இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவின் வரலாறு மிக நீண்டது. ரஷ்யாவின் இதர நட்பு நாடுகளுடன் நமக்கு உரசலும் விரிசலும் ஏற்பட்ட காலங்களில்கூட ரஷ்ய உறவு...
வணக்கம்
வழக்கத்தினும் இந்த ஆண்டுக் கோடை ஒரு நவீன கவிதையாகவே காட்சி தருகிறது. வெளியே பத்து நிமிடங்கள் போய்விட்டு வீட்டுக்கு வந்தால் சிறிதுநேரம் ஒன்றுமே புரிவதில்லை. ஆணவமல்லாத ஏதோ ஒன்று கண்ணை மறைக்கிறது. ஐந்து நிமிடங்கள் அமைதியாகப் படுத்து எழுந்தால் சரியாகிவிடும் என்று பார்த்தால், படுக்கத்தான் முடிகிறதே தவிர, எழுந்திருக்க முடிவதில்லை. ஆனால் வெளியே போய்த்தான் தீர வேண்டியிருக்கிறது. வேலை பார்த்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. நமது அன்றாடங்களை எப்படி நம்மால் தவிர்க்க முடியாதோ அப்படித்தான் இயற்கைக்கும்.
இந்தக் கோடையை நேர்த்தியாகச் சமாளித்து வாழ இந்த இதழில் உபயோகமான நூறு டிப்ஸ் தருகிறார் காயத்ரி. ஒய். படித்துப் பயன்படுத்துவதுடன் எடுத்து பத்திரப்படுத்தி வையுங்கள். மீண்டும் அடுத்த கோடைக்கு உதவும்.
கர்நாடகத்தில் சித்தராமய்யாவும் துருக்கியில் எர்டோகனும் கணிப்புகளைப் பொய்யாக்கித் தமது மக்கள் ஆதரவை உறுதி செய்திருப்பதே வாரத்தின் சிறப்புச் செய்திகள். இதில், எர்டோகன் தேர்தலில் வென்ற சூழல் முக்கியமானது. துருக்கித் தேர்தலே என்றாலும் உண்மையில் இது அமெரிக்க-ரஷ்ய பலப்பரீட்சையின் இன்னொரு மறைமுக வடிவம். இந்த இதழ் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல, எண்பதுகளின் பனிப்போர் இப்போது வேறொரு முகம் கொண்டு மீண்டும் அரங்கேறத் தொடங்கியிருப்பது கண்கூடு. துருக்கி தேர்தல் முடிவுகளை முன்வைத்து (என்னதான் மே 28 அன்று இறுதிப் பரீட்சை இருந்தாலும்) ஸஃபார் அஹ்மத் எழுதியிருக்கும் கட்டுரை, உலகம் எதிர்கொள்ளவிருக்கும் அடுத்தக்கட்ட அரசியல் நெருக்கடிகளின் களம் என்னவாக இருக்கப் போகிறது என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது.
வினுலா எழுதியுள்ள ‘அடையாளங்களை அழித்தொழிப்போம்’ இன்னொரு மிக முக்கியமான கட்டுரை. தொடக்க காலம் முதலே உக்ரைனின் கலாசார-பண்பாட்டு வேர்களை நாசம் செய்யும் முயற்சியில் ரஷ்யா இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதை இக்கட்டுரை துல்லியமாகப் படம்பிடிக்கிறது. ஓர் இனத்தை வேரறுப்பது என்பதன் முதல்படி, அதன் பண்பாட்டு அடையாளங்களை அப்புறப்படுத்துவதேயாகும். காலம் காலமாக ரஷ்யா இதனை ஒரு செயல்திட்டமாகவே முன்வைத்து இயங்கி வருவதைத் தோலுரிக்கும் இக்கட்டுரையை நீங்கள் உலகின் பல ஏகாதிபத்திய-கோலோச்சு சக்திகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மிக நிச்சயமாக, இக்காலக்கட்டத்தின் மாபெரும் அச்சுறுத்தல் அமெரிக்காவோ வட கொரியாவோ அல்ல; ரஷ்யாதான் என்பது புலப்படும்.
