கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில் மீண்டும் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.
கனடாவில் ஏப்ரல் 28ஆம் தேதி நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் லிபரல் கட்சிக்கும், கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையில் முதன்மையாகப் போட்டி நிலவியது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மித் சிங்கின் புதிய ஜனநாயகக் கட்சி உட்பட வேறு சில சிறிய கட்சிகளும் களத்தில் இருந்தன.
இந்தத் தேர்தலுக்கு ஆறு மாதங்கள் முன்புதான் லிபரல் கட்சியைச் சார்ந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மை கனடிய மக்களின் எதிர்ப்பால் ராஜினாமா செய்திருந்தார். கடந்த பத்தாண்டுகளாக ட்ரூடோ நடத்தி வந்த ஆட்சியில் விலைவாசி உயர்வு, அகதிகள் குடியேற்றம் அதிகரிப்பு, ரியல் எஸ்டேட் துறையில் தாறுமாறான விலையேற்றம் போன்றவற்றால் மக்கள் மிகுந்த கோபம் கொண்டிருந்தனர். இதனால் லிபரல் கட்சிக்குள்ளேயே ட்ரூடோ பதவி விலகக் கடும் அழுத்தம் ஏற்பட்டது.
Add Comment