மின்னும் கனகமலையைத் திருமகளாய்க் கண்டு தொழுது தகுதியானவருக்கு அதைத் தானமாகக் கொடுக்க உழைத்துத் தளர்ந்த பார்த்தன், அதை உலோகமாக மட்டுமே உணர்ந்து ஒரு கணப்பொழுதில் தானமாய்த் தந்த கர்ணன் ஆகியோரின் செயல்கள் பற்றிய மகாபாரதக்கதை ஒன்றுண்டு. தங்கத்தை அன்று முதல் இன்று வரை மற்றக் கனிமங்கள் அல்லது உலோகங்கள் போல வெறும் உலோகமாகப் பார்ப்பவர்கள் மிகச் சிலரே. தொட்டதெல்லாம் தங்கமாக வேண்டும் என்று வேண்டிய மைதாஸ் முதல் தங்கம் செய்யத் தெரிந்த சித்தர்கள் வரை பல கதைகளைப் படித்திருக்கிறோம். ஆனால், தங்க வேட்டை நடந்த அமெரிக்கச் சரித்திர நிகழ்வுகளும் அதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கு உலகெங்கிலும் இருந்து மக்கள் குடிபெயர்ந்ததும் பலருக்குப் புதியவை. இண்டியானா ஜோன்ஸ் திரைப்படக்கதை போல இருந்தாலும், இவை வரலாற்று உண்மைகள்.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment