மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் ஏன் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை? என்றால், மத்தியில் ஆளும் கட்சி மாநிலத்தில் ஆளாத பட்சத்தில் ஆளுநர் ஓர்...
வணக்கம்
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி, பெருவெற்றி கண்டிருக்கிறது. இது அந்நாவல் அடைந்த வெற்றிக்குச் சற்றும் குறைந்ததல்ல. எழுபதாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழர்களால் கொண்டாடப்படும் நாவல் இன்னொன்றில்லை. தமிழ்நாட்டில் வாசிப்பு என்னும் செயல்பாட்டை ஒரு கடமையாக - இன்னும் சொல்லப் போனால் மதமாக வார்த்தெடுத்த நாவல் அது.
கல்கி அதனை எழுதிய காலம் தொட்டே அது இலக்கியமில்லை என்றொரு எதிர்க்குரல் இருந்து வந்திருக்கிறது. இன்று வரை அதுவும் ஓயவில்லை. பொன்னியின் செல்வன் ஒரு வெகுஜன வாசிப்புப் பிரதிதான். அதில் சந்தேகமில்லை. ஆனால், ஏராளமானோரின் விருப்பத்துக்குரியதாக இருப்பது கொலைபாதகமும் அல்ல. இன்று நவீன இலக்கியம் வாசிக்க வந்து சேர்ந்திருக்கும் சிறுபான்மை சமூகத்தில் பெரும்பாலானவர்கள் அங்கே கிளம்பி வந்தவர்கள்தாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் இன்று வரை நமக்குக் கல்கியும் பொன்னியின் செல்வனும்தான் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கலாம்.
இந்த இதழின் சிறப்புப் பகுதியாகப் பொன்னியின் செல்வன் இடம் பெறுகிறது. திரைப்பட விமரிசனத்தைப் பெனாத்தல் சுரேஷ் எழுதியிருக்கிறார். கல்கி தமது நாவலுக்குள் காட்டியிருக்கும் (சிறிதளவு) சரித்திரத்துக்கு இந்தப் படம் எவ்வளவு நெருங்கி வருகிறது என்று சு. க்ருபாசங்கர் ஆராய்கிறார். கல்கி என்கிற ஆளுமையின் சில அறியாத பக்கங்களை எஸ். சந்திரமௌலியின் கட்டுரை தொட்டுக் காட்டுகிறது. இத்திரைப்படத்துக்கோ, பொன்னியின் செல்வன் நாவலுக்கோ சற்றும் சம்பந்தமில்லாமல் சோழர்களின் முழுமையான வரலாற்றை மிகச் சுருக்கமாக - அதே சமயம் எதுவும் விடுபடாமல் விவரித்திருக்கிறார் அறிவன்.
நாம் இங்கே ஒரு திரைப்படத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஈரானில் ஓர் இளம் பெண் சரியாக ஆடை அணியவில்லை என்று (பொய்யான) காரணம் சொல்லிக் கொலையே செய்துவிட்டது காவல் துறை. கொதித்துப் போன மக்கள் அங்கே அரசுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபடத் தொடங்கி, நாளுக்கு நாள் அங்கே நிலவரம் தீவிரமடைந்து வருகிறது. இது ஒரு புரட்சியாக வெடித்து ஆட்சி மாற்றம் வரை சென்றாலும் வியப்பதற்கில்லை. ஈரான் நிலவரம் பற்றி இந்த இதழில் ஸஃபார் அஹ்மத் எழுதியுள்ள கட்டுரை மிகவும் முக்கியமானது.
ஈரானில் ஹிஜாப் பிரச்னை என்றால், பிரிட்டனில் பவுண்ட் பிரச்னை. வரலாறு காணாத நாணய மதிப்புச் சரிவு ஏற்பட்டு, புதிய பிரதமர் விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறார் அங்கே. ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை, பிரிட்டன் நிலவரத்தைத் துல்லியமாக விளக்குகிறது.
நமது ரிசர்வ் வங்கி புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் டோக்கனைசேஷன் நடைமுறை குறித்து பிரபு பாலா எழுதியுள்ள கட்டுரை பல நுணுக்கமான விவரங்களை உள்ளடக்கியது. ஆன்லைன் பணப் பரிவர்த்தனை சர்வ சாதாரணமாகியிருக்கும் காலத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தப் புதிய உத்தியின் சாதக பாதகங்களை இதில் அறிந்துகொள்ள முடியும்.
தந்தையின் புகழ் வெளிச்சத்தைத் தன்மீது பட அனுமதிக்காமல் தனது சொந்த முயற்சியால் ஊட்டச் சத்துத் துறையில் கொடி நாட்டியிருக்கும் திவ்யா சத்யராஜின் கதையும், எந்தப் பின்புலமும் இன்றித் தனது சொந்தத் திறமையால் மட்டுமே முன்னேறி உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கும் கௌதம் அதானியின் வெற்றிக் கதையும் நாம் கற்கச் சில பாடங்களைத் தருவன.
