“நாங்கள் மீண்டும் உக்ரைனுடன் இணைவோம் என்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லை. எங்களைக் காப்பாற்ற இங்கு யாரும் வருவதில்லை” என்கிறார் கெர்சோன்...
வணக்கம்
கோவிட் பரவல் அதிகரித்திருப்பதாகச் செய்தி வருகிறது. மீண்டும் முகக் கவசம் அணியச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அதுவல்லாமல் இன்னொரு புதிய ரக வைரஸ் தாக்குதலும் ஆரம்பமாகியிருக்கிறது. யாரைக் கேட்டாலும் இருமல், தலைவலி, காய்ச்சல். மருந்துக் கடைகளில் கூட்டம் அதிகரித்திருப்பதைக் காண முடிகிறது.
உலகெங்கும் கிருமிகளால் மனிதர்கள் அவதியுறுவதும் மீள்வதும் உலகு தோன்றிய நாளாக உள்ளதுதான். நம் தலைமுறை அதற்கு இன்னொரு சாட்சியாகிறது, அவ்வளவுதான். 2020ம் ஆண்டு பேயாட்டம் ஆடத் தொடங்கிய கோவிட் 19, அடுத்த இரண்டாண்டுகளில் அழித்துச் சென்றவை அநேகம். தொழில் முடங்கியது. வர்த்தகம் விழுந்தது. பணப் புழக்கம் குறைந்தது. பலருக்கு வேலை இல்லாமல் போனது. இழுத்து மூடப்பட்ட பல நிறுவனங்கள் இன்றுவரை திறக்கப்படவேயில்லை. பெரிய நிறுவனங்களில் கட்டாய ஆட்குறைப்பு செய்தார்கள். வேலையில் இருந்தவர்கள் எப்படியாவது அதைத் தக்கவைத்துக்கொள்ள வீட்டிலிருந்தே இரவு பகலாகப் பாடுபட்டார்கள். இங்கே அங்கே என்றில்லை. எங்கும் இதுதான். எல்லா இடங்களிலும் இதுதான். சென்ற வருடம்தான் ஓரளவு அதிலிருந்து மீண்டோம். மீண்டும் இப்போது அதே அச்சுறுத்தல்.
எச்சரிக்கையாக இருங்கள் என்று பொதுவாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். அதற்கு ஒரு பொருளே இல்லாமல் ஆகிவிட்டது. உண்மையில், எச்சரிக்கை உணர்வு என்பது இனி நம் இயல்பாக மாறவேண்டும் போல இருக்கிறது. திரும்பத் திரும்ப முகக் கவசம், திரும்பத் திரும்ப சோப்புப் போட்டுக் கை கழுவுதல், திரும்பத் திரும்ப சானிடைசர். கூட்டம் சேரும் இடத்திலிருந்து விலகி இருத்தல்.
திரையரங்குக்குப் போகாமல் இருக்கலாம். ஆனால் பேருந்து, ரயில் பயணங்களை அன்றாடம் தவிர்க்க முடியுமா? டீக்கடையில் நின்று அரட்டை அடிக்காமல் இருக்கலாம். அலுவலகத்தில் சக ஊழியரிடம் பேசாதிருக்க முடியுமா?
எனவே நாம் செய்யக்கூடியது, தவிர்க்க முடியாதவற்றை மட்டும் செய்வது எனக் கொள்வதுதான். மேற்படி எச்சரிக்கை உணர்வை அந்தத் தருணங்களில் கைக்கொள்ளலாம். இப்போது வந்திருப்பது அல்லது இனி வரப் போவது பழைய கோவிட் அளவுக்கு வீரியம் உள்ளதாக இராது என்று நம்புவது பேதைமை. அப்படி இருக்கக் கூடாது என்று விரும்பலாமே தவிர, அலட்சியப்படுத்துவது ஆபத்தில்தான் முடியும்.
அலுவலகங்கள், பள்ளி-கல்லூரி நிர்வாகங்கள் முகக் கவசத்தை இப்போதே வலியுறுத்தத் தொடங்குவது நல்லது. ஒன்றும் இல்லாவிட்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் ஒன்றும் இருக்காது என்று நாமாக நினைத்துக்கொள்வது சரியல்ல. மருத்துவமனைகளில் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை பெருகத் தொடங்கினால்தான் அரசுத் தரப்பிலிருந்து எச்சரிக்கை வரும். அதைப் பெருகவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டாமே என்பதால்தான் இந்த முன்னறிவிப்பு.
பாதுகாப்பாக இருப்போம். எச்சரிக்கையாக இருப்போம்.
உலகைச் சுற்றி
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்குக் கடந்தசில வாரங்களாய் ஒழுங்காய்த் தூக்கம் இருக்கவில்லை. டென்ஷனில் நகம் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார்கள். காரணம்...
திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரி கிளைவ்ஸ் விடுதியில் மாணவர்கள் தடியடி பட்டதை தமிழ்நாட்டில் யாரும் இன்னமும் மறந்திருக்க மாட்டார்கள். 25 வருடங்கள் முன்...
நம்மைச் சுற்றி
இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம்...
