Home » Home 05-10-2022

வணக்கம்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி, பெருவெற்றி கண்டிருக்கிறது. இது அந்நாவல் அடைந்த வெற்றிக்குச் சற்றும் குறைந்ததல்ல. எழுபதாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழர்களால் கொண்டாடப்படும் நாவல் இன்னொன்றில்லை. தமிழ்நாட்டில் வாசிப்பு என்னும் செயல்பாட்டை ஒரு கடமையாக - இன்னும் சொல்லப் போனால் மதமாக வார்த்தெடுத்த நாவல் அது.

கல்கி அதனை எழுதிய காலம் தொட்டே அது இலக்கியமில்லை என்றொரு எதிர்க்குரல் இருந்து வந்திருக்கிறது. இன்று வரை அதுவும் ஓயவில்லை. பொன்னியின் செல்வன் ஒரு வெகுஜன வாசிப்புப் பிரதிதான். அதில் சந்தேகமில்லை. ஆனால், ஏராளமானோரின் விருப்பத்துக்குரியதாக இருப்பது கொலைபாதகமும் அல்ல. இன்று நவீன இலக்கியம் வாசிக்க வந்து சேர்ந்திருக்கும் சிறுபான்மை சமூகத்தில் பெரும்பாலானவர்கள் அங்கே கிளம்பி வந்தவர்கள்தாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் இன்று வரை நமக்குக் கல்கியும் பொன்னியின் செல்வனும்தான் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கலாம்.

இந்த இதழின் சிறப்புப் பகுதியாகப் பொன்னியின் செல்வன் இடம் பெறுகிறது. திரைப்பட விமரிசனத்தைப் பெனாத்தல் சுரேஷ் எழுதியிருக்கிறார். கல்கி தமது நாவலுக்குள் காட்டியிருக்கும் (சிறிதளவு) சரித்திரத்துக்கு இந்தப் படம் எவ்வளவு நெருங்கி வருகிறது என்று சு. க்ருபாசங்கர் ஆராய்கிறார். கல்கி என்கிற ஆளுமையின் சில அறியாத பக்கங்களை எஸ். சந்திரமௌலியின் கட்டுரை தொட்டுக் காட்டுகிறது. இத்திரைப்படத்துக்கோ, பொன்னியின் செல்வன் நாவலுக்கோ சற்றும் சம்பந்தமில்லாமல் சோழர்களின் முழுமையான வரலாற்றை மிகச் சுருக்கமாக - அதே சமயம் எதுவும் விடுபடாமல் விவரித்திருக்கிறார் அறிவன்.

நாம் இங்கே ஒரு திரைப்படத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஈரானில் ஓர் இளம் பெண் சரியாக ஆடை அணியவில்லை என்று (பொய்யான) காரணம் சொல்லிக் கொலையே செய்துவிட்டது காவல் துறை. கொதித்துப் போன மக்கள் அங்கே அரசுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபடத் தொடங்கி, நாளுக்கு நாள் அங்கே நிலவரம் தீவிரமடைந்து வருகிறது. இது ஒரு புரட்சியாக வெடித்து ஆட்சி மாற்றம் வரை சென்றாலும் வியப்பதற்கில்லை. ஈரான் நிலவரம் பற்றி இந்த இதழில் ஸஃபார் அஹ்மத் எழுதியுள்ள கட்டுரை மிகவும் முக்கியமானது.

ஈரானில் ஹிஜாப் பிரச்னை என்றால், பிரிட்டனில் பவுண்ட் பிரச்னை. வரலாறு காணாத நாணய மதிப்புச் சரிவு ஏற்பட்டு, புதிய பிரதமர் விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறார் அங்கே. ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை, பிரிட்டன் நிலவரத்தைத் துல்லியமாக விளக்குகிறது.

நமது ரிசர்வ் வங்கி புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் டோக்கனைசேஷன் நடைமுறை குறித்து பிரபு பாலா எழுதியுள்ள கட்டுரை பல நுணுக்கமான விவரங்களை உள்ளடக்கியது. ஆன்லைன் பணப் பரிவர்த்தனை சர்வ சாதாரணமாகியிருக்கும் காலத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தப் புதிய உத்தியின் சாதக பாதகங்களை இதில் அறிந்துகொள்ள முடியும்.

தந்தையின் புகழ் வெளிச்சத்தைத் தன்மீது பட அனுமதிக்காமல் தனது சொந்த முயற்சியால் ஊட்டச் சத்துத் துறையில் கொடி நாட்டியிருக்கும் திவ்யா சத்யராஜின் கதையும், எந்தப் பின்புலமும் இன்றித் தனது சொந்தத் திறமையால் மட்டுமே முன்னேறி உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கும் கௌதம் அதானியின் வெற்றிக் கதையும் நாம் கற்கச் சில பாடங்களைத் தருவன.

