இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம்...
வணக்கம்
இன்று (புதன் கிழமை - ஜனவரி 11) மாலை ஐந்து மணிக்கு சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் மெட்ராஸ் பேப்பர் வாசகர் திருவிழா - 13 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. மெட்ராஸ் பேப்பர் வாசகர்கள் அனைவரையும் இவ்விழாவுக்கு அன்புடன் வரவேற்கிறோம்.
இது நம் குடும்ப விழா. ஓராண்டுக் காலம் எழுத்துப் பயிற்சி. ஏழு மாத கால பத்திரிகைப் பயிற்சி. அதன் பிறகு ஒரு புத்தகம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது எழுத்தாளர்கள் உண்டார்களா, உறங்கினார்களா, குடும்பத்தைக் கவனித்தார்களா, வேலைக்குச் சென்றார்களா என்றுகூடத் தெரியாது. இரவு பகலாக எழுதிக்கொண்டேதான் இருந்தார்கள். அது பலனளிக்கும் இத்தருணத்தில் உங்கள் வருகையும் வாழ்த்தும் அவர்களுக்குப் பேருவகை அளிக்கும்.
தமிழில் கதை எழுத, கவிதை எழுத ஆயிரம் பல்லாயிரம் பேர் உண்டு. தினமும் நூற்றுக்கணக்கான கவிஞர்கள் பிறந்துகொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட இயல் சார்ந்து ஆய்வு செய்து, நுணுக்கமான விவரங்கள் சேகரித்து, ஆதாரபூர்வமானதொரு அபுனைவு நூலை எழுத வருவோர் மிகவும் குறைவு. இதுதான் சமரசமே இல்லாத மக்கள் எழுத்து. மக்களுக்கு உதவும் எழுத்து. ஆனால் சிரமமானது. நீடித்த கவனமும் அர்ப்பணிப்பும் தீவிரமும் கோருகிற ஒரு துறை இது.
நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியில் பிரபு பாலாவின் ‘ஐஐடி கனவுகளும்’, ராஜேஷ் பச்சையப்பனின் ‘தொண்டர் குலமு’ம் பேய் வேகத்தில் விற்பதாகப் பதிப்பாளர் ராம்ஜி நரசிம்மன் சொன்னார்.
இதன் அர்த்தம் புரிகிறதா? மாணவர்கள் தம் மேற்படிப்புக்கு வழி காட்டும் ஒரு சரியான நூலைத் தமிழில் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். உதவி இயக்குநர்கள் அடுத்தக் கட்டத்தை எட்டிப் பிடிக்க தொண்டர் குலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறார்கள். அவ்வளவுதான் விஷயம்.
மெட்ராஸ் பேப்பர் வெளியீடாக வந்திருக்கும் பதிமூன்று நூல்களுமே இந்த ஆண்டை ஆளப்போகின்றன என்பதில் எங்களுக்கு ஐயமில்லை. இம்மகிழ்ச்சியை நீங்களல்லாமல் வேறு யாருடன் நாங்கள் சேர்ந்து கொண்டாட முடியும்? அதனால்தான் சொல்கிறோம். அவசியம் விழாவுக்கு வருக.
தவிர, இது மேடையில் இருப்போர் மட்டும் பேசுகிற விழா அல்ல. வாசகர் திருவிழா. மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் உள்பட குழுவினர் அனைவருடனும் நீங்கள் விவாதிக்கலாம். கேள்விகள் கேட்கலாம். இதழ் குறித்த உங்கள் கருத்துகளை, விமரிசனங்களை முன்வைக்கலாம். புத்தகங்கள் குறித்துப் பேசலாம். உங்களைச் சந்திப்பதற்காகவே நமது எழுத்தாளர்களும் செய்தியாளர்களும் உலகெங்கிலும் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார்கள். இன்றைய விழாவிலும் நாளை (வியாழன்) முழுதும் சென்னை புத்தகக் காட்சியிலும் உங்களுடன் உரையாடுவதற்காகவே காத்திருப்பார்கள்.
O
இந்த இதழில் சி. சரவண கார்த்திகேயன், ஆத்மார்த்தி, நர்மி, ஷாராஜ், சித்ரன் ரகுநாத் ஆகியோர் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள். தமிழர் திருநாளை ஒட்டி இது உங்களுக்கு ஓர் எதிர்பாரா நல்விருந்தாக இருக்கும் என்று நம்புகிறோம்.
பொங்கல் பண்டிகை என்று நாம் கொண்டாடும் இத்திருநாள் உலகெங்கும் பல்வேறு விதங்களில், வடிவங்களில் கொண்டாடப்படுவதுதான். தைத்திருநாளின் சரித்திரத்தை சுவைபட விவரிக்கும் கோகிலா பாபுவின் கட்டுரை உங்கள் ரசனைக்கு விருந்தாக இருக்கும்.