வட கொரியா என்றதும் அதன் சமீபத்திய உளவு சாட்டிலைட் முயற்சியைக் குறித்துப் பேசாதிருக்க முடியாது. தென் கொரியாவைக் கண்காணிக்க என்று வட கொரிய அதிபர் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விடுவார். உண்மை அதுவல்ல. தெற்காசியப் பிராந்தியத்தின் நிரந்தரத் தலைவலியாக உருவெடுப்பதை ஒரு செயல்திட்டமாக வைத்துக்கொண்டு இயங்கிவரும் வட கொரியாவின் இந்த உளவு சாட்டிலைட் அமெரிக்காவின் கோபத்தை வலுவாகக் கிளறிவிட்டிருப்பது திண்ணம். இது குறித்த விரிவான கட்டுரை ஒன்றைச் சிவராமன் கணேசன் எழுதியிருக்கிறார்.
ட்விட்டரின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகியிருக்கும் பெண்மணி குறித்து, அரிசியே பயன்படுத்தாத அண்ணாநகர் உணவகம் குறித்து, நாய் வளர்ப்போர் அதிகரித்திருக்கும் சூழலில் ஒரு நாயை வளர்க்க ஆகும் மொத்த செலவு என்ன என்பது குறித்து, காலாவதியாகப் போகிற இரண்டாயிரம் ரூபாய் நோட்டின் துர்மரணம் குறித்து, அனைத்து வெப் பிரவுசர்களிலும் உள்ள இன்காக்னிடோ வசதி ஏன் என்பது குறித்து - எது மிச்சம்?
எல்லா விதமான ருசிகளுக்கும் இடம் தரும் கட்டுரைகளுடன் இந்த இதழ் வெளியாகியிருக்கிறது. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழ் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து அவர்களையும் சந்தாதாரர் ஆக்குங்கள்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
நம்மைச் சுற்றி
தலைக்குள் ஒரு மஞ்சள் ஸ்ட்ராவைப் போட்டு, ‘க்ளக் க்ளக்’கென சூரியன் உறிஞ்சுவதைப் போன்று ஒரு விளம்பரத்தில் வரும். இப்பொழுது அடிக்கும் வெயில் அப்படித்தான்...
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூபாய் நோட்டில் வைத்த சிப்ஸ் நமுத்துப் போனதால் திரும்பப்...
அன்றைய தினம் பொழுது விடிந்ததிலிருந்தே ‘ருத்ரன்’ படத்தை நாலு தடவை பார்த்துத் தொலைத்தவள் போல வெறுப்பாக எரிந்து விழுந்து கொண்டிருந்தாள் இகவின் மனைவி...
மீல்ஸ், இட்லி, தோசை. இங்கிருக்கும் பெரும்பாலான ஹோட்டல்களின் மெயின் டிஷ் இவைதாம். இதற்கான முக்கிய மூலப்பொருள் அரிசி. ஆனால் அரிசியே உபயோகிக்காமல் ஒரு...
உலகைச் சுற்றி
முதல் உலகப் போர் முடிவடைந்து, மேற்கு நாடுகளனைத்தும் போரின் தாக்கத்தில் இருந்து மீளப் பாடுபட்டுக்கொண்டிருந்த சமயம். 1922ம் ஆண்டு சில அமெரிக்க...
ஜல்லிக்கட்டுப் போராட்டம் – அன்றைய சூழலில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதா? உண்மையில் தமிழனின் கலாசார அடையாளத்தை மீட்டெடுக்க உருவெடுத்தது...
அவர் யார் என்று தெரியாது. அவரது பெயர் தெரியாது. அவரது மொழி தெரியாது. அம்முதிய பெண்மணி தரையில் அமர்ந்து ஒரு கல்லைத் தொட்டுக் கண்ணீர் வடித்துக்...
ட்விட்டரைச் சர்ச்சைக்குரியதாகவும் பரபரப்பாகவும் வைத்திருப்பவர் எலான் மஸ்க். இவர் தற்போது ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாகியை நியமித்திருக்கிறார்...
நாட்டின் அனைத்து ஆண்களும், பெண்களும் அங்கீகரிக்கப்பட்ட 28 சிகை அலங்காரங்களில் ஒன்றைத் தவிர வேறொன்றை கிராஃபிக்ஸில்கூட நினைத்தும் பார்க்கக்கூடாது...
