இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
வணக்கம்
மெட்ராஸ் பேப்பர் தொடங்கிப் பதினொரு மாதங்கள் நிறைவடைந்து, பன்னிரண்டாவது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறோம். கண்மூடித் திறப்பதற்குள் ஓராண்டு நிறைந்துவிடும். ஒரு புறம் மகிழ்ச்சியாக உள்ளது. இன்னொருபுறம், நூற்றாண்டைத் தொட்டுக் கடந்த பத்திரிகைகளை எண்ணிப் பார்த்துப் பணிந்து நிற்கத் தோன்றுகிறது.
பத்திரிகை என்பது விளையாட்டல்ல. சீரான தரம், நீடித்த வாசகர் உறவு, படிப்படியான வளர்ச்சி இருந்தால் போதும் என்று எண்ணித்தான் தொடங்கினோம். கூடுதல் இலக்காக ஒன்றே ஒன்று சேர்ந்தது. தமிழில் புதிதாக எழுத வருவோருக்கு ஒரு பரந்துபட்ட களமாக இந்த இதழ் இருக்க வேண்டும் என்பதே அது. உண்மையில் நமது மகிழ்ச்சியின் ஆதாரப் புள்ளியாக அதுவே ஆகிப் போனது. மெட்ராஸ் பேப்பரில் நீங்கள் வாரம்தோறும் படிக்கும் எழுத்தாளர்களில் பெரும்பான்மையானவர்கள் எழுத்துக்குப் புதியவர்கள். எழுதப் பயிற்சி பெற்று எழுத வந்தவர்கள். தமது ஆர்வத்தாலும் அக்கறையினாலும் இடைவிடாத முயற்சியினாலும் இன்று தேர்ந்த எழுத்தாளர்கள் ஆகியிருக்கிறார்கள்.
பெரும்பாலும் கேளிக்கை சார்ந்த செய்திகளாலும் கட்டுரைகளாலும் துணுக்குகளாலும் தமிழ் வார இதழ்கள் ஒரே முகம் காட்டத் தொடங்கி, அதனாலேயே சரிய ஆரம்பித்த சமயத்தில் ஆழமான சர்வதேசப் பிரச்னைகளையும் சமூகப் பிரச்னைகளையும் தொட்டுப் பேசும் இதழாக மெட்ராஸ் பேப்பர் வெளிவரத் தொடங்கியது. உலகெங்கும் பரவி வசிக்கும் நமது எழுத்தாளர்களும் செய்தியாளர்களும் அந்தந்தப் பிராந்தியத்தின் மக்களை பாதிக்கும் பிரச்னைகளை விரிவாக விளக்கி எழுதினார்கள். தமிழர்கள், இந்தியர்கள், அயல்நாட்டு மக்கள் என்று ஒரு வசதிக்குச் சொல்லிக்கொள்கிறோம். உண்மையில் மனித குலத்தை பாதிக்கும் பிரச்னைகள் என்பவை எப்போதும் எங்கும் பொதுவானவையே அல்லவா?
ஓர் இணையப் பத்திரிகையை சந்தா செலுத்தி வாசிக்கும் வழக்கம் அநேகமாக யாருக்கும் இராது என்று இதனைத் தொடங்கும்போது பலபேர் எச்சரித்தார்கள். அச்சிதழ்களாகப் பல்லாண்டுகளாக வெளி வந்துகொண்டிருக்கும் சிலவற்றின் ஆன்லைன் எடிஷன்களுக்கே அயலகச் சந்தாதாரர்கள் குறைவு என்றும் சொன்னார்கள். இந்த உலகில் ஒரு குண்டூசியைக் கூட நீங்கள் விலையின்றிப் பெற இயலாது என்னும்போது ஒரு பத்திரிகையை அவ்வாறு வாசிக்கத் தருவது கூட்டம் சேர்க்க உதவுமே தவிர, கூர்ந்த வாசகர்களை உருவாக்காது என்று கருதினோம். அதனால்தான் மிகக் குறைந்ததொரு சந்தாவினை நமது இதழுக்கு நிர்ணயித்தோம்.
இதழ் பிடித்துப் போனால் ஒவ்வொரு வாசகரும் தம்மால் இயன்ற அளவுக்குப் புதிய சந்தாதாரர்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள் என்று மனப்பூர்வமாக நம்பினோம். அந்நம்பிக்கையே இன்றுவரை எங்களை இலக்கை நோக்கிச் செலுத்திக்கொண்டிருக்கிறது.
வாசகர்களாகிய உங்களிடம் நாங்கள் அன்போடு வேண்டுவது இதனைத்தான். இதழைக் குறித்த உங்கள் கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளுங்கள். அது நமது பத்திரிகை இன்னும் சிறப்பாக வெளிவர உதவும். உங்களுக்குப் பிடித்த இப்பத்திரிகையை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களையும் சந்தாதார்களாக்குங்கள். அது இந்தப் பத்திரிகை நீடித்து வெளிவர உதவும்.
கோப்பைப் புயல்
எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக்...
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் பணி மாறுதலுக்கும் தேசிய அளவில் அறியப்பட்டவர் ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா. முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சிப் பணியில்...
புயலுக்கு அப்பால்
28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...
வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...
நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...
அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...
நுட்ப பஜார்
தொடரும்
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...
ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...