Home » Home 12-10-22

வணக்கம்

கடந்து போன காலத்தின் தித்திப்புகளை நினைவில் மீட்டுக் கொண்டு வந்து திரும்ப ருசிப்பது அனைவருக்கும் பிடித்த செயல். இந்த இதழின் சிறப்புப் பகுதியான ‘அது ஒரு காலம்’, வாசிப்பின் ருசி அறிந்தவர்களுக்கு அத்தகையதொரு விருந்து. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலப் பத்திரிகை எழுத்தில் இருந்து சில சுவாரசியமான பக்கங்களை இந்த இதழில் பால கணேஷ் தந்திருக்கிறார். அந்நாளைய உரைநடை, அந்தக் காலத்து சினிமா செய்திகள், அப்போதைய நகைச்சுவை, அன்றைய ஓவியங்கள் என்று ஒவ்வொரு பிரிவிலும் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்திருக்கிறார். வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் சுவாரசியம் ஒரு புறம் இருக்க, நாம் எங்கிருந்து எங்கு நகர்ந்து வந்திருக்கிறோம் என்று ஒப்பிட்டுப் பார்க்க இது ஒரு வாய்ப்பு.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த இதழில் நான்கு கட்டுரைகள் இது சார்ந்து வெளியாகியிருக்கின்றன. நோபல் பரிசு எவ்வாறு வழங்கப்படுகிறது என்று விளக்கி ஜெயரூபலிங்கம் எழுதியிருக்கிறார். மருத்துவ நோபல் பரிசு பெற்றிருக்கும் ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோ எதனால் இவ்விருதுக்குத் தகுதி பெறுகிறார் என்று மிக அற்புதமாக விளக்கியிருக்கிறார் ராஜிக் இப்ராஹிம். அறிவியலைக்கூட இப்படியெல்லாம் இனிக்க இனிக்கச் சொல்ல முடியும் என்பது வியப்புத்தான். இலக்கியத்துக்கான விருது பெற்றிருக்கும் பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னோ குறித்து தர்ஷனா கார்த்திகேயன் விரிவான அறிமுகத்தைத் தந்திருக்கிறார். தமிழில் அவரைக் குறித்து வெளியாகும் முதல் கட்டுரை இதுதான். அப்புறம் சிவசங்கரியின் ‘நோ-பால்’. இது சிரிப்பதற்கு மட்டும்.

வட கொரியாவின் அணு ஆயுத முஸ்தீபுகள், ஏவுகணைப் பரிசோதனைகள் குறித்து அடிக்கடிக் கேள்விப்படுகிறோம். அமெரிக்கா எப்படி இன்னும் இந்த ஒரு தேசத்தை மட்டும் ஒன்றும் செய்யாமல் விட்டு வைத்திருக்கிறது என்கிற வினா, அமெரிக்காவை நன்கறிந்த அத்தனைப் பேருக்கும் எழும். அதற்கு விடை தரும் விதமாக இந்த இதழில் (வட கொரியா, இது சரியா?) மிக விரிவானதொரு கட்டுரை எழுதியிருக்கிறார் பத்மா அர்விந்த். சர்வதேச அரசியலில் ஆர்வமுள்ள யாரும் தவறவிடக்கூடாத கட்டுரை இது.

அவ்வண்ணமே, ரணில் இலங்கை அதிபராகி நூறு நாள்கள் நெருங்குகின்றன. பொருளாதாரச் சீரழிவின் உச்சத்தைத் தொட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் தேசத்தை இடரிலிருந்து மீட்க இந்நாள்களில் அவர் என்ன செய்தார்? அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்கிறது ஸஃபார் அஹ்மதின் கட்டுரை.

ஸோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு குறித்த பாபுராஜின் கட்டுரை, துபாயில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் இந்து கோயில் குறித்த நசீமாவின் கட்டுரை, தமிழ் பத்திரிகைகளின் ஆதிகால வரலாற்றை சுவாரசியமாக விவரிக்கும் அறிவனின் கட்டுரை என்று இந்த இதழில் வாசிக்கவும் நேசிக்கவும் ஏராளமாக உள்ளன.

மெட்ராஸ் பேப்பர் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களையும் சந்தாதாரராக்குங்கள். நாம் இணைந்து இதனை ஒரு தரமான வாசிப்பு இயக்கமாக முன்னெடுப்போம்.

சிறப்புப் பகுதி: அது ஒரு காலம்

நோபல் பரிசு

எட்டுத் திக்கும்

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

உலகம்

இருண்டு போன இரண்டு நாடுகள்

28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...

உலகம்

அமெரிக்காவின் கம்யூனிசத் தோழன்!

வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...

உலகம்

நைஜீரியா: ஒரு புதிய அடையாளப் புரட்சி

நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...

உலகம்

100 நாள் ஆட்சி: டிரம்ப் நாட் அவுட், நாடு நாக் அவுட்!

அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...

உலகம்

கனடா: கொண்டையில் ஒரு கூட்டணிப் பூ

கனடா பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தலுக்கு முன் பிரதமராக இருந்த மார்க் கார்னியின் தலைமையில்...

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

நீல வானம்

ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...

Read More
error: Content is protected !!