Home » Home-10-08-2022

வணக்கம்

வாசக நண்பர்கள் அனைவருக்கும் முன் தேதியிட்ட, மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திரத்துக்குப் பிறகு நாம் எவ்வளவு வளர்ந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், இலங்கை, மியான்மர் போன்ற நம் பக்கத்து நாடுகளை ஒரு பார்வை பார்த்தால் போதும். இந்திய தேசியம் என்பது மதச் சார்பின்மை என்னும் வலுவான சித்தாந்தத்தால் கட்டப்பட்டது. இன்று வரை நாம் பெற்ற நல்லவை அனைத்தும் அதன் மூலம் சாத்தியமானவை. இன்று வரை இங்கே நிகழ்ந்த விபத்துகள் யாவும் மதம் முன்னுக்குத் தள்ளப்படும்போது நேர்ந்தவையே. இன்றைய தலைமுறையும் இனி வரும் தலைமுறையும் இதைச் சரியாகப் புரிந்துகொண்டுவிட்டால் இன்னும் மேலே செல்வதில் சிக்கல் இராது.

இந்த இதழ், எதிர்பாரா விதமாக இரண்டு சிறப்புப் பகுதிகளைக் கொண்டு அமைந்துவிட்டது. ஒன்று, முன்பே அறிவித்திருந்த மின்நூல் உலகம். இன்னொன்று இந்திய சுதந்திரப் பவழ விழாக் கொண்டாட்டம்.

இந்தத் தலைமுறை அறிந்திராத மகத்தான சுதந்திரப் போராட்ட வீரரும் சிந்தனையாளருமான ம.பொ.சிவஞானத்தின் ‘விடுதலைப் போரில் தமிழகம்’ வரலாற்று ஆவணத்தை மறு அறிமுகப்படுத்தும் கட்டுரையும், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை ஓர் அரிசியில் எழுதுவது போல நுணுக்கமாகச் செதுக்கியிருக்கும் முருகு தமிழ் அறிவனின் கட்டுரையும் இப்பகுதியின் சிறப்புப் பக்கங்கள்.

1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அன்று வெளியான பத்திரிகைகளில், சுதந்திரக் கொண்டாட்டத்துக்கு அப்பால் வேறென்ன செய்திகள் இடம் பெற்றிருந்தன? பழைய பத்திரிகைப் பிரதிகளுக்குள் ஒரு சுவாரசியமான பயணம் மேற்கொண்டிருக்கிறார் ஶ்ரீதேவி கண்ணன்.

ஊர் முழுதும் பொன்னியின் செல்வனைப் பேசிக்கொண்டிருக்கிறது. எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மா, பொன்னியின் செல்வன் யாத்திரை ஒன்றை நடத்தி முடித்துத் திரும்பியிருக்கிறார். சுவாரசியம் மிக்க அவரது பயண அனுபவங்களைத் தொகுத்துத் தருகிறார் பால கணேஷ்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுள் ஒன்றுதான் இப்போது வெளியாகியிருக்கிறது. கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் இன்று மாநிலம் முழுதும் பிரபலம். கலெக்டராக எண்ணியவரைக் கவிஞனாக்கி அழகு பார்த்த வாழ்க்கையை இந்த இதழில் அவர் திரும்பிப் பார்க்கிறார்.

மின்நூல் உலகம் சிறப்புப் பகுதிக்கென முகில் எழுதியுள்ள கட்டுரை மிகவும் முக்கியமானது. கிண்டிலில் நூல் வெளியிடுவது சார்ந்து பல எழுத்தாளர்களுக்கு இருக்கும் மனத் தடைகளைத் தகர்க்கும் கட்டுரை அது.

அந்த மனத்தடைக்குக் காரணமான ‘திருட்டு’ விவகாரம் குறித்தும் தனியே ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. எத்துறையானாலும் வளர்ச்சி என்பது சில இடர்பாடுகளையும் உள்ளடக்கியதுதான். ஆனால், தமிழ்ச் சூழலில் வாசிப்பு என்னும் செயல்பாடே இன்னும் தவழும் நிலையில்தான் இருக்கிறது என்னும்போது இந்த இடர்கள் பூதாகாரமாகத் தோன்றுவது புரிந்துகொள்ளக் கூடியதே.

அச்சு-மின்நூல்-ஒலிநூல்-ஒளிப்படக் காட்சிகள் அனைத்தும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இனி வரும் காலம் இவை எதையும் ஒதுக்கி வைக்க இடம் தராது. இந்தச் சிறப்புப் பகுதி அதைத் தெளிவாகப் புரியவைக்கும்.

மெட்ராஸ் பேப்பர் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழை மேலும் சிறப்பாகக் கொண்டு வர உங்கள் ஆலோசனைகளைத் தாருங்கள்.

  • சிறப்புப் பகுதி: மின்நூல் உலகம்

    மின்நூல்

    வைர சூத்திரம் – மின்நூல்

    மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்கு வணக்கம். இது நமது நூறாவது இதழ். இத்தருணம் தரும் மகிழ்ச்சியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாகப் பிரத்தியேகமாக...

    நுட்பம் மின்நூல்

    மின்நூல்கள்: வாசிப்பின் எதிர்காலம்

    புத்தக வாசிப்பு என்பது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தொடக்கம் முதலே மைனாரிடிகளின் செயல்பாடாக மட்டுமே இருந்து வருவது. தமிழில் பல்லாயிரக் கணக்கில்...

