Home » Home 21-09-22

வணக்கம்

இந்த இதழின் சிறப்புப் பகுதிக்கான அறிவிப்பை வெளியிட்டது முதலே, ‘இதில் எழுதவும் அறியவும் என்ன உள்ளது?’ என்று பலர் மின்னஞ்சல் மூலம் கேட்டார்கள். சொகுசு என்பது நபருக்கு நபர் மாறக்கூடிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சொகுசு விரும்பாத மனிதர் என்று யாரும் இருக்க முடியாது. முற்றும் துறந்த முனிவர்கள்கூட உட்காருவதற்குப் புலித்தோல் கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லுவதில்லை.

எவ்வளவோ விஷயங்களுக்கு நாம் ஏங்கியிருப்போம். நாம் ஏங்கியவை வேறொருவருக்கு எளிதாக வாய்த்திருக்கும். அவருக்கு அதன் அருமை தெரியாமலும் இருக்கலாம். வாழ்க்கையின் அலகிலா விளையாட்டுகளுள் ஒன்றல்லவா இது? இந்த இதழில் அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையின் சொகுசு ஏற்பாடுகள் பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரையை வாசித்துப் பாருங்கள். கூடவே அமெரிக்க அதிபர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளையும் கவனியுங்கள். கூப்பிட்டுக் கொடுத்தாலும் வேண்டாம் அப்பதவி என்று சொல்லிவிடத் தோன்றும்.

இந்த இதழின் இன்னொரு முக்கியமான கட்டுரை, அரசு வேலையைப் பெறுவது பற்றியது. சொகுசு வரையறை தாண்டி இக்கட்டுரை நமக்குத் தெரியப்படுத்தும் உண்மைகள் பல. அரசுப் பணியின் சௌகரியங்கள் குறித்து நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அவை உண்மை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவற்றுக்கு அப்பால் அந்தப் பணியைப் பெறுவது தொடங்கி, நீடித்து இருந்து ஓய்வு பெறுவது வரை கடக்க வேண்டிய கண்டங்களை எவ்வளவு பேர் அறிவார்கள்?

எழுத்தாளர்கள், மாணவர்கள், சுற்றுலாவில் சொர்க்கம் தேடுவோர் என்று பல தரப்பினரின் சொகுசு ஆர்வங்கள் குறித்த கட்டுரைகள் இவ்வாரம் உங்கள் ரசனைக்கு விருந்தாக இருக்கும்.

பிரிட்டிஷ் இளவரசர் என்று பன்னெடுங்காலமாக நம் மனத்தில் நிரந்தரமாக அமர்ந்துவிட்ட சார்லஸ் இப்போது மன்னர் சார்லஸ் ஆகியிருக்கிறார். அவரைக் குறித்து ஜெயரூபலிங்கம் எழுதியுள்ள கட்டுரை மிக நீண்டதொரு வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைச் சுருக்கமாகக் காட்சிப்படுத்துகிறது.

உளவாளிகளுள் டபுள் ஏஜெண்டுகளாக இருந்தோர் பலர் உண்டு. ஆனால் ஒரு தேசத்தின் அதிபருடைய மருமகனே வேறொரு தேசத்துக்கு உளவு சொல்லி வந்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது. அஷ்ரப் மர்வான் என்கிற இஸ்ரேலிய உளவாளியின் கதையைக் கொண்டு நூறு நாவல்கள், ஆயிரம் திரைப்படங்கள் உருவாக்கலாம். திகைப்பூட்டும் தகவல்களைக் கொண்ட ஸஃபார் அஹ்மதின் கட்டுரையை மிகவும் ரசிப்பீர்கள்.

ஒட்டகம் மேய்ப்பவர்களின் வாழ்வைப் படம் பிடிக்கும் நசீமாவின் கட்டுரை, நாம் விரும்பி உண்ணும் சிற்றுண்டிகளின் வரலாறைப் பேசும் முருகு தமிழ் அறிவனின் கட்டுரை, எந்தத் தொழிலிலும் வெற்றி பெறத் தேவையான மிக முக்கியமான அடிப்படைக் குணம் ஒன்றைத் துலக்கிக் காட்டும் ‘பிரிட்டானியா’ உயரதிகாரி அரசு கேசவன் குறித்து ராஜ்ஶ்ரீ செல்வராஜ் எழுதியுள்ள கட்டுரை, உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளின் ‘ஒரு நாள்’ என்பது எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பதை விவரிக்கும் ரங்காவின் கட்டுரை - இவையெல்லாம் இந்த இதழுக்கு அழகு சேர்க்கின்றன.

மெட்ராஸ் பேப்பர் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து, சந்தா செலுத்தச் சொல்லுங்கள். இது நாம் இணைந்து இழுக்கும் தேர்.

சிறப்புப் பகுதி: சொகுசு

நம்மைச் சுற்றி

உலகம்

இருண்டு போன இரண்டு நாடுகள்

28 ஏப்ரல் 2025, திங்கள் கிழமை மதியம் பன்னிரண்டரை மணியளவில் ஐபீரியத் தீபகற்பம் என அழைக்கப்படும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளின் பகுதிகளில் ஒரு திடீர்...

உலகம்

அமெரிக்காவின் கம்யூனிசத் தோழன்!

வியட்நாம் போர் முடிந்த ஐம்பது ஆண்டு நிறைவு அண்மையில் அனுசரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் வட வியட்நாம் படையினர் தென் வியட்நாம் தலைநகரான...

உலகம்

நைஜீரியா: ஒரு புதிய அடையாளப் புரட்சி

நைஜீரியாவில் தாய்மதத்துக்குத் திரும்புவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இன்றைய தேதியில் இதுதான் அந்தப் பிராந்தியத்தின் தலைப்புச் செய்தி. நைஜர் ஆற்றின்...

உலகம்

100 நாள் ஆட்சி: டிரம்ப் நாட் அவுட், நாடு நாக் அவுட்!

அரசியல் தலைமைகளை மதிப்பிடுவதற்கு அமெரிக்காவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல் ‘நூறு நாள் மதிப்பீடு’ ஆகும். குற்றவாளியாகக்...

நாலு விஷயம்

நம் குரல்

போர்க்காலம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத முகாம்களின்மீது இந்தியா...

தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 155

சஞ்சய் காந்திக்கு நேரெதிரான மென்மையான குணம் கொண்டவர் ராஜிவ் காந்தி. சிறு வயது முதலே அவர்களின் சுபாவம் அப்படித்தான். ராஜிவ் பிறந்து சுமார் இரண்டு வருடங்களுக்கு எல்லாம் சௌகரியமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. 1946ல் இந்திரா காந்தியும், ஃபெரோஸ் காந்தியும் அலகாபாத்திலிருந்து லக்னௌவிற்கு இடம்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

நீல வானம்

ஜில்லா படத்தில் மோகன்லால் ஒரு பெரிய ரவுடி. அவருடைய செயல்களினால் வரும் பாதிப்புகளைப் பார்த்துத் திருந்தும் மகனாக வரும் விஜய், தந்தையை எதிர்த்து வேலை செய்வார். இந்தக் கதையைப் போன்றது, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட “ப்ளூஸ்கை” செயலியின் கதை. ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்சி, அதன்...

Read More
error: Content is protected !!