மேற்சொன்னவை தவிரவும் இந்த இதழில் நீங்கள் வாசித்து ரசிக்க இன்னும் பல அம்சங்கள் உண்டு. மெட்ராஸ் பேப்பரின் ஒவ்வொரு இதழையும் உங்கள் ரசனையை கௌரவிக்கும் விதமாகவே தயாரிக்கிறோம். இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து, அவர்களையும் சந்தா செலுத்தச் சொல்லுங்கள்.
உலகப் பத்திரிகை ஆனாலும் இது உங்கள் பத்திரிகை.
சிறப்புப் பகுதி: பொன்னியின் செல்வன்
உள்ளே-வெளியே
துபாய் என்றதும் ஆயிரெத்தெட்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். பிரமாண்டமான கட்டடங்கள் கொண்ட ஷேக் ஜாயித் சாலையைக் கடக்காமல் துபாயை யாரும் தரிசித்திருக்க...
ஐக்கிய அமெரிக்கக் குடியரசு அதிபர் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதிபர் பைடன், இஸ்ரேல் காஸா போர் குறித்து எடுக்கும் முடிவுகள் அவரின்...
தேர்வுக்கூடத்தி்ல் டீச்சரிடம் பேப்பர்களை ஒப்படைக்கக் கடைசி ஐந்து நிமிடம் என்று மணி அடித்ததும் இன்னும் தீவிரமாக எழுதுவார்கள் சில மாணவர்கள். அப்படி...
ஒரு நிறைமாதக் கர்ப்பிணி. பிரசவ வலியும் வந்துவிட்டது. அவசர ஊர்தியையும் அழைத்தாயிற்று. ஆனால் அந்த வண்டி வரக் கூடிய அளவு சீரான பாதை இல்லை...
அறுசுவை
தொடரும்
டிஜிட்டல் அரஸ்ட் அக்டோபர் மாதத்தின் அதிகாலைப் பொழுது. ஃபரீதாபாத்தில் வானம் தூறிக் கொண்டிருந்தது. வழக்கத்தைவிடச் சற்று முன்னதாகவே எழுந்துவிட்டாள் அனிதா. இருபத்தி மூன்று வயதாகிறது அவளுக்கு. தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் வேலை. வேலை பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்ற சராசரி ஐ.டிக்காரர்களின்...
“ஒரு மில்லியன் பூக்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அந்தப் பெண்ணைக் கொண்டாடித் தீர்க்க வேண்டும்”. வாலண்டினா தெரஸ்கோவா என்கிற இளம் பெண், விண்ணுக்குப் போனதைக் கொண்டாடத் தயாராகியது நிகிதா குருசேவின் சோவியத். வான மைதானத்தில் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த பனிப்போரில் சோவியத் தேசம் மிகுந்த பெருமிதத்தோடு...
79. நேரு, இந்திரா கைது காந்திஜி தன் உரையில் ‘செய் அல்லது செத்துமடி’ என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டாலும், இறுதியாக அவர் தனக்கே உரிய கடிவாளத்தைப் போடத் தவறவில்லை. போராட்டத்தில் இறங்கலாம். ஆனால், அதில் வன்முறைகளுக்குத் துளியும் இடமில்லை! நம்முடைய போராட்டம் நூறு சதவிதம் அஹிம்சை வழியில்தான் நடக்க...
07 – போரால் மீண்டெழுந்த சோவியத் நாள்: 22 – ஜூன் – 1941. இடம்: கதின் கிராமம், பெலாரஸ் எட்டு வயது விக்டர் ஆண்ட்ரீவிச், வைக்கோல் களஞ்சியத்தில் அம்மாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். கிராமத்திலிருந்த அனைவரும் அங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டிருந்தது...
78 எதிர்கொள்ளல் 2 யார் கண்னிலும் படும் முன் போய்விடவேண்டும் என்று ஜீன்ஸ் குர்தா ஜோல்னா பையுடன் விறுவிறுவென லிஃப்டை பார்க்க நடந்தவன், ‘யாரை சார் பாக்கணும்.’ என்று வழிமறிக்கப்பட்டான். ‘இந்த டிபார்ட்மெண்ட்டுதான். எல்டிசி.’ ‘அப்படியா சார். நான் யாரோ வடநாட்டு...
1970-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவைப் பிரதமர் பதவிக்குக் கொண்டுவரக் கம்யூனிஸ்டுகள், தேசியவாதிகள், பவுத்தத் துறவிகள் என்ற பெரும் பட்டாளம் களமிறங்கி லிபரல்வாத ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்குச் சாவுமணி அடித்ததைக் கடந்த வாரம் பார்த்தோம். கம்யூனிஸச் சித்தாந்தப் பின்புலத்தை...