அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள…. குறிப்பாக அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தொடர் போராட்டங்களையும் மாணவர் எழுச்சியையும்...
வணக்கம்
சென்னையின் கலாசார அடையாளங்களுள் ஒன்றான புத்தகக் காட்சி நெருங்கிவிட்டது. நாளை மறுநாள் (ஜனவரி 6) தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இம்முறை புத்தகக் காட்சியின் தனிச் சிறப்பு, இது சர்வதேசப் புத்தகக் காட்சியாகவும் உருப்பெறவிருப்பதுதான். 16-18 மூன்று தினங்கள் மட்டுமே என்றாலும் ஒரு நல்ல தொடக்கத்துக்கு இது சரியாகவே இருக்கும். முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல பெரிய பதிப்பு நிறுவனங்கள் இதற்கெனச் சென்னை வருகின்றன. மொழியாக்க ஒப்பந்தங்கள் நிறைய நிகழப் போகின்றன. இதெல்லாம் தமிழ்ச் சூழல் இதற்கு முன் காணாதது. தமிழக அரசின் அக்கறை மிக்க முன்னெடுப்புகளுக்கு நம் மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த இதழின் சிறப்புப் பகுதியாக இடம் பெற்றிருப்பது ஒரே ஒரு துணுக்குக் கட்டுரைதான். ஆனால் சென்னை புத்தகக் காட்சி தொடர்பான அனைத்து விவரங்களையும் அது உள்ளடக்கியுள்ளது. புத்தகக் காட்சிக்குச் செல்கிறவர்களுக்கு அது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
சென்ற இதழில் அறிவித்திருந்தது போல ஜனவரி 11ம் தேதி புதன்கிழமை அன்று நமது மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்களின் பதிமூன்று நூல்கள் வெளியீட்டை ஒரு வாசகர் திருவிழாவாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூத்த பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன் தலைமையில் ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தின் பதிப்பாளர்கள் ராம்ஜி நரசிம்மன் மற்றும் காயத்ரி இருவரும் புத்தகங்களை வெளியிட, எழுத்தாளர் என். சொக்கன் வாழ்த்துரை வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமே நமது எழுத்தாளர்களும் வாசகர்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கலந்துரையாடுவதுதான். மெட்ராஸ் பேப்பர் குழுவினர் அனைவரும் கலந்துகொள்ளும் இவ்விழாவில் நீங்கள் யாரிடமும் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். இதழ் குறித்து. உள்ளடக்கம் குறித்து. மொழி குறித்து. அடுத்தடுத்த முயற்சிகள் குறித்து. எது வேண்டுமானாலும். ஆசிரியர் உள்பட அத்தனை பேரும் பதிலளிக்கக் காத்திருப்பார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாசகர்களைச் சந்திப்பதற்காகவே பல்வேறு நாடுகளிலிருந்து நமது எழுத்தாளர்கள் சென்னைக்கு வருகிறார்கள். நீங்களும் வந்து இணையும்போது நிகழ்ச்சி களை கட்டிவிடும்.
புத்தாண்டைப் புத்தகங்களுடனும் புத்தக விழாக்களுடனும் தொடங்குவது பேருவகை தரக்கூடியது. ஆண்டு முழுதும் இந்த உவகை நீடித்திருக்க வாழ்த்துகள்.
சிறப்புப் பகுதி: சென்னை புத்தகக் காட்சி 2023
உலகைச் சுற்றி
இங்கிலாந்தின் பெரிய நகரங்களுள் ஒன்றான பர்மிங்காம், போதிய வருமானம் இல்லாததால் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குப்பை மேலாண்மை போன்ற சில...
ஏப்ரல் 27 , 2024. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணை. பதஞ்சலி நிறுவனங்களின் மீதான...
ஜனநாயக அரசியலின் அடிப்படை பெரும்பான்மை எனும் எண்ணிக்கையே. ஜனாதிபதித் தேர்தலில் இருந்து உள்ளூராட்சித் தேர்தல் வரை ஒருவர் வெற்றி பெறத் தேவையானது...