    நுட்பம் மின்நூல்

    ஒரு பெரும் பாய்ச்சல்

    இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பாகம் முடிந்திருந்த சமயம். முப்பதுகளில் டூரிங் டாக்கீஸ் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம், அமெரிக்க எழுத்தாளர் பாப்...

    நுட்பம் மின்நூல்

    திருட்டுலகம்

    பிரபல ஆங்கில எழுத்தாளர்களின் அச்சுப் புத்தகங்கள் வெளியாகும் போதே இன்னொரு பக்கம் சுடச்சுட அவற்றின் திருட்டு அச்சுப் புத்தகங்களும் வெளியாகும்...

    இந்தியா - 75

    இந்தியா

    ஒரு நாடு, ஒரு வானம்

    நாளொன்றுக்கு ஆயிரத்து இருநூறு சொச்சம் விமானங்கள் விண்ணில் ஏறும் / தரை இறங்கும். கொஞ்சம் மெனக்கெட்டுக் கணக்கு பார்த்தால், நிமிடத்திற்கு ஒரு விமானம்...

    அறுசுவை

    நம் குரல்

    இதுவும் இயற்கைப் பேரிடர்தான்!

    இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம்...

  • தொடரும்

    aim தொடரும்

    AIM IT – 3

    அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையின் முக்கிய அங்கம் இவர். அவருக்கொரு செல்வமகள். தன் தந்தை ரோனன் சொல்லும் கதைகளைக் கேட்டால் தான் அச்சிறுகுழந்தைக்குத் தூக்கம் வரும். வழமை போலவே...

    Read More
    G தொடரும்

    G இன்றி அமையாது உலகு – 3

    3. இருவர் ஒரே வருடத்தில் பிறந்திருந்தாலும், அந்த இருவருக்கும் பிறந்த தேசங்கள் வேறு. தாய்மொழி வேறு. வளர்க்கப்பட்ட விதம் வேறு. குணங்கள் வேறு. ஆனால் இருவருக்குள்ளும் சிறு வயதிலிருந்து கணினி மீதான ஆர்வமும், புலமையும், அதில் ஏதேனும் பெரிதாக சாதிக்கவேண்டும் என்ற வேட்கையும், என்ன செய்யப்போகிறோம் என்ற...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை – 3

    3. சம்பள ஆராய்ச்சி நமக்குப் பணத்தைக் கொண்டுவரும் குழாய்களை வருவாய் மூலங்கள் அல்லது வழிகள் (Income Sources/Channels) என்கிறார்கள். இதை நாம் எளிமையாகப் ‘பணவழிகள்’ என்று சொல்வோம். எடுத்துக்காட்டாக, ஒருவர் அலுவலகம் சென்று வேலை பார்த்துச் சம்பளம் பெறுகிறார், இன்னொருவர் கடை வைத்துப் பொருட்களை...

    Read More
    உரு தொடரும்

    உரு – 3

    பள்ளிக்கூடம் போகாமலே… முத்துவின் அம்மாவுக்குத் தையல் கடை வேலை, வீட்டு வேலை எல்லாம் போக வேறொரு சிறப்பு வேலை இருந்தது. பிள்ளைகளைத் தேடும் வேலை. முத்துவையும் அவர் தங்கையையும் அக்கம்பக்கத்தில் உள்ளோர் தூக்கிக் கொண்டுபோய் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இருவருமே கொஞ்சம் வெளிர்நிறத் தோலுடையவர்கள்...

    Read More
    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 98

    98 ஹீரோ ஓரிரு இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களில் தட்டுப்பட்ட, தன் புத்தக வெளியீட்டு விழாவில் பார்த்த முகத்தை பஸ்ஸில் பார்த்தது கொஞ்சம் பரபரப்பாக்கிவிட்டது. பெண்களை முன்பின் பார்க்காதவனோ பழகாதவனோ இல்லை என்றாலும் இந்தப் பெண் சற்றே வெட்கத்துடன் சிரித்ததைப்போலத் தோன்றியது வேறு  ஆர்வத்தைக் கூட்டிவிட்டது...

    Read More
    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 3

    3. இரு வேறு ஃபாரினர்ஸ் இன்னும் ஓர் இடமாற்றம். வேறொரு கிராமம். மற்றுமொரு பள்ளி. இப்போது நான் வளர்ந்த சிறுவன். நான்காம் வகுப்புக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். கேளம்பாக்கம் பஞ்சாயத்து ஒன்றியத் தொடக்கப்பள்ளி. இந்தத் தொடக்கப்பள்ளிக் கட்டடம் இருக்கும் அதே வளாகத்துக்குள்ளேயே அப்பா மாற்றலாகி வந்திருக்கும்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 102

    102. முதல் ஜானாதிபதி பிரதமர் நேருவுடன் அமெரிக்காவுக்கு யாரெல்லாம் செல்வது என்பது முடிவாயிற்று. உடல் பலகீனமாக இருந்தாலும், தந்தையோடு அமெரிக்கா செல்வதற்குத் தயாரானார் இந்திரா. ஆனால், தன்னைப் பழி வாங்க அமெரிக்காவில் இந்தியத் தூதர் பொறுப்பு வகிக்கும் அத்தை விஜயலட்சுமிபண்டிட் ஒரு திட்டம் போட்டு...

    Read More
    error: Content is protected !!