எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக்...
வணக்கம்
தமிழ்நாட்டின் கோடைக்காலம் சிறப்பாகத் தொடங்கிவிட்டது. ஆரம்ப வாரங்களிலேயே வெளியே தலை காட்ட முடியாத அளவு வெயில் வாட்ட ஆரம்பித்திருக்கிறது. நாளுக்கு நாள் இது இன்னும் அதிகரிக்குமே தவிர, குறைய வாய்ப்பில்லை.
போதாக் குறைக்கு வீட்டில் முடங்கியிருக்கச் சொல்லி கொரோனாவும் குரல் கொடுக்கிறது. மாநிலமெங்கும் காய்ச்சல், சுகக் கேடுகள். மருத்துவமனைகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை கூடத் தொடங்கவே, முகக் கவசத்தின் முக்கியத்துவம் குறித்து இப்போது மீண்டும் அரசு பேசத் தொடங்கியிருக்கிறது. பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
நாம் முன்பே எழுதியதுதான். பாதுகாப்புணர்வு என்பது நமது இயல்பாக மாற வேண்டிய காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அலட்சியப்படுத்தினால் சிக்கல் நமக்குத்தான்.
நிற்க. இந்த இதழ் கோடை காலச் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. கோடைக்கு ஏற்ற உணவு முறையில் தொடங்கி, கோடை கால முகாம்கள் வரை பல பயனுள்ள கட்டுரைகளைத் தாங்கி வருகிறது. படித்து ரசித்து, உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.
இந்த இதழின் மிக முக்கியமான அம்சமாக இரண்டு கட்டுரைகளை முன்வைக்கிறோம். முதலாவது, ‘பிள்ளை பிடிக்கும்’ கல்வித் துறை. அடுத்தது, பின்லாந்தில் கல்வித் துறை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த கட்டுரை.
முதலாவது, தமிழ்நாட்டின் நிலைமையைச் சொல்கிறது. படிக்கும் மாணவர்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் ஏன் தேர்வெழுத வருவதில்லை என்று ஆராய்கிறது. இரண்டாவது கட்டுரை, பின்லாந்தில் கல்வி என்பது எவ்வாறு ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றப்படுகிறது என்று விளக்குகிறது. நாம் அறியாததல்ல. இங்கிருந்து அதிகாரிகள், கல்வியாளர்கள், மக்கள் பிரதிநிதிகளின் குழு இம்மாதிரி கல்வியிற் சிறந்த பிராந்தியங்களுக்குச் சென்று ஆராய்ந்தறிந்து திரும்புவதும் அறிக்கை தருவதும் எப்போதும் உள்ளதுதான். ஆனால் அவர்கள் கண்டறிந்து வந்தவற்றுள் எதுவெல்லாம் ஏற்கப்பட்டன, எதெல்லாம் நடைமுறைக்கு வந்தன என்று நமக்குத் தெரியப்படுத்தப்படுவதில்லை.
பள்ளிக்கு வருவோர் எண்ணிக்கை குறைகிறது, தேர்வெழுதுவோர் எண்ணிக்கை குறைகிறது, தேர்ச்சி விகிதம் குறைகிறது என்று செய்திகளில் பார்த்துக் கடந்துவிடுகிறோம். இது எத்தனை பெரிய சமூகச் சீர்கேடு என்பதைச் சிந்திப்பதேயில்லை. உண்மையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய பிரச்னை இது. அரசு, கல்வித் துறை, பெற்றோர் என முத்தரப்பும் இணைந்து முனைப்புக் காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
பணக்காரர்கள் அதிகம் இல்லாததால் வீணான மாநிலம் ஏதுமில்லை. ஆனால் படிக்காதவர்கள் நிறைந்த மாநிலமாகிவிட்டால் மீள்வது சிரமம். விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
சிறப்புப் பகுதி: கோடை
திசையெலாம்
28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...
வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...
நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...
அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...
நம்மைச் சுற்றி
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்தவன் சம்பன். மிகவும் குறும்புத்தனமானவன். தந்தையைப் போலத்தானே பிள்ளையும் இருப்பான். ஊரில் அனைவரும்...
பத்வா தோலி என்ற சிறிய கிராமத்தை இந்திய வரைபடத்தில் கண்டுபிடிப்பது கஷ்டம். ஆனால் ஐஐடி தேர்வில் வெற்றிபெற்றவர்கள் நிரம்பிய பீகார் கிராமம் என்று...
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
நாளிதழ்கள், வார இதழ்களில் சிறுவர்களுக்கென வரும் பகுதிகளில் நீங்கள் இதைப் பார்த்திருக்கலாம். வழிதவறிய ஆட்டுக்குட்டியை வீட்டிற்குக்கொண்டு சேர்க்கவும்...
தொடரும்
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...
ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...