Home » Home 26-10-22

வணக்கம்

‘விளக்கு’ விருது பெற்றிருக்கும் இராசேந்திர சோழன் பற்றிய பகுதியே இந்த இதழின் முதன்மைச் சிறப்புப் பகுதியாகிறது. தமிழின் முக்கியமான படைப்பு ஆளுமைகளுள் ஒருவரான இராசோவின் சிறந்த கதைகளுள் ஒன்றான ‘சாவி’ இந்த இதழில் மீள் பிரசுரமாகிறது. அச்சிறுகதையின் நுட்பங்களை விவரித்துச் சிலாகிக்கும் விமலாதித்த மாமல்லனின் கட்டுரை, ஓர் இலக்கியப் படைப்பை எப்படி அணுக வேண்டும் என்று அழகாகக் கற்றுத் தருகிறது. இராசேந்திர சோழனுடன் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் பழகியவரும், அவரோடு இணைந்து இயக்கப் பணிகளில் ஈடுபட்டவருமான மாயவன் தமது நண்பரைக் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இராசேந்திர சோழன் என்கிற ஆளுமையைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள அது உதவும்.

பருவ மழைக்காலம் தொடங்கும் நேரம் இது. இம்முறை மழைக்காலம் எப்படி இருக்கும் என்று ‘வெதர்மேன்’ பிரதீப் ஜான் விவரிக்கிறார். மழைக் காலத்தில் வாகனங்களை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று விளக்கும் பாபுராஜின் கட்டுரை அனைவருக்கும் பயன் தரக் கூடியது. இலங்கை-கண்டியில் தமது இளமைக் காலத்தைக் கழித்த தர்ஷனா கார்த்திகேயன், தனது மழைக்கால நினைவுகளைக் குடையென விரித்திருக்கிறார். இக்கட்டுரை மிக நிச்சயமாக உங்கள் ரசனைக்கு விருந்து.

நாற்பத்தைந்து நாளில் பதவி விலகியிருக்கும் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் விட்டுச் சென்றிருக்கும் செய்தி என்ன? புதிய பிரதமராகப் பொறுப்பேற்கும் ரிஷி சுனக் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்னென்ன? ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை, மிக நெருக்கடியான கட்டத்தைக் கடந்துகொண்டிருக்கும் பிரிட்டனின் அரசியல் நிலைமையை அலசி ஆராய்கிறது.

இலங்கைப் பொருளாதாரம் இன்னும், இன்னும் கீழிறங்கிச் சென்றுகொண்டிருக்கும் அவலத்தைத் தோலுரிக்கும் ஸஃபார் அஹ்மதின் கட்டுரை, திருப்பூர் பின்னலாடைத் தொழில் நலிவுற்றுக்கொண்டிருப்பதன் பின்னணியை விவரிக்கும் அ. பாண்டியராஜனின் கட்டுரை, அமெரிக்க-சீன உறவு நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கும் சூழலின் பின்னணியை அலசும் பத்மா அர்விந்தின் கட்டுரை - இம்மூன்றையும் ஒரு நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்க முடியும். வேறு வேறு களங்கள்தாம்; வேறு வேறு பிரச்னைகள்தாம்; பரிமாணங்களும் தொடர்பற்றவைதாம். ஆயினும் இவற்றின் குவி மையம் ஒன்றே போலத் தோன்றும் வினோதத்தைக் கவனியுங்கள்.

தீபாவளியைக் கொண்டாட நாம் தயாராகிக்கொண்டிருந்த நேரம் இரண்டு தமிழ் எழுத்தாளர்களின் மறைவுச் செய்தி நம்மை வருந்தச் செய்தது. ஈழத்தின் முன்னோடி படைப்பாளுமைகளுள் ஒருவரான தெளிவத்தை ஜோசப் மற்றும் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க இடதுசாரிப் படைப்பாளியான பா. செயப்பிரகாசம். இருவருக்கும் நமது அஞ்சலி. இந்த இதழில் தெளிவத்தை ஜோசப்பின் ஆளுமையைத் துல்லியமாக எடுத்துக் காட்டும் நர்மியின் கட்டுரை இடம்பெறுகிறது.

மெட்ராஸ் பேப்பர் உங்கள் பத்திரிகை. உங்களுக்கு இது பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து, அவர்களை சந்தாதாரர்களாக்குங்கள். மேலும் பல சுவாரசியமான கட்டுரைகளுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.

விளக்கு விருது: இராசேந்திர சோழன்

சிறப்புப் பகுதி: மழைக்காலம்

நம்மைச் சுற்றி

உலகம்

இருண்டு போன இரண்டு நாடுகள்

28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...

உலகம்

அமெரிக்காவின் கம்யூனிசத் தோழன்!

வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...

உலகம்

நைஜீரியா: ஒரு புதிய அடையாளப் புரட்சி

நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...

உலகம்

100 நாள் ஆட்சி: டிரம்ப் நாட் அவுட், நாடு நாக் அவுட்!

அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...

அறுசுவை

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

நீல வானம்

ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...

Read More
error: Content is protected !!