Home » Home 05-10-2022

வணக்கம்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி, பெருவெற்றி கண்டிருக்கிறது. இது அந்நாவல் அடைந்த வெற்றிக்குச் சற்றும் குறைந்ததல்ல. எழுபதாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழர்களால் கொண்டாடப்படும் நாவல் இன்னொன்றில்லை. தமிழ்நாட்டில் வாசிப்பு என்னும் செயல்பாட்டை ஒரு கடமையாக - இன்னும் சொல்லப் போனால் மதமாக வார்த்தெடுத்த நாவல் அது.

கல்கி அதனை எழுதிய காலம் தொட்டே அது இலக்கியமில்லை என்றொரு எதிர்க்குரல் இருந்து வந்திருக்கிறது. இன்று வரை அதுவும் ஓயவில்லை. பொன்னியின் செல்வன் ஒரு வெகுஜன வாசிப்புப் பிரதிதான். அதில் சந்தேகமில்லை. ஆனால், ஏராளமானோரின் விருப்பத்துக்குரியதாக இருப்பது கொலைபாதகமும் அல்ல. இன்று நவீன இலக்கியம் வாசிக்க வந்து சேர்ந்திருக்கும் சிறுபான்மை சமூகத்தில் பெரும்பாலானவர்கள் அங்கே கிளம்பி வந்தவர்கள்தாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் இன்று வரை நமக்குக் கல்கியும் பொன்னியின் செல்வனும்தான் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கலாம்.

இந்த இதழின் சிறப்புப் பகுதியாகப் பொன்னியின் செல்வன் இடம் பெறுகிறது. திரைப்பட விமரிசனத்தைப் பெனாத்தல் சுரேஷ் எழுதியிருக்கிறார். கல்கி தமது நாவலுக்குள் காட்டியிருக்கும் (சிறிதளவு) சரித்திரத்துக்கு இந்தப் படம் எவ்வளவு நெருங்கி வருகிறது என்று சு. க்ருபாசங்கர் ஆராய்கிறார். கல்கி என்கிற ஆளுமையின் சில அறியாத பக்கங்களை எஸ். சந்திரமௌலியின் கட்டுரை தொட்டுக் காட்டுகிறது. இத்திரைப்படத்துக்கோ, பொன்னியின் செல்வன் நாவலுக்கோ சற்றும் சம்பந்தமில்லாமல் சோழர்களின் முழுமையான வரலாற்றை மிகச் சுருக்கமாக - அதே சமயம் எதுவும் விடுபடாமல் விவரித்திருக்கிறார் அறிவன்.

நாம் இங்கே ஒரு திரைப்படத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஈரானில் ஓர் இளம் பெண் சரியாக ஆடை அணியவில்லை என்று (பொய்யான) காரணம் சொல்லிக் கொலையே செய்துவிட்டது காவல் துறை. கொதித்துப் போன மக்கள் அங்கே அரசுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபடத் தொடங்கி, நாளுக்கு நாள் அங்கே நிலவரம் தீவிரமடைந்து வருகிறது. இது ஒரு புரட்சியாக வெடித்து ஆட்சி மாற்றம் வரை சென்றாலும் வியப்பதற்கில்லை. ஈரான் நிலவரம் பற்றி இந்த இதழில் ஸஃபார் அஹ்மத் எழுதியுள்ள கட்டுரை மிகவும் முக்கியமானது.

ஈரானில் ஹிஜாப் பிரச்னை என்றால், பிரிட்டனில் பவுண்ட் பிரச்னை. வரலாறு காணாத நாணய மதிப்புச் சரிவு ஏற்பட்டு, புதிய பிரதமர் விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறார் அங்கே. ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை, பிரிட்டன் நிலவரத்தைத் துல்லியமாக விளக்குகிறது.

நமது ரிசர்வ் வங்கி புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் டோக்கனைசேஷன் நடைமுறை குறித்து பிரபு பாலா எழுதியுள்ள கட்டுரை பல நுணுக்கமான விவரங்களை உள்ளடக்கியது. ஆன்லைன் பணப் பரிவர்த்தனை சர்வ சாதாரணமாகியிருக்கும் காலத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தப் புதிய உத்தியின் சாதக பாதகங்களை இதில் அறிந்துகொள்ள முடியும்.

தந்தையின் புகழ் வெளிச்சத்தைத் தன்மீது பட அனுமதிக்காமல் தனது சொந்த முயற்சியால் ஊட்டச் சத்துத் துறையில் கொடி நாட்டியிருக்கும் திவ்யா சத்யராஜின் கதையும், எந்தப் பின்புலமும் இன்றித் தனது சொந்தத் திறமையால் மட்டுமே முன்னேறி உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கும் கௌதம் அதானியின் வெற்றிக் கதையும் நாம் கற்கச் சில பாடங்களைத் தருவன.

