Home » home-22-002-23

வணக்கம்

தை மாதம்தான் தொடக்கம். மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி வரை மாநிலமெங்கும் திருவிழாக்கள்தாம். பொதுவாக நாம் திருவிழாக்களை மதத்துடனும் வழிபாட்டுடனும் இணைப்பவர்களானாலும் அடிப்படையில் அவை நம் வாழ்வோடு சம்பந்தப்பட்டவைதாம். விளைச்சல்-அறுவடைக் காலத்தைத் தொடர்ந்துதான் திருவிழாக்கள் வருகின்றன. பெரிதாக அவநம்பிக்கைகள் முட்டி மோதாத காலம் வரை அது நீள்கிறது. பிறகு பிழைப்பைப் பார்க்கிறோம். அன்றாடங்களில் கரைந்து காணாமல் போய்விடுகிறோம். மீண்டும் நம்பிக்கை துளிக்கும் காலம் வரும்போது மீண்டும் கொண்டாடத் தொடங்குகிறோம். உலகெங்கும் இதுதான் நடைமுறை.

இந்த இதழ் திருவிழாக்களின் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. வடலூர் தைப்பூசத் திருவிழா, மதுரை சித்திரைத் திருவிழா தொடங்கி ஹாங்காங் பன் திருவிழா வரை பலப்பல திருவிழாக்கள் குறித்துப் பேசுகிறது. வேறு வேறு தேசங்கள், வேறு வேறு மதங்கள், வேறு வேறு நம்பிக்கைகள் ஆனாலும் மனிதர்கள் சில அடிப்படைகளில் வேறுபடுவதே இல்லை. கொண்டாடக் கிடைக்கும் தருணங்களைத் தவறவிடக் கூடாது என்பது அதிலொன்று. இந்தக் கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு கதையும் நமக்கு மௌனமாக போதிக்கும் உண்மைகள் பல. லயம் கூடியதொரு வாழ்வைத்தான் அனைவரும் விரும்புகிறோம். எங்கே பிசிறடிக்க விடுகிறோம் என்பதைத்தான் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

சென்ற வாரம் தமிழ்நாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்ட விவகாரம், பழ. நெடுமாறனின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று அவர் வெளியிட்ட ஒரு வரித் தகவல். தனது அறிவிப்புக்குப் பக்க பலமாக எந்த ஆதாரத்தையும் முன்வைக்காமல் அந்த ஒரு வரியை மட்டும் தனது செய்தியாகத் தந்துவிட்டுப் போனார்.

தனது கடைசி மூச்சு வரை தம் மக்களுக்காக, அவர்களது சுதந்தரத்துக்காக, உரிமைகளுக்காகப் போராடியவர் என்பதுதான் பிரபாகரனின் சிறப்பு. அவரது இயக்கம் நடத்திய அரசியல் கொலைகள், சகோதரக் கொலைகள் உள்ளிட்ட அனைத்தையும் செரித்துக்கொண்டு அவரை இன்றுவரை ஆராதிப்போருக்கு உள்ள ஒரே நியாயம் அதுதான். இறுதிவரை மக்களின் பக்கம் நின்றார்.

பழ. நெடுமாறனின் இந்த அறிவிப்பு, இறுதிப் போரில் லட்சக் கணக்கான தமிழர்களைக் காவு கொடுத்து, பிரபாகரன் மட்டும் உயிர் தப்பிச் சென்றார் என்பதைத்தான் நிறுவப் பார்க்கிறது. தமது தளபதிகளின் - ஆலோசகர்களின் நிர்ப்பந்தத்தால்தான் அவர் அப்படிச் செய்தார் என்று பழ. நெடுமாறன் சொல்கிறார். இது பிரபாகரனின் பெயரில் இன்னும் இழுக்கேற்றும் நடவடிக்கையே அன்றி வேறல்ல. அவர் என்றுமே எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தவரல்லர். அதுவும் ஓர் இனமே மொத்தமாக அழிந்துகொண்டிருந்த இறுதிக் கணங்களில் அவ்வளவு சுயநலமாக அவர் முடிவெடுத்திருக்க வாய்ப்பே இல்லை.

நெடுமாறனின் இந்த அறிவிப்பை ஈழத் தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? விரிவாகப் பேசுகிறது ஸஃபார் அஹ்மதின் கட்டுரை.

தமிழ்நாட்டில் பெருகி வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து அடிக்கடிக் கேள்விப்படுகிறோம். பலதரப்பட்ட விவாதங்கள் நடக்கின்றன. எதையும் அரசியலாக மட்டுமே பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்டுவிட்ட சமூகம் இது. இப்பிரச்னையின் உண்மை நிலவரம் குறித்து உணர்ச்சி வயப்படாமல் அலசுகிறது, அ. பாண்டியராஜனின் கட்டுரை.

இவை தவிர இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையில் அமெரிக்காவின் நிலைபாட்டை அலசும் பத்மா அர்விந்தின் கட்டுரை, அபுதாபியில் உருவாகியிருக்கும் ஆபிரகாமிய இல்லம் என்கிற மத நல்லிணக்க வழிபாட்டுத் தலம் குறித்த நஸீமாவின் கட்டுரை, அமெரிக்காவின் சிறுபான்மை மதங்களுள் ஒன்றான ஆமிஷ் குறித்தும் அதனைப் பின்பற்றும் மக்களைக் குறித்தும் பாலமுருகன் எழுதியுள்ள கட்டுரை, அண்டார்டிகாவில் (பங்களாதேஷைவிடப் பரப்பளவில் பெரிய) ஒரு பனிப்பாறை உருகத் தொடங்கியிருப்பதன் ஆபத்தைச் சுட்டிக்காட்டும் கோகிலா பாபுவின் கட்டுரை என்று இந்த இதழில் நீங்கள் கருத்தூன்றிப் படிக்கப் பல கட்டுரைகள் உள்ளன.

