பரும் ஒன்னு எண்ணற்ற ஏ.ஐ கருவிகள் வந்துவிட்டன. நாள்தோறும் பல புதிய கருவிகள் வந்த வண்ணம் உள்ளன. பார்த்தவுடன், “ஆ.. சூப்பர்…” என்று சில கருவிகள் வியக்கவைக்கின்றன. ஆனால் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், “நான் நெனச்ச மாதிரி இல்லயே…” என்று ஏமாற்றமளிக்கின்றன. இச்சூழலை எவ்வாறு கையாள்வது...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 123

123. ஊரும் சேரியும் ‘என்னடா இப்படிப் பண்ணிட்டிருக்கான் ஜெயகாந்தன்’ என்றான் ம வே சிவக்குமார். ‘என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்’ என்றான் இவன். ‘மைலாப்பூர் சேரில இருக்கற தேவடியாளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்வு குடுக்கப்போறேன்னு அந்த செண்ட்ரல் பேங்க் ஆஃப் இண்டியாகாரன்தான் அறிவில்லாம சொல்றான்னா...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 28

28. அதுவா? நாமா? கடவுளின் இருப்பையும் வாழ்வையும் தெரிந்துகொள்ள விரும்பிப் பிரதிகளின் வழியே மேற்கொண்ட பயணத்தில் எனக்கு இரண்டு விளைவுகள் வாய்த்தன. முதலாவது அவன் இல்லை ஆனால் அது இருக்கிறது என்கிற தெளிவு. இரண்டாவது, மதங்களின் அடியொற்றிச் சென்றால் அதைக் கண்டடைய முடியாது என்கிற இன்னொரு தெளிவு. உலகில்...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 28

28. வென்ற கதை ஒரு கல்லூரிச் செயல்திட்டமாகத் தொடங்கப்பட்டது. தன் முதல் அலுவலகத்தை கார் கேரேஜில் தொடங்கியது. இரண்டு மாணவர்களின் விளையாட்டுச் செய்கை என்று வர்ணிக்கப்பட்டது. ஏகப்பட்ட எதிர்ப்புகளைக் கண்டது. ஆனாலும் திடமாக, தீர்க்கமாகத் தனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக்கொண்டு வலுவாக வளர்ந்தது. இன்று உலகை...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 28

28. தேவைகள், விருப்பங்கள் இணையத்தில் எங்கு பார்த்தாலும் இரட்டைக் கட்சிகள்தான். இவர்கள் நீலம் என்றால் அவர்கள் சிவப்பு. இரண்டுக்கும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாது. இருதரப்பினரும் மற்றவரைக் கண்டபடி விமர்சித்துப் பேசுவார்கள், ‘எங்கள் கட்சிதான் சிறந்தது, அந்தக் கட்சியின் வலையில் சிக்கி...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 127

127. அண்ணன் தம்பி மோதல் ராஜாஜி தன்னை கருணையின்றித் தாக்குவதாக நேரு ஒரு முறை குறிப்பிட்ட சமயத்தில், “நாங்கள் நெருங்கிய நண்பர்களே! ஒருவரிடம் ஒருவர் அன்பு கொண்டவர்களே!” என்று பதில் கூறினார் ராஜாஜி. அது மட்டுமில்லை, “நேருவும் ராஜாஜியும் சண்டை போடலாமா? என்று பலர் கவலைப்படுகிறார்கள். ஆமாம்! நான்...

Read More
error: Content is protected !!