இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் காலமானார். அவர் கண்டுபிடித்த ஹிக்ஸ் போசான் என்ற துகள், காலத்தால் அழியாதது. கடவுளும் இயற்பியலும் இருக்கும்வரை இருக்கப்...
வணக்கம்
தமிழ்நாட்டின் கோடைக்காலம் சிறப்பாகத் தொடங்கிவிட்டது. ஆரம்ப வாரங்களிலேயே வெளியே தலை காட்ட முடியாத அளவு வெயில் வாட்ட ஆரம்பித்திருக்கிறது. நாளுக்கு நாள் இது இன்னும் அதிகரிக்குமே தவிர, குறைய வாய்ப்பில்லை.
போதாக் குறைக்கு வீட்டில் முடங்கியிருக்கச் சொல்லி கொரோனாவும் குரல் கொடுக்கிறது. மாநிலமெங்கும் காய்ச்சல், சுகக் கேடுகள். மருத்துவமனைகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை கூடத் தொடங்கவே, முகக் கவசத்தின் முக்கியத்துவம் குறித்து இப்போது மீண்டும் அரசு பேசத் தொடங்கியிருக்கிறது. பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
நாம் முன்பே எழுதியதுதான். பாதுகாப்புணர்வு என்பது நமது இயல்பாக மாற வேண்டிய காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அலட்சியப்படுத்தினால் சிக்கல் நமக்குத்தான்.
நிற்க. இந்த இதழ் கோடை காலச் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. கோடைக்கு ஏற்ற உணவு முறையில் தொடங்கி, கோடை கால முகாம்கள் வரை பல பயனுள்ள கட்டுரைகளைத் தாங்கி வருகிறது. படித்து ரசித்து, உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.
இந்த இதழின் மிக முக்கியமான அம்சமாக இரண்டு கட்டுரைகளை முன்வைக்கிறோம். முதலாவது, ‘பிள்ளை பிடிக்கும்’ கல்வித் துறை. அடுத்தது, பின்லாந்தில் கல்வித் துறை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த கட்டுரை.
முதலாவது, தமிழ்நாட்டின் நிலைமையைச் சொல்கிறது. படிக்கும் மாணவர்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் ஏன் தேர்வெழுத வருவதில்லை என்று ஆராய்கிறது. இரண்டாவது கட்டுரை, பின்லாந்தில் கல்வி என்பது எவ்வாறு ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றப்படுகிறது என்று விளக்குகிறது. நாம் அறியாததல்ல. இங்கிருந்து அதிகாரிகள், கல்வியாளர்கள், மக்கள் பிரதிநிதிகளின் குழு இம்மாதிரி கல்வியிற் சிறந்த பிராந்தியங்களுக்குச் சென்று ஆராய்ந்தறிந்து திரும்புவதும் அறிக்கை தருவதும் எப்போதும் உள்ளதுதான். ஆனால் அவர்கள் கண்டறிந்து வந்தவற்றுள் எதுவெல்லாம் ஏற்கப்பட்டன, எதெல்லாம் நடைமுறைக்கு வந்தன என்று நமக்குத் தெரியப்படுத்தப்படுவதில்லை.
பள்ளிக்கு வருவோர் எண்ணிக்கை குறைகிறது, தேர்வெழுதுவோர் எண்ணிக்கை குறைகிறது, தேர்ச்சி விகிதம் குறைகிறது என்று செய்திகளில் பார்த்துக் கடந்துவிடுகிறோம். இது எத்தனை பெரிய சமூகச் சீர்கேடு என்பதைச் சிந்திப்பதேயில்லை. உண்மையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பிரச்னை இது. அரசு, கல்வித் துறை, பெற்றோர் என முத்தரப்பும் இணைந்து முனைப்புக் காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
பணக்காரர்கள் அதிகம் இல்லாததால் வீணான மாநிலம் ஏதுமில்லை. ஆனால் படிக்காதவர்கள் நிறைந்த மாநிலமாகிவிட்டால் மீள்வது சிரமம். விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
சிறப்புப் பகுதி: கோடை
திசையெலாம்
பள்ளிக்கூடத்தில் வம்பு செய்வதற்கென்றே சில பிள்ளைகள் இருப்பார்கள். இதில் யாராவது தன்னை அடித்துவிட்டார்கள் என்று முறையிட்டால், “நீ என்ன செய்தாய்?” என்ற...
ரஷ்யா – உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளாக உச்சத்தில் இருக்கிறது. மேற்காசியப் பகுதியில் உருவாகிய போர், வளர்ந்துகொண்டே போகிறது. பொதுவாக, போர்க்...