மேற்சொன்னவை தவிரவும் இந்த இதழில் நீங்கள் வாசித்து ரசிக்க இன்னும் பல அம்சங்கள் உண்டு. மெட்ராஸ் பேப்பரின் ஒவ்வொரு இதழையும் உங்கள் ரசனையை கௌரவிக்கும் விதமாகவே தயாரிக்கிறோம். இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து, அவர்களையும் சந்தா செலுத்தச் சொல்லுங்கள்.

உலகப் பத்திரிகை ஆனாலும் இது உங்கள் பத்திரிகை.

சிறப்புப் பகுதி: பொன்னியின் செல்வன்

உள்ளே-வெளியே

நம் குரல்

கலாசாரத்துக்குப் போதாத காலம்

இந்தியாவின் தனிச் சிறப்பு என்பது இங்குள்ள பல்வேறு விதமான பண்பாட்டு அடையாளங்களும் கலாசாரச் செழுமையும். அவை தமது தனித்தன்மையை விட்டுத் தராமல், அதே...

உலகம்

சிக்கல் சிங்காரவேலர்களின் கதை

பழைய குருடி கதவைத் திறக்க ஆரம்பித்திருக்கிறாள் என்று சில வாரங்களுக்கு முன்னர் ஆப்கன் விவகாரம் மீண்டும் சிக்கலாகிக்கொண்டிருப்பது குறித்து இங்கே...

உலகம்

மெக்ஸிகோ: தோண்டத் தோண்டக் குற்றம்

மெக்ஸிகோ என்பது ஒரு புதையல் பூமி. புதையல் என்றால் தங்கப் புதையல், பணக்கட்டுப் புதையல் அல்ல. தோண்டத்தோண் மனித உடல்கள் கிடைக்கும் பயங்கரப் பிராந்தியம்...

உலகம்

தள்ளாதே!

கலவரமூட்டும் சப்வே களேபரங்கள் மே 22 ஆம் தேதி காலை ஆறு மணிக்கு தன் பணியாளரின் செல்போனில் இருந்து வந்த அழைப்பை ஏற்றுப் பேசினார், மேத்தொ எக்ஸ்ப்ரஸ் கஃபே...

உலகம்

ஒரு போரும் பல ஒத்திகைகளும்

37 வயது பாவெல் – கட்டுப்போட்ட ஒரு கை கழுத்துடன் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறது. மற்றொரு கை இயந்திர துப்பாக்கியைப் பிடித்து ரஷ்ய வீரர்களைச்...

அறுசுவை

நுட்பம்

சாலையைப் பார்த்துக் காரை ஓட்டவும்

கடைக்குபபோனோம், இருப்பதைப் பார்த்து நமக்குப் பிடித்ததைத் தேர்வு செய்து வாங்கி, வீட்டுக்குக் கொண்டு வந்து சிலகாலம் கழித்துப் பிடிக்கவில்லை என்றால்...

தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில்- 28

தெய்வத்துக்கே வரும் சோதனை நமக்கெல்லாம் ஒரு சோதனை வந்தால் தெய்வத்திடம் போய் முறையிடலாம். அந்தத் தெய்வத்துக்கே சோதனை வந்தால்….? நமது உடலில் மரபணுப் பிழைகளைச் சரி செய்வதற்கென்றே சில மரபணுக்கள் உள்ளன என்று பார்த்தோம் அல்லவா? இவற்றினைப் பொதுவாகப் பழுதுபார்க்கும் மரபணுக்கள் எனலாம். சாதாரண மரபணுக்களில்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -28

28 சுவாமி விபுலானந்தர் (27.03.1892 – 19.07.1947) தமிழ் இசைக்கு உழைத்த தமிழ்ப் பெரியார் பலர் உண்டு. அவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதி, பாபநாசம் சிவன் போன்றவர்கள் தமிழிசைப் பாடல்கள் எழுதியதன் மூலம் தமிழிசையின் உள்ளடக்கத்துக்குப் பெருமை சேர்த்தார்கள். ஆபிரகாம் பண்டிதர் போன்ற வெகுசிலர் தமிழிசையின்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 54

54. கைதும் மிரட்டலும் இந்திய அரசியல் வரைபடத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு புள்ளிகள் பிரிட்டிஷ் வைஸ்ராயின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தன. ஜவஹர்லால் நேரு; சுபாஷ் சந்திரபோஸ் என்பவையே அந்தப் புள்ளிகளின் நாமகரணம்! அவர்கள் இருவரையும் வெகு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வைஸ்ராய்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 53

53 மிதப்பு டிரைவ்-இன் செல்ஃப் சர்வீசில் காபி வாங்கிக்கொண்டு வந்து, நடைவழியை ஒட்டி இருந்த மூன்று மேஜைகளில் காலியாக இருந்த நடு மேஜையில் உட்கார்ந்தான். மனம் பொங்கி வழிந்துகொண்டு இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், பெரியமனுஷ தோரணையுடன் அமைதியாக இருக்க முயன்றான். அது அவன் இயல்பே இல்லை. மனத்தின்...

Read More
error: Content is protected !!