கோடை வந்துவிட்டது. எங்கெங்கும் விடுமுறைக் காலம். அவரவர் வசதிக்கேற்ப சுற்றுலாத் திட்டங்களைப் போடத் தொடங்கிவிட்டார்கள் மக்கள். இப்போதே உலகெங்கும்...
நம்மைச் சுற்றி
தேசிய ஊடகங்கள் கடந்த சில தினங்களாக உச்சரிக்கும் ஒரே பெயர் பிரஜ்வல் ரேவண்ணா. காரணம் அவர் செய்த சகிக்கவியலாத, மன்னிக்கவே முடியாத பெரும் குற்றம். ஒருவர்...
இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம்...
தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...
குடிநீருக்குப் பிரச்னை இருக்கக் கூடாது. ரேஷன் பொருள்கள் தடையறக் கிடைக்க வேண்டும். மாநிலத்தில் எங்கிருந்தும் எந்த இடத்துக்கும் சென்று வர சாலைகள்...
தொடரும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்! தகவல் தொழில்நுட்பத் துறையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல், ‘ஃபார்ம் ஃபேக்டர்.’ வடிவக் காரணி. தொழில்நுட்பம் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவிற்கு மாறும்போது அதன் பயன்பாடு பன்மடங்கு அதிகரிக்கிறது. தொடக்கத்தில் நாமெல்லாம் டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர்களைப்...
கலகக்காரனின் இறைப்பணிகள் டத்தோ ஹம்சா பள்ளி / இடைநிலை வகுப்பில் கணிதப் பாடவேளை. ஆசிரியர் வகுப்பறையின் உள்ளே நுழைந்தார். கணிதம் என்று பெரிய பட்டையான எழுத்துகளால் கரும்பலகை நிரம்பியிருந்தது. சில நொடிகள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார் கணித ஆசிரியர் சுப்பிரமணியம். “யார் இதை எழுதியது?” என்று மாணவர்களைப்...
99 ஆமாவா பஸ்ஸின் பின்புறப் படிக்கட்டில் இவன் நின்றிருக்க, அதற்குப் பின்னால் இருக்கிற நீண்ட சீட்டில் இரண்டாவதாக அமர்ந்திருந்த நிமா சொன்னாள், ‘என் வேடிக்கையை மறைக்கறீங்க’ என்று. இவனுக்கு முதலில் அவள் என்ன சொல்கிறாள் என்றே புரியவில்லை. இவன் கையைப் பின்னால் இழுத்துவிட்டப் பிறகுதான், எதிரில்...
4. பாப்பார சாமி ராஜா அண்ணாமலைபுரத்தில் அவர் வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்பட நேர்ந்தது. அதற்கு முன்பாக ராஜா அண்ணாமலைபுரத்தைத் தேடிக் கண்டுபிடிக்கவே சிரமப்பட வேண்டியிருந்தது. குரோம்பேட்டைக்குக் குடிமாறி வந்து அதிக நாள் ஆகியிராததால் சென்னை பழகியிருக்கவில்லை. தலைமை ஆசிரியர், பதவி உயர்வில்...
103. பாபர் மசூதி ஆரம்ப கட்டத்தில் ராஜாஜிதான் இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதி பதவிக்குத் தகுதியானவர் என நேரு, படேல் இருவரும் எண்ணினாலும், நேருவின் எதேச்சாதிகாரத்துக்கு ஒரு முட்டுக்கட்டை தேவை என நினைத்த படேல், காங்கிரஸ் கட்சிக்குளேயே பலர் ராஜாஜியை ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை...
4. கும்பளம் முன்பெல்லாம் யாராவது தன்னுடைய வேலையைப்பற்றி அல்லது தொழிலைப்பற்றிப் பேசினால், ‘அது சரி, மாசாமாசம் சம்பளம் எவ்வளவு வருது? கிம்பளம் ஏதும் உண்டா?’ என்று கேட்பார்கள். சம்பளம் புரிகிறது. அதென்ன கிம்பளம்? நாம் எல்லாரும் வண்டி, கிண்டி, கலாட்டா, கிலாட்டா, வம்பு, கிம்பு, மழை, கிழை...