Home » Home 09-11-22

வணக்கம்

வீட்டுக்கடன், வாகனக் கடன், சொந்தக் கடன், கல்விக் கடன் என்பதெல்லாம் இன்று சாதாரண மனிதர்களின் அன்றாடங்களுள் ஒன்றாகிவிட்டன. கிடைக்கிறதே; பயன்படுத்திக்கொள்வோம் என்பது ஒன்று. தேவைக்குப் பயன்படுத்திக்கொள்வது ஒன்று. ஆனால் பெரும் பணக்காரர்களைப் போல ஏய்ப்பதற்கென்றே வங்கிக்கடன் கோரும் வசதி இன்னும் சாதாரண மனிதர்களுக்கு வரவில்லை; அதற்கு வாய்ப்பும் இல்லை.

இந்த இதழில் வங்கிக் கடன்கள் சார்ந்த பல முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அனைத்தும், கடன் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை. மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் பெறக்கூடிய லாபங்கள் பற்றி ஓரளவு நமக்குத் தெரியும். அதன் அனைத்து வாய்ப்புகளையும் விவரிக்கும் பாபுராஜின் கட்டுரை முதல், கடன் தரும் நிறுவனங்களை எப்படி / எதனைக் கொண்டு தேர்ந்தெடுப்பது என்று விளக்கும் பாண்டியராஜனின் கட்டுரை வரை ஒவ்வொன்றும் பொருட்படுத்தி கவனமுடன் வாசிக்க வேண்டியவை.

விடுதலைப் புலிகள் இருந்தவரை ஈழத் தமிழர்களைக் குறித்து இங்கே பேசிக்கொண்டாவது இருந்தார்கள். இன்று அத்தேசமே பொருளாதாரச் சீர்கேட்டுப் படுகுழியில் விழுந்து கிடக்கும் சூழலில் தமிழர்களின் இன்றைய நிலைமை குறித்துத் தெரிய வருவதே அரிதாகியுள்ளது. இலங்கையில் இன்றைக்கு உள்ள தமிழர் இயக்கங்கள், கட்சிகள், கூட்டமைப்புகள் என்னதான் செய்கின்றன? விளக்குகிறது ஸஃபார் அஹ்மதின் கட்டுரை.

பிரபல அமெரிக்கக் கல்வியாளர் பெஞ்சமின் புளூமின் கருத்தாக்கங்களை முன்வைத்து, நமது கல்வி அமைப்பின் மீது வலுவான வினாக்களை எழுப்பும் அனந்தசாய்ராமின் ‘சரியாகத்தான் படிக்கிறோமா?’ - இன்றைய ஆசிரியப் பெருமக்கள் பொருட்படுத்தி வாசிக்க வேண்டியதொரு கட்டுரை.

ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் காட்சி குறித்த நஸீமாவின் கட்டுரை, நெட்ஃப்ளிக்ஸின் வெற்றிக் கதை, வங்கி இயல் வளர்ந்த வரலாற்றை விவரிக்கும் அறிவனின் கட்டுரை, அரோமா பொன்னுசாமியின் நிறுவனம் பால்பொருள் உற்பத்தித் துறையில் ஆவினுக்கு அடுத்த இடத்தைப் பெற்றதன் சூட்சுமத்தை விவரிக்கும் ராஜ்ஶ்ரீ செல்வராஜின் கட்டுரை என இந்த இதழில் உங்கள் ரசனைக்கு விருந்தளிக்கும் பலதரப்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இன்னொரு முக்கியமான விஷயம். மெட்ராஸ் பேப்பரின் முதல் இதழிலிருந்து தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கும் சில பகுதிகள் இந்த இதழுடன் நிறைவடைகின்றன. செந்தூரம் ஜெகதீஷின் ‘என் கனவை விட்டுச் செல்கிறேன்’, ராஜேஷ் பச்சையப்பனின் ‘தொண்டர் குலம்’, சுவாமி ஓம்காரின் ‘சித்’, முருகு தமிழ் அறிவனின் ‘வரலாறு முக்கியம்’, ராஜ்ஶ்ரீ செல்வராஜின் ‘வென்ற கதை’ - இவற்றுக்கெல்லாம் நீங்கள் அளித்த வரவேற்பு என்றும் மறக்க முடியாதது. இந்த இதழில் நிறைவடையும் தொடர்கள் மிக விரைவில் புத்தகங்களாகவும் வெளிவரவிருக்கின்றன. அது குறித்த தகவல்கள் விரைவில் வரும்.

