Home » Home 15-02-23

வணக்கம்

ஒரு சோதிடர் தொலைக்காட்சியில் சொல்லிக்கொண்டிருந்தார். ‘நான் சென்ற மாதமே சொன்னேன், இம்மாதம் பெரும் பேரழிவு ஒன்று நடக்கப் போகிறதென்று. அப்போது யார் நம்பினீர்கள்? இப்போது துருக்கியிலும் சிரியாவிலும் பூகம்பம் தாக்கியிருக்கிறது பாருங்கள்.’

சென்ற மாதமே அவர் சொன்னதும் உண்மை. இன்று அப்படியொரு அழிவுச் சம்பவம் நடந்திருப்பதும் உண்மை. ஆனால் இத்தகு சோதிடர்கள் நல்லதாகச் சொல்லும் எதுவும் ஏன் நடப்பதில்லை என்பதுதான் புரிவதில்லை.

உண்மையில் துருக்கியும் சிரியாவும் இப்பேரழிவிலிருந்து மீள நெடுங்காலம் பிடிக்கும். குறிப்பாக, சிரியா. ஏற்கெனவே பல்லாண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகியிருக்கும் தேசம். இப்போதும் கூட எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் என்று கொள்ளையடித்துப் போகிற கூட்டம்தான் செய்திகளில் முதன்மையாகக் காட்டப்படுகிறது. இந்த மாபெரும் வரலாற்றுத் துயரத்தைக் குறித்த கட்டுரை ஒன்றை இந்த இதழில் நஸீமா ரஸாக் எழுதியிருக்கிறார். படிக்கும்போதே நெஞ்சம் கனக்கச் செய்துவிடுகிறது அது.

கிட்டத்தட்ட அதே கனம். ஆனால் இது வேறு ரகம். இலங்கையை அடுத்து பாகிஸ்தான் பொருளாதாரம் திவாலுக்கு நெருக்கமாகச் சென்றுகொண்டிருக்கிறது. எக்காலத்திலும் மக்களை நினைத்து ஆட்சி புரியும் நபர்கள் அங்கே இருந்ததில்லை என்றாலும் இன்று நடப்பது சேகரித்து வைக்கப்பட்ட சீரழிவு என்பதைக் கூட அங்கே உணர யாருமில்லாதது பெருந்துயரம். ஸஃபார் அஹ்மதின் கட்டுரை பாகிஸ்தானின் இன்றைய நிலைமை குறித்த முழுமையான பார்வையைத் தருகிறது.

மூன்று மதங்களைச் சார்ந்த மக்கள் மிகுதியாக வசிக்கும் இலங்கையில் மும்மதத் திருமணங்களும் இந்நாள்களில் நடைபெறும் விதம் குறித்து ரும்மான் எழுதியிருக்கும் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். இதனுள்ளும் ஒரு மெல்லிய துயரத்தின் படலம் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் ஒரு நதி தன் பாதையை எந்த இண்டு இடுக்கிலும் கண்டடைந்து முன்னேறிச் சென்றுகொண்டே இருப்பது போலப் பொருளாதாரத்தை இழந்த காலத்திலும் பொருள்மிகு ஆதாரமொன்றைப் பற்றிக்கொள்ளும் அவசியத்தை இக்கட்டுரை அழகாகச் சொல்கிறது.

இவை தவிர, சிறை நூலகத் திட்டம் மதுரையில் நடைமுறைக்கு வந்திருப்பது குறித்த பாபுராஜின் கட்டுரை, அமெரிக்காவில் டேட்டிங் கலாசாரத்தின் உண்மை முகத்தை வெளிக்காட்டும் பத்மாவின் கட்டுரை, இன்று உலகெங்கும் பேசப்படும் சாட் ஜிபிடி குறித்த கோகிலாவின் கட்டுரை, சிவராத்திரியை ஒட்டி வெளியாகியுள்ள சிவசங்கரி வசந்த் மற்றும் ஶ்ரீதேவி கண்ணனின் கட்டுரைகள், மேற்சொன்ன அனைத்தையும் தூக்கி விழுங்கி வானோங்கி நிற்கும் காஃப்காவின் அதி அற்புதமானதொரு சிறுகதை, அதற்கு மாமல்லன் எழுதியிருக்கும் புனைவு என்னும் புதிர் கட்டுரை என்று இந்த இதழ் முழுதும் உங்களுக்கு விருந்துதான்.

மெட்ராஸ் பேப்பர் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களையும் சந்தாதாரர்களாக்குங்கள். இந்தப் பத்திரிகையின் ஆதாரப் புள்ளி நீங்களே அல்லவா?

அந்தப் பக்கம்

உலகம்

இருண்டு போன இரண்டு நாடுகள்

28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...

உலகம்

அமெரிக்காவின் கம்யூனிசத் தோழன்!

வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...

உலகம்

நைஜீரியா: ஒரு புதிய அடையாளப் புரட்சி

நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...

உலகம்

கனடா: கொண்டையில் ஒரு கூட்டணிப் பூ

கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில்...

இந்தப் பக்கம்

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

விருந்து மேசை

நகைச்சுவை

லைசென்ஸ்! லைசென்ஸ்!

எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக்...

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

நீல வானம்

ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...

Read More
error: Content is protected !!