இது மகர ஜோதி மாதமும் கூட. நமது செய்தியாளர் அ. பாண்டியராஜன் தமது சபரிமலை யாத்திரை அனுபவங்களின் அடிப்படையில் எழுதியுள்ள கட்டுரை, பக்திப் பரவச உணர்வை முற்றிலும் வேறொரு ருசியில் மறு அறிமுகப்படுத்துகிறது.
வாசக நண்பர்களுக்கு மெட்ராஸ் பேப்பரின் மனமார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள். இன்று (ஜனவரி 11) மாலை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறவுள்ள நமது வாசகர் திருவிழாவில் சந்திப்போம்.
பொங்கல் சிறப்புச் சிறுகதைகள்
ருசிகரம்
“நாங்கள் மீண்டும் உக்ரைனுடன் இணைவோம் என்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லை. எங்களைக் காப்பாற்ற இங்கு யாரும் வருவதில்லை” என்கிறார் கெர்சோன்...
பழனி அருகிலுள்ள கணக்கம்பட்டி அழுக்குமூட்டை சித்தர் மிகப்பிரபலம். தமிழகம் முழுவதிலுமிருந்து அவரைக்காண பக்தர்கள் வருவதுண்டு. வரும் பக்தர்களிடத்தில்...
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்குக் கடந்தசில வாரங்களாய் ஒழுங்காய்த் தூக்கம் இருக்கவில்லை. டென்ஷனில் நகம் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார்கள். காரணம்...
திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரி கிளைவ்ஸ் விடுதியில் மாணவர்கள் தடியடி பட்டதை தமிழ்நாட்டில் யாரும் இன்னமும் மறந்திருக்க மாட்டார்கள். 25 வருடங்கள் முன்...
தொடரும்
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையின் முக்கிய அங்கம் இவர். அவருக்கொரு செல்வமகள். தன் தந்தை ரோனன் சொல்லும் கதைகளைக் கேட்டால் தான் அச்சிறுகுழந்தைக்குத் தூக்கம் வரும். வழமை போலவே...
3. இருவர் ஒரே வருடத்தில் பிறந்திருந்தாலும், அந்த இருவருக்கும் பிறந்த தேசங்கள் வேறு. தாய்மொழி வேறு. வளர்க்கப்பட்ட விதம் வேறு. குணங்கள் வேறு. ஆனால் இருவருக்குள்ளும் சிறு வயதிலிருந்து கணினி மீதான ஆர்வமும், புலமையும், அதில் ஏதேனும் பெரிதாக சாதிக்கவேண்டும் என்ற வேட்கையும், என்ன செய்யப்போகிறோம் என்ற...
3. சம்பள ஆராய்ச்சி நமக்குப் பணத்தைக் கொண்டுவரும் குழாய்களை வருவாய் மூலங்கள் அல்லது வழிகள் (Income Sources/Channels) என்கிறார்கள். இதை நாம் எளிமையாகப் ‘பணவழிகள்’ என்று சொல்வோம். எடுத்துக்காட்டாக, ஒருவர் அலுவலகம் சென்று வேலை பார்த்துச் சம்பளம் பெறுகிறார், இன்னொருவர் கடை வைத்துப் பொருட்களை...
பள்ளிக்கூடம் போகாமலே… முத்துவின் அம்மாவுக்குத் தையல் கடை வேலை, வீட்டு வேலை எல்லாம் போக வேறொரு சிறப்பு வேலை இருந்தது. பிள்ளைகளைத் தேடும் வேலை. முத்துவையும் அவர் தங்கையையும் அக்கம்பக்கத்தில் உள்ளோர் தூக்கிக் கொண்டுபோய் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இருவருமே கொஞ்சம் வெளிர்நிறத் தோலுடையவர்கள்...
98 ஹீரோ ஓரிரு இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களில் தட்டுப்பட்ட, தன் புத்தக வெளியீட்டு விழாவில் பார்த்த முகத்தை பஸ்ஸில் பார்த்தது கொஞ்சம் பரபரப்பாக்கிவிட்டது. பெண்களை முன்பின் பார்க்காதவனோ பழகாதவனோ இல்லை என்றாலும் இந்தப் பெண் சற்றே வெட்கத்துடன் சிரித்ததைப்போலத் தோன்றியது வேறு ஆர்வத்தைக் கூட்டிவிட்டது...
3. இரு வேறு ஃபாரினர்ஸ் இன்னும் ஓர் இடமாற்றம். வேறொரு கிராமம். மற்றுமொரு பள்ளி. இப்போது நான் வளர்ந்த சிறுவன். நான்காம் வகுப்புக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். கேளம்பாக்கம் பஞ்சாயத்து ஒன்றியத் தொடக்கப்பள்ளி. இந்தத் தொடக்கப்பள்ளிக் கட்டடம் இருக்கும் அதே வளாகத்துக்குள்ளேயே அப்பா மாற்றலாகி வந்திருக்கும்...