அடுத்த தொடர்கள்?

அந்த அறிவிப்பு அடுத்த வாரம்.

  • சிறப்புப் பகுதி: கடன்படும் கலை

    இங்கும் அங்கும்

    நம் குரல்

    வாழைப்பழ சோம்பேறிகள்

    தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...

    உலகம்

    கால விரயத் தேர்தல்

    ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரால் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்ய முடியும்.? நிச்சயமாய் வெல்ல முடியாது என்று தெரியும். ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும்...

    உலகம்

    இந்தா வைத்துக்கொள், பிரதமர் பதவி!

    உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும் அதி முக்கியமான வர்த்தகக் கேந்திரமாகவும் விளங்கும் சிங்கப்பூரில் ஒரு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு...

    தொழிலோடு உறவாடு

    உரு தொடரும்

    உரு – 2

    சூள் முத்துவின் தந்தை முரசு நெடுமாறன் முதல் தலைமுறைப் பட்டதாரி. அந்தப் பெருமையைப் பெற அவர் பல தடைகளைத் தாண்டி வந்தார். சுப்புராயனும் அவர் மனைவி...

  • தொடரும்

    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 97

    97 ஆசனம் ‘பிரஸ்ஸில் இருக்கிறது’ என்று சில மாதங்களுக்கு முன்னால் மீட்சி 6ல் ‘முனியாண்டி’ என்கிற பெயரில் சாரு நிவேதிதா தன்னுடைய பைல்ஸ் பிரச்சனையை வைத்து எழுதியிருந்தான். படித்தபோதே ரொம்ப கெக்கரேபிக்கரே என்று இருப்பதாகப் பட்டது. அவனுக்கு பைல்ஸ் பிரச்சனை இருப்பதென்னவோ உண்மைதான்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 101

    101. தீன் மூர்த்தி இல்லம் பிரதமர் நேருவின் அன்றாட நடவடிக்கைகளில் மகள் இந்திராவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. அது பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். இந்தியா சுதந்திரம் பெற்று தேசப் பிரிவினையின் காரணமாக ஏராளமானவர்கள் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்தார்கள் அல்லவா? அப்போது டெல்லிக்கு வந்த...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை – 2

    உங்களிடம் ஒரு பெரிய வாளி இருக்கிறது. அதை ஒரு குழாயின்கீழ் வைக்கிறீர்கள், குழாயைத் திறந்துவிடுகிறீர்கள். குழாயிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது, வாளியை நிறைக்கிறது. ஆனால், அந்த வாளியில் சில ஓட்டைகளும் இருக்கின்றன. சிறிய ஓட்டைகள், நடுத்தர ஓட்டைகள், பெரிய ஓட்டைகள்… அவை அனைத்திலிருந்தும் தண்ணீர்...

    Read More
    aim தொடரும்

    aIm it -2

    அசையும் பொருளில் இசையும் நானே! அனுதினமும் ஏ.ஐ.யின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதிவிரைவாய் நிகழும் இம்மாற்றங்களைத் தொடர்ந்து கவனிப்பது சிக்கலானது. ஆனாலும் அறிந்து கொள்வது அவசியம். என்ன செய்யலாம்? இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது ஏ.ஐ. இன்டெக்ஸ் ரிப்போர்ட். ஸ்டான்ஃபோர்ட்...

    Read More
    error: Content is protected !!