தேசிய ஊடகங்கள் கடந்த சில தினங்களாக உச்சரிக்கும் ஒரே பெயர் பிரஜ்வல் ரேவண்ணா. காரணம் அவர் செய்த சகிக்கவியலாத, மன்னிக்கவே முடியாத பெரும் குற்றம். ஒருவர்...
வணக்கம்
இன்று மகளிர் தினம். இது மகளிர் சிறப்பிதழ். AI முதல் Me too வரை இன்றைய தலைமுறைப் பெண்கள் சம்பந்தப்பட்ட பல நுணுக்கமான பிரச்னைகள் இந்த இதழில் அலசப்பட்டிருக்கின்றன. அரசியலில் கோலோச்சத் தொடங்கியிருக்கும் ரோஜா முதல் மாத நாவல் துறையில் சாதித்த மகளிர் வரை பல்வேறு துறைகளைச் சார்ந்த பெண் சாதனையாளர்கள் இந்த இதழை அலங்கரிக்கிறார்கள்.
இந்த இதழில், இந்தப் பகுதியின் சிறப்பாசிரியராக இருந்து பணியாற்ற ‘லேடீஸ் ஸ்பெஷல்’ மாத இதழின் ஆசிரியர் கிரிஜா ராகவனைக் கேட்டுக்கொண்டோம். மறுக்காமல் ஒப்புக்கொண்டு, சிறப்பாகச் செய்துகொடுத்த அவருக்கு மெட்ராஸ் பேப்பரின் மனமார்ந்த நன்றி.
பத்திரிகை, தொலைக்காட்சி உலகில் சுமார் முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் செயலாற்றி வருபவர் அவர். நிராகரிப்புகள், அவமானங்கள், பொறாமைகள், கவிழ்ப்பு முயற்சிகள் என்று சந்திக்காத இடர்பாடுகளில்லை. எந்தப் பின்புலமும் இல்லாமல் தனது திறமை ஒன்றினால் மட்டுமே அனைத்தையும் வென்று தனது பத்திரிகையை நடத்தி வருகிறார். ஆண்டுதோறும் பல துறைச் சாதனையாளர்களுக்கு அவரது லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழ் சார்பில் அவர் வழங்கும் சக்தி விருதுகள் தமிழ்ச் சூழலில் மிகவும் பிரபலம். பெண்கள் முன்னேற்றத்தை மட்டுமே தன் வாழ்வின் அர்த்தமாகவும் இலக்காகவும் கொண்டு செயல்புரிபவர். இச்சிறப்பிதழை அவர் ஆசிரியராக இருந்து கொண்டு வருவதன் பொருத்தத்தை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இதழைக் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களையும் சந்தாதாரராக்குங்கள். வாசகர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.
சிறப்புப் பகுதி: பெண்ணுலகம்
ருசிகரம்
தொடரும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்! தகவல் தொழில்நுட்பத் துறையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல், ‘ஃபார்ம் ஃபேக்டர்.’ வடிவக் காரணி. தொழில்நுட்பம் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவிற்கு மாறும்போது அதன் பயன்பாடு பன்மடங்கு அதிகரிக்கிறது. தொடக்கத்தில் நாமெல்லாம் டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர்களைப்...
கலகக்காரனின் இறைப்பணிகள் டத்தோ ஹம்சா பள்ளி / இடைநிலை வகுப்பில் கணிதப் பாடவேளை. ஆசிரியர் வகுப்பறையின் உள்ளே நுழைந்தார். கணிதம் என்று பெரிய பட்டையான எழுத்துகளால் கரும்பலகை நிரம்பியிருந்தது. சில நொடிகள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார் கணித ஆசிரியர் சுப்பிரமணியம். “யார் இதை எழுதியது?” என்று மாணவர்களைப்...
99 ஆமாவா பஸ்ஸின் பின்புறப் படிக்கட்டில் இவன் நின்றிருக்க, அதற்குப் பின்னால் இருக்கிற நீண்ட சீட்டில் இரண்டாவதாக அமர்ந்திருந்த நிமா சொன்னாள், ‘என் வேடிக்கையை மறைக்கறீங்க’ என்று. இவனுக்கு முதலில் அவள் என்ன சொல்கிறாள் என்றே புரியவில்லை. இவன் கையைப் பின்னால் இழுத்துவிட்டப் பிறகுதான், எதிரில்...
4. பாப்பார சாமி ராஜா அண்ணாமலைபுரத்தில் அவர் வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்பட நேர்ந்தது. அதற்கு முன்பாக ராஜா அண்ணாமலைபுரத்தைத் தேடிக் கண்டுபிடிக்கவே சிரமப்பட வேண்டியிருந்தது. குரோம்பேட்டைக்குக் குடிமாறி வந்து அதிக நாள் ஆகியிராததால் சென்னை பழகியிருக்கவில்லை. தலைமை ஆசிரியர், பதவி உயர்வில்...
103. பாபர் மசூதி ஆரம்ப கட்டத்தில் ராஜாஜிதான் இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதி பதவிக்குத் தகுதியானவர் என நேரு, படேல் இருவரும் எண்ணினாலும், நேருவின் எதேச்சாதிகாரத்துக்கு ஒரு முட்டுக்கட்டை தேவை என நினைத்த படேல், காங்கிரஸ் கட்சிக்குளேயே பலர் ராஜாஜியை ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை...
4. கும்பளம் முன்பெல்லாம் யாராவது தன்னுடைய வேலையைப்பற்றி அல்லது தொழிலைப்பற்றிப் பேசினால், ‘அது சரி, மாசாமாசம் சம்பளம் எவ்வளவு வருது? கிம்பளம் ஏதும் உண்டா?’ என்று கேட்பார்கள். சம்பளம் புரிகிறது. அதென்ன கிம்பளம்? நாம் எல்லாரும் வண்டி, கிண்டி, கலாட்டா, கிலாட்டா, வம்பு, கிம்பு, மழை, கிழை...