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அப்பழமொழியின் தமிழ் மொழிபெயர்ப்பு “ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்படவில்லை”. பிரமாண்டமான எதையும் குறுகிய காலத்தில்...
நம்மைச் சுற்றி
குடிநீருக்குப் பிரச்னை இருக்கக் கூடாது. ரேஷன் பொருள்கள் தடையறக் கிடைக்க வேண்டும். மாநிலத்தில் எங்கிருந்தும் எந்த இடத்துக்கும் சென்று வர சாலைகள்...
மெட்ராஸ் பேப்பர் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அடுத்த புதன் கிழமை (ஏப்ரல் 17, 2024) வெளியாகவிருப்பது நமது நூறாவது இதழ். பாரம்பரியம் மிக்க பல...
நம்பர் ஒன் ஆக வருவது எப்போதுமே நல்லது என்றில்லை. இலங்கை சில காலமாகவே பலவித பலான உலகத் தரப்படுத்தல்களில் முதலிடத்தைப் பிடித்து மானம் போய் நின்றது...
கச்சத்தீவு மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் யாராவது இதைத் தொடுவார்கள். கச்சத் தீவை மீட்போம் என்பார்கள். அதோடு...
பிரதமர் திரும்பத் திரும்பத் தமிழ்நாட்டுக்கு வருகிறார். நாடு முழுதும் பல முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது நாலாபுறங்களிலும் இருந்து வழக்குப்...
கோடைவந்தால் புதிய புதிய குளிர்பானக் கடைகள் முளைத்துவிடும். ஆனல் உடலுக்கு நன்மை பயப்பவை இயற்கைப் பானங்களே. ஒரு இயற்கைப் பானத்திற்கு முன்னால் ஆயிரம்...
தொடரும்
1. நாற்பது வயதுக் குழந்தை எனக்கு ஏழு வயது நிறைவடைய மூன்று மாதங்கள் இருந்தபோது அவன் பிறந்தான். அன்றைக்கு ஜூலை மாதம் இரண்டாம் தேதி, 1979வது வருடம். பிறக்கும்போது அவனுக்கு நாற்பது வயதாக இருக்கும் என்று முதல் நாள் இரவு படுக்கப் போகும் முன்பு அப்பா சொன்னார். அந்தத் தகவல் தந்த திகைப்பில் சரியாகத் தூக்கம்...
பணப் பார்வை தொண்ணூறுகளில் பெரும் புகழ் பெற்ற காதல் திரைப்படம் அது. ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் ஒரு புயலைப்போல் அள்ளிக்கொண்டது, குறிப்பாக, இளைஞர்களை. அப்போது கல்லூரி மாணவர்களாக இருந்த நானும் என்னுடைய நண்பர்களும் அந்தப் படத்தைப் பலமுறை விரும்பிப் பார்த்தோம், அதில் இடம்பெற்ற காதல் வழியும்...
1. கேரித் தீவு மலேசியாவின் கிள்ளான் நகரிலிருந்தது அப்பள்ளி. தெங்கு பெண்டாஹாரா அஸ்மான் ஆங்கிலப்பள்ளி. அதுவரை அவன் வசித்தது கேரித் தீவில். அங்கே இருந்தோர் ஆடு, கோழிகளிடம் கூட தமிழில்தான் பேசிக் கொண்டிருந்தனர். இங்கோ அவனுக்குப் புரியாத ஏதேதோ மொழிகளைப் பேசும் மக்கள் இருந்தனர். ஒன்றாம் வகுப்பில்...
‘சிப்’புக்குள் முத்து மின்சாரத்திற்கு முன் – மின்சாரத்திற்குப் பின் என்று மனிதகுல வரலாறை இரண்டாகப் பிரிக்கலாம். மின்சாரம் தொடாத துறைகளே இல்லை. பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்கும். இதன் மூலம் வாழ்வை எளிதாக்கும். ஆனால் மிகச் சில...
1. உலக நாயகன் ஒவ்வொரு மனிதனுக்கும், ஆயிரம் கரங்கள் கொண்ட தனது பேருருவில், ஏதோவொன்றின் விரல் நுனியைப் பற்றிக்கொண்டு நடை பழகிக்கொடுக்கும் ஆதிபராசக்தியென உலகெங்கும் இன்று விரவியிருக்கிறது கூகுள். இம்மந்திரச் சொல்லை உச்சரிக்காத கணினியில்லை. இது நுழையாத நுட்பங்களில்லை. இதன் ஜீவநாடியைப் பற்றிக்கொண்டு...