கவிஞர் ஞானக்கூத்தன் தமது வாழ்நாளில் ஒரே ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். ஒன்றே ஒன்றுதான் என்றாலும் மிகச் சிறந்த கதை. மறக்க முடியாதது. அக்கதையும் அதன் நுட்பங்களைப் பேசும் விமலாதித்த மாமல்லனின் கட்டுரையும் நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும்.

இன்னும் சுவாரசியமான படைப்புகளுடன் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

  • உலகைச் சுற்றி

    உலகம்

    கால விரயத் தேர்தல்

    ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரால் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்ய முடியும்.? நிச்சயமாய் வெல்ல முடியாது என்று தெரியும். ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும்...

    உலகம்

    இந்தா வைத்துக்கொள், பிரதமர் பதவி!

    உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும் அதி முக்கியமான வர்த்தகக் கேந்திரமாகவும் விளங்கும் சிங்கப்பூரில் ஒரு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு...

    சிறப்புப் பகுதி: திருவிழாக்கள்

    ருசிகரம்

    நம் குரல்

    வாழைப்பழ சோம்பேறிகள்

    தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...

    தமிழ்நாடு

    பத்து ஓட்டு பஜார்

    கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த நமது செய்தியாளர்களின் தேர்தல் நாள் குறிப்புகளின் தொகுப்பு இது. வாக்கினும் மீன்...

  • தொடரும்

    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 97

    97 ஆசனம் ‘பிரஸ்ஸில் இருக்கிறது’ என்று சில மாதங்களுக்கு முன்னால் மீட்சி 6ல் ‘முனியாண்டி’ என்கிற பெயரில் சாரு நிவேதிதா தன்னுடைய பைல்ஸ் பிரச்சனையை வைத்து எழுதியிருந்தான். படித்தபோதே ரொம்ப கெக்கரேபிக்கரே என்று இருப்பதாகப் பட்டது. அவனுக்கு பைல்ஸ் பிரச்சனை இருப்பதென்னவோ உண்மைதான்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 101

    101. தீன் மூர்த்தி இல்லம் பிரதமர் நேருவின் அன்றாட நடவடிக்கைகளில் மகள் இந்திராவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. அது பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். இந்தியா சுதந்திரம் பெற்று தேசப் பிரிவினையின் காரணமாக ஏராளமானவர்கள் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்தார்கள் அல்லவா? அப்போது டெல்லிக்கு வந்த...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை – 2

    உங்களிடம் ஒரு பெரிய வாளி இருக்கிறது. அதை ஒரு குழாயின்கீழ் வைக்கிறீர்கள், குழாயைத் திறந்துவிடுகிறீர்கள். குழாயிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது, வாளியை நிறைக்கிறது. ஆனால், அந்த வாளியில் சில ஓட்டைகளும் இருக்கின்றன. சிறிய ஓட்டைகள், நடுத்தர ஓட்டைகள், பெரிய ஓட்டைகள்… அவை அனைத்திலிருந்தும் தண்ணீர்...

    Read More
    aim தொடரும்

    aIm it -2

    அசையும் பொருளில் இசையும் நானே! அனுதினமும் ஏ.ஐ.யின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதிவிரைவாய் நிகழும் இம்மாற்றங்களைத் தொடர்ந்து கவனிப்பது சிக்கலானது. ஆனாலும் அறிந்து கொள்வது அவசியம். என்ன செய்யலாம்? இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது ஏ.ஐ. இன்டெக்ஸ் ரிப்போர்ட். ஸ்டான்ஃபோர்ட்...

    Read More
    G தொடரும்

    G இன்றி அமையாது உலகு – 2

    2. நாமகரணம் பெரிய விஷயங்கள் எல்லாமே நடக்கும்போது மிகச்சாதாரணமாக நடந்து விடுகிறது. ஆனால் வரலாற்று நோக்கில் அவற்றின் முக்கியத்துவம் பிரம்மாண்டமாக அமையும்போதுதான், நொடியில் கடந்துவிட்ட அந்த அற்புதத் தருணத்தை நினைத்து நினைத்து மகிழும் வாய்ப்பு மனித குலத்திற்கு அமையும். எல்லாப் பெரிய கண்டுபிடிப்புகளின்...

    Read More
    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 2

    2. ஆம்பள சாமி, பொம்பள சாமி இன்னொரு சந்நிதித் தெருவுக்குக் குடி போயிருந்தோம். திட்டமிட்டுச் செய்ததல்ல. அப்படி அமைந்தது. அப்பாவுக்கு எப்போது பணி மாறுதல் வரும் என்று சொல்லவே முடியாது. தனது பணிக்காலத்தில் அவர் எத்தனை பள்ளிக்கூடங்களைக் கண்டிருப்பார் என்கிற கணக்கும் எனக்குச் சரியாகத் தெரியாது. அவரது...

    Read More
    error: Content is protected !!