Home » Home 01-02-23

வணக்கம்

மெட்ராஸ் பேப்பரை ஏன் அச்சிதழாகக் கொண்டு வரக் கூடாது?

இந்தக் கேள்வியை அநேகமாக வாரம் ஒருவராவது கேட்கிறார். தமிழில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் அச்சிதழ்களே தமது அந்திமத்தைக் காணத் தொடங்கியிருக்கும் நிலையில் புதிதாகத் தொடங்கப்பட்ட இணைய இதழ் ஒன்றினை அச்சில் கொண்டுவருவது என்பது பல நடைமுறைச் சிக்கல்களை உள்ளடக்கியது. அதில் முதலும் பெரிதுமானது, பொருளாதாரம். மாத இதழ், காலாண்டிதழ் என்றால்கூடச் சிறிது தப்பிக்க முடியும். இணைய வார இதழை அச்சில் கொண்டு வருவது என்பது எளிதல்ல.

இணைய இதழாகவேகூட இது நீடித்திருக்க சந்தாதாரர்களின் எண்ணிக்கை பெருகவேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் இது கதைகளாலும் கவிதைகளாலும் சினிமா செய்திகளாலும் நிறைந்த பத்திரிகை அல்ல. அற்பக் கேளிக்கை அம்சங்களை முற்றிலுமாக விலக்கி வைத்துவிட்டு உலக அளவில் நிகழும் முக்கியமான சம்பவங்கள் அனைத்தைக் குறித்தும் நாம் எழுதுகிறோம். அரசியல், அறிவியல், பொருளாதாரம், நிதி, வர்த்தகம், சமூகம், கலை, இலக்கியம் என ஒவ்வொரு துறை சார்ந்தும் கனமிகு கட்டுரைகளை ஆகச் சுலபமாக வாசிக்கத்தக்க மொழியில் தருகிறோம்.

வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதாகப் பெரும்பான்மை சமூகம் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு புதிய, தரம்மிக்க வாசகர் சமூகத்தையே உருவாக்கும் பணியில் மெட்ராஸ் பேப்பர் ஈடுபட்டிருக்கிறது. இப்பெரும் பணியில் எங்களோடு தோள்சேரத்தான் உங்களை வேண்டுகிறோம்.

மெட்ராஸ் பேப்பரைத் தொடர்ந்து வாசிக்கும் உங்களுக்கு இது பிடித்திருக்குமானால் உங்கள் நண்பர்களுக்கு நமது இதழைப் பரிந்துரை செய்யுங்கள். உறவினர்கள், நண்பர்கள், அன்பர்களுக்குப் பிறந்த நாள், திருமண நாள் வருமானால் ஒரு மெட்ராஸ் பேப்பர் சந்தாவை நீங்கள் அவர்களுக்குப் பரிசாகத் தரலாம். நாநூறு ரூபாய் ஆண்டுச் சந்தா என்பது பெரிய தொகையல்ல. நல்ல உணவகம் சென்று ஒருவேளை உண்டால்கூட இதனைக் காட்டிலும் அதிகம் செலவாகும் என்பதை அறிவீர்கள்.

உங்களிடம் நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை இதுதான். மெட்ராஸ் பேப்பர் அடுத்தடுத்த உயரங்களை எட்ட உங்கள் ஒத்துழைப்பு ஒன்றுதான் மூலக் காரணியாக இருக்க முடியும். இதன் ஒவ்வொரு வாசகரும் ஒரு புதிய சந்தாதாரரையேனும் கொண்டு வருவது ஒன்றே இந்த இதழ் தழைக்க வழி.

செய்வீர்கள் அல்லவா?

உற்றுப் பார்

உலகம்

இருண்டு போன இரண்டு நாடுகள்

28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...

உலகம்

அமெரிக்காவின் கம்யூனிசத் தோழன்!

வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...

உலகம்

நைஜீரியா: ஒரு புதிய அடையாளப் புரட்சி

நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...

உலகம்

100 நாள் ஆட்சி: டிரம்ப் நாட் அவுட், நாடு நாக் அவுட்!

அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...

நம்மைச் சுற்றி

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

திருவிழா

சூப்பர் ஹீரோ அழகர்

“வாராரு வாராரு அழகரு வாராரு” என்ற தேவாவின் திரைப்பாடலும், வைகைக் கரையின் முழங்கால் மட்ட நீரில் இளைஞர்கள் நடனமாடும் இன்ஸ்டாகிராம்...

கல்வி

படிப்பு முக்கியம் பரமா! – அசத்தும் பீகார் கிராமம்

பத்வா தோலி என்ற சிறிய கிராமத்தை இந்திய வரைபடத்தில் கண்டுபிடிப்பது கஷ்டம். ஆனால் ஐஐடி தேர்வில் வெற்றிபெற்றவர்கள் நிரம்பிய பீகார் கிராமம் என்று...

ரசனை

திருவிழா

சூப்பர் ஹீரோ அழகர்

“வாராரு வாராரு அழகரு வாராரு” என்ற தேவாவின் திரைப்பாடலும், வைகைக் கரையின் முழங்கால் மட்ட நீரில் இளைஞர்கள் நடனமாடும் இன்ஸ்டாகிராம்...

நகைச்சுவை

லைசென்ஸ்! லைசென்ஸ்!

எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக்...

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

நீல வானம்

ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...

Read More
error: Content is protected !!