ஒரு வாரம் இடைவெளி கொடுத்து 110 பணயக் கைதிகளை மீட்டது இஸ்ரேல். பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும், வெளிநாட்டவரும். 240 பாலஸ்தீனியர்கள் விடுதலை...
வணக்கம்
தமிழ்நாட்டின் கோடைக்காலம் சிறப்பாகத் தொடங்கிவிட்டது. ஆரம்ப வாரங்களிலேயே வெளியே தலை காட்ட முடியாத அளவு வெயில் வாட்ட ஆரம்பித்திருக்கிறது. நாளுக்கு நாள் இது இன்னும் அதிகரிக்குமே தவிர, குறைய வாய்ப்பில்லை.
போதாக் குறைக்கு வீட்டில் முடங்கியிருக்கச் சொல்லி கொரோனாவும் குரல் கொடுக்கிறது. மாநிலமெங்கும் காய்ச்சல், சுகக் கேடுகள். மருத்துவமனைகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை கூடத் தொடங்கவே, முகக் கவசத்தின் முக்கியத்துவம் குறித்து இப்போது மீண்டும் அரசு பேசத் தொடங்கியிருக்கிறது. பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
நாம் முன்பே எழுதியதுதான். பாதுகாப்புணர்வு என்பது நமது இயல்பாக மாற வேண்டிய காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அலட்சியப்படுத்தினால் சிக்கல் நமக்குத்தான்.
நிற்க. இந்த இதழ் கோடை காலச் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. கோடைக்கு ஏற்ற உணவு முறையில் தொடங்கி, கோடை கால முகாம்கள் வரை பல பயனுள்ள கட்டுரைகளைத் தாங்கி வருகிறது. படித்து ரசித்து, உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.
இந்த இதழின் மிக முக்கியமான அம்சமாக இரண்டு கட்டுரைகளை முன்வைக்கிறோம். முதலாவது, ‘பிள்ளை பிடிக்கும்’ கல்வித் துறை. அடுத்தது, பின்லாந்தில் கல்வித் துறை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த கட்டுரை.
முதலாவது, தமிழ்நாட்டின் நிலைமையைச் சொல்கிறது. படிக்கும் மாணவர்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் ஏன் தேர்வெழுத வருவதில்லை என்று ஆராய்கிறது. இரண்டாவது கட்டுரை, பின்லாந்தில் கல்வி என்பது எவ்வாறு ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றப்படுகிறது என்று விளக்குகிறது. நாம் அறியாததல்ல. இங்கிருந்து அதிகாரிகள், கல்வியாளர்கள், மக்கள் பிரதிநிதிகளின் குழு இம்மாதிரி கல்வியிற் சிறந்த பிராந்தியங்களுக்குச் சென்று ஆராய்ந்தறிந்து திரும்புவதும் அறிக்கை தருவதும் எப்போதும் உள்ளதுதான். ஆனால் அவர்கள் கண்டறிந்து வந்தவற்றுள் எதுவெல்லாம் ஏற்கப்பட்டன, எதெல்லாம் நடைமுறைக்கு வந்தன என்று நமக்குத் தெரியப்படுத்தப்படுவதில்லை.
பள்ளிக்கு வருவோர் எண்ணிக்கை குறைகிறது, தேர்வெழுதுவோர் எண்ணிக்கை குறைகிறது, தேர்ச்சி விகிதம் குறைகிறது என்று செய்திகளில் பார்த்துக் கடந்துவிடுகிறோம். இது எத்தனை பெரிய சமூகச் சீர்கேடு என்பதைச் சிந்திப்பதேயில்லை. உண்மையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பிரச்னை இது. அரசு, கல்வித் துறை, பெற்றோர் என முத்தரப்பும் இணைந்து முனைப்புக் காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
பணக்காரர்கள் அதிகம் இல்லாததால் வீணான மாநிலம் ஏதுமில்லை. ஆனால் படிக்காதவர்கள் நிறைந்த மாநிலமாகிவிட்டால் மீள்வது சிரமம். விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
சிறப்புப் பகுதி: கோடை
திசையெலாம்
கடைகளில் உங்களுக்கு மிகவும் தேவையாக இருக்கும் அல்லது பிடித்தமான மிக அதிக விலையுள்ள பொருள், 80 சதவீதத் தள்ளுபடியில் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள...
