இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...
வணக்கம்
How to.
கூகுளில் இதைப் போட்டுத் தேடாத நாளும் இல்லை; நபரும் இல்லை. இது எப்படி, அது எப்படி என்று ஒவ்வொருவருக்கும் எதையாவது சிலவற்றைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமோ தேவையோ எப்போதும் இருக்கிறது. OSX Daily என்று ஒரு தொழில்நுட்ப இணைய இதழ் உள்ளது. முற்றிலும் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளைக் குறித்தே அலசும் கட்டுரைகளை வெளியிடுகிற இதழ். இந்தப் பத்திரிகையின் 99 சதவீதக் கட்டுரைத் தலைப்புகள் ‘How to’ என்றே தொடங்கும். மக்களின் தேவை அப்படி. மறுபுறம், யூ ட்யூபில் பார்த்து வெடிகுண்டு செய்யக் கற்றுக்கொண்டவர்களைப் பற்றிக் கூட கேள்விப்படுகிறோம். how to என்று ஆரம்பித்தால் எதையும் கொண்டுவந்து கொட்டும் கற்பக விருட்சமாகிவிட்டது இணையம். குருகுலவாசம் இருந்து பயில்வது, மூத்தோரிடம் பார்த்துக் கற்பது, அனுபவத்தில் அறிவது எல்லாம் பழங்கதை. தேவை என்று தோன்றிய கணத்தில் கையில் இருக்க வேண்டும். அதுவும் அதிக சிரமமின்றி எளிதாக உள்வாங்கும் விதமாக.
நல்லது. இது இத்தலைமுறையின் கல்யாண குணம். ஒன்றும் செய்ய முடியாது.
இந்த இதழில் வெளியாகியுள்ள How to ரகக் கட்டுரைகளை வாசித்துப் பாருங்கள். அவை பேசும் துறை சார்ந்து அதிகபட்ச எளிமையையும் பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு இவை எழுதப்பட்டுள்ளன. ஷான் கருப்புசாமி, நாவல் எழுதுவதற்குத் தயாராவது எப்படி என்று விவரிக்கிறார். மறுபுறம் சரவணகார்த்திகேயன் ஓர் அழகியை ரசிப்பது எப்படி என்று கற்றுத் தருகிறார். இரண்டும் இரு வேறு எல்லைகள் என்று தோன்றினால் நீங்கள் வேறு தலைமுறை. எல்லாம் கலைதானே என்பீர்களானால் இன்றைய உலகில் வாழ்பவர்.
இது புரிய வேண்டுமானால் பள்ளி மாணவர்களிடம் இருந்து தொடங்க வேண்டும். இந்தத் தலைமுறை மாணவர்களைக் கையாள்வது எப்படி என்று ரும்மான் எழுதியிருப்பதைப் படியுங்கள். மாணவர்களைக் காட்டிலும் ஆசிரியர்களும் பெற்றோரும் அதிகம் பயில வேண்டியிருப்பதாகத் தோன்றிவிடும். அச்சப்பட அவசியமில்லை என்றாலும் கால மாற்றத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒரு நாளைத் திட்டமிடுவது எப்படி என்று தொடங்கி, ஆயிரம் பேருக்குச் சமைப்பது எப்படி என்பது வரை இந்த இதழில் இடம் பெற்றிருக்கும் ‘எப்படி’க் கட்டுரைகளை தினம் ஒன்றாக நீங்கள் வாசித்து, யோசிக்கலாம். இவை மிக நிச்சயமாக ஒரு புதிய விஷயத்தையாவது உங்களுக்கு அறிமுகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்படுகிற திருத்தங்கள் குறித்து ஸஃபார் அஹ்மத் எழுதியுள்ள கட்டுரை இந்த இதழில் மிக முக்கியமானதொன்று. சில ஆப்பிரிக்க, தென்னமெரிக்க தேசங்களில் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த அரசியல் குளறுபடிகளெல்லாம் இன்று நம்மருகே, நம் சொந்தச் சகோதரர்கள் வசிக்கும் தேசத்தில் நிகழ்வதைக் காணும்படிச் செய்திருக்கிறது காலம். புத்தர் கைவிட்டுவிட்ட தேசத்தை எந்தப் புனிதர் வந்து மீட்பார் என்றுதான் தெரியவில்லை.
மெட்ராஸ் பேப்பர் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மேலும் பல புதிய சுவாரசியங்களுடன் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.
விருந்தினர் பக்கம்: சிஎஸ்கே, ஷான்
சிறப்புப் பகுதி: எப்படிச் சொல்வேனடி?
திசையெலாம்
28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...
வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...
நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...
அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...
கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில்...
தொடரும்
சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...
16 புதியதோர் உலகம் எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில் தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...
ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...