நாளொன்றுக்கு ஆயிரத்து இருநூறு சொச்சம் விமானங்கள் விண்ணில் ஏறும் / தரை இறங்கும். கொஞ்சம் மெனக்கெட்டுக் கணக்கு பார்த்தால், நிமிடத்திற்கு ஒரு விமானம்...
தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...
குடிநீருக்குப் பிரச்னை இருக்கக் கூடாது. ரேஷன் பொருள்கள் தடையறக் கிடைக்க வேண்டும். மாநிலத்தில் எங்கிருந்தும் எந்த இடத்துக்கும் சென்று வர சாலைகள்...
இனிப்பில்லாத விருந்தில், சம்பிரதாயத்துக்காக இலையின் ஓரத்தில் வைக்கப்படுகிற சர்க்கரைபோல, பல தேர்தல்களாகத் தேர்தல் அறிக்கை வெளியீடு என்பது ஏதோ...
மேலும் ரசிக்க
மிக உயரமான ஒரு மலையைச் சுற்றிச் சாதாரணமாக எவ்வளவு குப்பை சேரும்? இலங்கையின் மத்தியில் அமைந்திருக்கிறது ‘சிவனொளிபாத மலை’. அதன் அடிவாரத்திலும்...
அரக்குப் பள்ளத்தாக்கு. தமிழ் நாட்டிற்கு ஏற்காடு, ஏலகிரி போல, விசாகப்பட்டினத்துக்கு அருகில் இருக்கும் குட்டி மலைப்பகுதி இது. விசாகப்பட்டினத்திலிருந்து...
பாபிலோனின் பழைய தொங்கும் தோட்டங்கள், சுல்தான் நெபுகாத் நெசர் வகையறாக்களைச் சிறிது நினைவுகூர்ந்து, நகர்த்தி வையுங்கள். உலகம் உருண்டை. காலம் உருண்டை...
கோடைவந்தால் புதிய புதிய குளிர்பானக் கடைகள் முளைத்துவிடும். ஆனல் உடலுக்கு நன்மை பயப்பவை இயற்கைப் பானங்களே. ஒரு இயற்கைப் பானத்திற்கு முன்னால் ஆயிரம்...
தொடரும்
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையின் முக்கிய அங்கம் இவர். அவருக்கொரு செல்வமகள். தன் தந்தை ரோனன் சொல்லும் கதைகளைக் கேட்டால் தான் அச்சிறுகுழந்தைக்குத் தூக்கம் வரும். வழமை போலவே...
3. இருவர் ஒரே வருடத்தில் பிறந்திருந்தாலும், அந்த இருவருக்கும் பிறந்த தேசங்கள் வேறு. தாய்மொழி வேறு. வளர்க்கப்பட்ட விதம் வேறு. குணங்கள் வேறு. ஆனால் இருவருக்குள்ளும் சிறு வயதிலிருந்து கணினி மீதான ஆர்வமும், புலமையும், அதில் ஏதேனும் பெரிதாக சாதிக்கவேண்டும் என்ற வேட்கையும், என்ன செய்யப்போகிறோம் என்ற...
3. சம்பள ஆராய்ச்சி நமக்குப் பணத்தைக் கொண்டுவரும் குழாய்களை வருவாய் மூலங்கள் அல்லது வழிகள் (Income Sources/Channels) என்கிறார்கள். இதை நாம் எளிமையாகப் ‘பணவழிகள்’ என்று சொல்வோம். எடுத்துக்காட்டாக, ஒருவர் அலுவலகம் சென்று வேலை பார்த்துச் சம்பளம் பெறுகிறார், இன்னொருவர் கடை வைத்துப் பொருட்களை...
பள்ளிக்கூடம் போகாமலே… முத்துவின் அம்மாவுக்குத் தையல் கடை வேலை, வீட்டு வேலை எல்லாம் போக வேறொரு சிறப்பு வேலை இருந்தது. பிள்ளைகளைத் தேடும் வேலை. முத்துவையும் அவர் தங்கையையும் அக்கம்பக்கத்தில் உள்ளோர் தூக்கிக் கொண்டுபோய் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இருவருமே கொஞ்சம் வெளிர்நிறத் தோலுடையவர்கள்...
98 ஹீரோ ஓரிரு இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களில் தட்டுப்பட்ட, தன் புத்தக வெளியீட்டு விழாவில் பார்த்த முகத்தை பஸ்ஸில் பார்த்தது கொஞ்சம் பரபரப்பாக்கிவிட்டது. பெண்களை முன்பின் பார்க்காதவனோ பழகாதவனோ இல்லை என்றாலும் இந்தப் பெண் சற்றே வெட்கத்துடன் சிரித்ததைப்போலத் தோன்றியது வேறு ஆர்வத்தைக் கூட்டிவிட்டது...
3. இரு வேறு ஃபாரினர்ஸ் இன்னும் ஓர் இடமாற்றம். வேறொரு கிராமம். மற்றுமொரு பள்ளி. இப்போது நான் வளர்ந்த சிறுவன். நான்காம் வகுப்புக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். கேளம்பாக்கம் பஞ்சாயத்து ஒன்றியத் தொடக்கப்பள்ளி. இந்தத் தொடக்கப்பள்ளிக் கட்டடம் இருக்கும் அதே வளாகத்துக்குள்ளேயே அப்பா மாற்றலாகி வந்திருக்கும்...