துருக்கி அதிபர் ரஜப் தையிப் எர்டோகனுக்கு சங்கு சத்தம் கேட்டுக் கொண்டிருப்பதாகவே மே 14-ம் தேதி நடந்த அதிபர் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கு...
ஆயபயன்
தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என வளர்ந்துவரும் துறைகளின் பட்டியலில் சத்தமேயில்லாமல் சேர்ந்திருக்கிறது பெட் கேர் இண்டஸ்ட்ரி. அதாவது செல்லப்...
உலகம் செயலி மயமாகிவிட்டது. தொட்டதற்கெல்லாம் செயலிகள். செயலியின்றிச் செயலில்லை. ஆனால் கணக்குப் போட்டுப் பார்த்தீர்கள் என்றால் ஒரு சில நூறு...
96 போன்ற திரைப்படங்களைப் பார்த்து ரசிக்கிறோம். உண்மையில், பள்ளி மாணவர்களுக்கு வருகிற காதல், அவர்களது எதிர்காலத்தைக் கபளீகரம் செய்துவிடும் அபாயம்...
“யோக்கியனுக்கு இருட்டுல என்னடா வேல?” என்றொரு வடிவேலு பட வசனம். நாமனைவருமே பார்த்து ரசித்திருப்போம். அதற்கு இணையானது தான், “நல்லவனுக்கு எதுக்குடா...
தொடரும்
51 வாழ்வும் ஆரம்ப வரிகளும் ‘மாயவரம் ஜங்ஷனில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பியபோது, வண்டியில் மூன்றாவது ஆத்மா ஒன்று என் தோல் பையையும் துணிப் பையையும் நடுவே நகர்த்தி, என் இடத்தில் உட்கார்ந்து பூரி உருளைக்கிழங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தது’னு அக்பர் சாஸ்திரிய ஆரம்பிப்பார் ஜானகிராமன்...
கடின உழைப்பாளி நிறைய எதிர்பார்ப்புகளோடு இரண்டரை மணி நேரத்துக்கும் மேலான நீண்ட பேருந்துப் பயணம் செய்தார் ஒரு இளைஞர். போன இடத்தில் மற்றவர்களைப் பார்த்தால் கோட்டும் சூட்டும் டையுமாக இருக்கிறார்கள். பயணத்தினால் வந்த களைப்புடன் ஜீன்ஸ் அணிந்து வந்திருக்கும் தன் கோலத்தைப் பார்க்க அவருக்கே கஷ்டமாக இருந்தது...
26. பண்டிதமணி கதிரேசன் செட்டியார் (16.09.1881 – 24.10.1953) தமிழினம் என்பதற்கு உலகம் அறிந்த ஒரு உரைகல் வாக்கியம் உண்டு. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பதுதான் அது. உலகம் முழுக்கப் புகழ்பெற்ற அந்த வாக்கியத்தின் பொருள், எந்த ஊரும் எந்தன் ஊரே, உலகத்தில் வாழும் எந்த ஒரு மானுடரும்...
இறப்பினைத் தள்ளிப் போட முடியுமா? இறப்பினைக் கண்டு அஞ்சாதவர் இந்த உலகில் இருக்க முடியாது. ஒரு சில பேர் இருக்கக்கூடும். ஆனால் பெரும்பாலானோர்க்கு இறக்கும் நாள் தெரிந்துவிட்டால் வாழ்க்கை நரகம்தான். அனைவரையும் ஆட்டிப் படைக்கக்கூடிய இறப்பினைத் தள்ளிப் போட முடியுமா? ஒரு நாள், இரு நாள் இல்லை… பல...
52. கல்கத்தா மாநாடு ஜவஹர்லால் நேரு, அத்தனை துடிப்புடன் செயல்பட்டதற்கு என்ன காரணம்? சைமன் கமிஷனுக்கு நாடெங்கும் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பு, ஜவஹர்லால் நேருவுக்கு மக்கள் மனதில் எழுந்துள்ள சுதந்திர உணர்ச்சியை எடுத்துக் காட்டியது. அறிவுஜீவிகள் தொடங்கி, இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துத்...