மேற்சொன்னவை தவிரவும் இந்த இதழில் நீங்கள் வாசித்து ரசிக்க இன்னும் பல அம்சங்கள் உண்டு. மெட்ராஸ் பேப்பரின் ஒவ்வொரு இதழையும் உங்கள் ரசனையை கௌரவிக்கும் விதமாகவே தயாரிக்கிறோம். இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து, அவர்களையும் சந்தா செலுத்தச் சொல்லுங்கள்.

உலகப் பத்திரிகை ஆனாலும் இது உங்கள் பத்திரிகை.

  • சிறப்புப் பகுதி: பொன்னியின் செல்வன்

    உள்ளே-வெளியே

    நம் குரல்

    இதுவும் இயற்கைப் பேரிடர்தான்!

    இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம்...

    உலகம்

    ஓயா ஊழலும் தீராத நல்லுறவும்

    அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்குக் கடந்தசில வாரங்களாய் ஒழுங்காய்த் தூக்கம் இருக்கவில்லை. டென்ஷனில் நகம் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார்கள். காரணம்...

    உலகம்

    அமெரிக்க மாணவர் போராட்டம்: அது வேறு, இது வேறு!

    திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரி கிளைவ்ஸ் விடுதியில் மாணவர்கள் தடியடி பட்டதை தமிழ்நாட்டில் யாரும் இன்னமும் மறந்திருக்க மாட்டார்கள். 25 வருடங்கள் முன்...

    அறுசுவை

  • தொடரும்

    aim தொடரும்

    AIM IT – 3

    அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையின் முக்கிய அங்கம் இவர். அவருக்கொரு செல்வமகள். தன் தந்தை ரோனன் சொல்லும் கதைகளைக் கேட்டால் தான் அச்சிறுகுழந்தைக்குத் தூக்கம் வரும். வழமை போலவே...

    Read More
    G தொடரும்

    G இன்றி அமையாது உலகு – 3

    3. இருவர் ஒரே வருடத்தில் பிறந்திருந்தாலும், அந்த இருவருக்கும் பிறந்த தேசங்கள் வேறு. தாய்மொழி வேறு. வளர்க்கப்பட்ட விதம் வேறு. குணங்கள் வேறு. ஆனால் இருவருக்குள்ளும் சிறு வயதிலிருந்து கணினி மீதான ஆர்வமும், புலமையும், அதில் ஏதேனும் பெரிதாக சாதிக்கவேண்டும் என்ற வேட்கையும், என்ன செய்யப்போகிறோம் என்ற...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை – 3

    3. சம்பள ஆராய்ச்சி நமக்குப் பணத்தைக் கொண்டுவரும் குழாய்களை வருவாய் மூலங்கள் அல்லது வழிகள் (Income Sources/Channels) என்கிறார்கள். இதை நாம் எளிமையாகப் ‘பணவழிகள்’ என்று சொல்வோம். எடுத்துக்காட்டாக, ஒருவர் அலுவலகம் சென்று வேலை பார்த்துச் சம்பளம் பெறுகிறார், இன்னொருவர் கடை வைத்துப் பொருட்களை...

    Read More
    உரு தொடரும்

    உரு – 3

    பள்ளிக்கூடம் போகாமலே… முத்துவின் அம்மாவுக்குத் தையல் கடை வேலை, வீட்டு வேலை எல்லாம் போக வேறொரு சிறப்பு வேலை இருந்தது. பிள்ளைகளைத் தேடும் வேலை. முத்துவையும் அவர் தங்கையையும் அக்கம்பக்கத்தில் உள்ளோர் தூக்கிக் கொண்டுபோய் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இருவருமே கொஞ்சம் வெளிர்நிறத் தோலுடையவர்கள்...

    Read More
    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 98

    98 ஹீரோ ஓரிரு இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களில் தட்டுப்பட்ட, தன் புத்தக வெளியீட்டு விழாவில் பார்த்த முகத்தை பஸ்ஸில் பார்த்தது கொஞ்சம் பரபரப்பாக்கிவிட்டது. பெண்களை முன்பின் பார்க்காதவனோ பழகாதவனோ இல்லை என்றாலும் இந்தப் பெண் சற்றே வெட்கத்துடன் சிரித்ததைப்போலத் தோன்றியது வேறு  ஆர்வத்தைக் கூட்டிவிட்டது...

    Read More
    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 3

    3. இரு வேறு ஃபாரினர்ஸ் இன்னும் ஓர் இடமாற்றம். வேறொரு கிராமம். மற்றுமொரு பள்ளி. இப்போது நான் வளர்ந்த சிறுவன். நான்காம் வகுப்புக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். கேளம்பாக்கம் பஞ்சாயத்து ஒன்றியத் தொடக்கப்பள்ளி. இந்தத் தொடக்கப்பள்ளிக் கட்டடம் இருக்கும் அதே வளாகத்துக்குள்ளேயே அப்பா மாற்றலாகி வந்திருக்கும்...

    Read More
    error: Content is protected !!