ஒரு ஸ்டாக்கின் விலை மட்டும் 4.5 கோடி. கேட்கும் போதே தலைசுற்றுகிறதா? அது தான் பெர்க்சயர் ஹாத்வே A (Berkshire Hathway A). அதன் உருவாக்கத்திற்குச்...
டீ பார்ட்டி கட்சியின் பெயரே, பாஸ்டன் டீ பார்ட்டி என்ற சரித்திர மகத்துவம் வாய்ந்த அரசியல் போராட்டத்தின் பெயரைக் கொண்டது. அநியாயத்தை எதிர்த்து போரிட்ட...
நம்மைச் சுற்றி
சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை...
மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் ஏன் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை? என்றால், மத்தியில் ஆளும் கட்சி மாநிலத்தில் ஆளாத பட்சத்தில் ஆளுநர் ஓர்...
திருப்பதி. பெயரைக் கேட்டாலே ஏழுமலையானுக்கு இணையாக நம் அனைவரின் நினைவுக்கும் வருவது- லட்டு. பசுநெய், முந்திரி, ஏலக்காய், கல்கண்டு, பச்சைக் கற்பூரம்...
நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், விளையாட்டு – கேளிக்கை என்பதற்கு அப்பால் நமக்குச் சில செய்திகளை மௌனமாகத் தெரியப்படுத்துகின்றன...
ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, காங்லீபாக் மக்கள் புரட்சிகரக் கட்சி, புரட்சிகர மக்கள் முன்னணி என்கிற மூன்று அரசியல் கட்சிகளையும், இக்கட்சிகளின்...
காஸாவில் பொது மக்கள் என்று யாருமில்லை; அங்கிருக்கும் அனைவரும் தீவிரவாதிகள்தாம் என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஊர் உலகத்துக்காக...
தொடரும்
80. அத்தையுடன் மனக்கசப்பு இந்திரா காந்தி மற்றும், அவருடைய அத்தை விஜயலட்சுமி பண்டிட் இருவரது அரசியல் நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன், அவர்கள் இருவரையும் ஐக்கிய மாகாணத்தில் இமயமலைப் பகுதியில் உள்ள காளி என்ற கோடை வாசஸ்தலத்துக்குப் போய் வசிக்கும்படி அறிவுறுத்தியது. ஆனால், இருவரும்...
முறைப்படி 1975-ம் ஆண்டில் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். 1972ம் ஆண்டு மாட்சிமை பொருந்திய எலிசபெத் மகராணியை முற்றாய்ப் புறக்கணித்து ஜனநாயகக் குடியரசானதைக் காரணம் காட்டிப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மேலும் இரண்டு ஆண்டுகளாக பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடித்து...
08 – சோவியத்தின் மனமாற்றம் சுதந்திர சோவியத்திற்கு உருக்கொடுத்தார் லெனின். கம்யூனிசமும், சர்வாதிகாரத்துவமும் தான் மூலக்கல். அரசியல் முதற்கொண்டு அதன் எல்லாத் துறைகளின் கட்டமைப்புகளையும் உருவாக்கினார் லெனின். அவற்றை உறுதிப்படுத்தினார் பின்வந்த ஸ்டாலின். இவர்களைப் போன்ற வலிமையான ஆளுமைகள்...
இண்டர்வ்யூவிற்கு ஈ.எம்.ஐ அந்த ஈ-மெயிலுக்காகத் தான் காத்துக்கொண்டிருந்தான் அருண். இதோ, வந்துவிட்டது. அவன் ஆசைப்பட்டபடியே, கேம்பஸ் இண்டர்வ்யூவில் செலக்ட் ஆகியிருந்தான். அருண் பொறியியல் கல்லூரி மாணவன். இறுதி ஆண்டு இன்னும் சில வாரங்களில் முடியவிருக்கிறது. அகமதாபாத் நகரத்துக்கு வெளியே எங்கோவோர்...
ஆர்ப்பாட்டமில்லாமல் பணி செய்து கொண்டிருந்தது இந்திய விண்வெளி நிலையம். முதலாவது ராக்கெட் வெற்றிகரமாக வானுயர்ந்து விட்டது. அதாவது, ‘ஏவும் கலை’ கைவந்தாயிற்று. நாஸாவிலிருந்து கொண்டு வந்த ராக்கெட் அது. அடுத்து, விண் ஓடமொன்றைச் சொந்தமாகத் தயாரிக்க வேண்டும் என்ற இலக்குடன் எத்தனையோ தடைகளுக்கும் பொருளாதாரச்...