நான் அங்கு சுகமா, நீ இங்கு சுகமே, நலம், நலமறிய ஆவல் என்பது தமிழ்த் திரையுலகில் ஒரு புகழ்பெற்ற பாட்டு. பார்க்காமலேயே காதல் என்ற பொருண்மையில் வெளிவந்த அந்தத் திரைப்படத்தில் நாயகனும், நாயகனும் அஞ்சல்கள் வழியே மட்டும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு இருக்கும் போது அவர்களிடையே இணக்கம் வந்து நேசம் மலர்ந்து விடுவதாகக் கதை. திரைப்படம் வந்த காலத்தில் வித்தியாசமான திரைப்படம் என்று அது சிறிது நன்றாக ஓடியது. மக்களுக்கு நாயகனும், நாயகியும் அஞ்சல்கள் வழியாக மட்டும் ஒருவரை அறிந்து கொண்டு, நேசிக்கத் தொடங்குகிறார்கள் என்பது, திரைப்படம் வந்த காலத்தின் புதுமையாகத் தோன்றியதால் அத்திரைப்படம் வெற்றி பெற்றி விட்டது.
இதைப் படித்தீர்களா?
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். அவர் அந்தப் பதவிக்கு வந்தது அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல் தங்கள் நாட்டுக்கும் நல்லது...
புரட்சி எல்லாம் செய்து இரண்டாவது முறை விடுதலை பெற்ற சிரியாவின் தற்போதைய நிலை என்ன? சிரியாவில் பத்தில் ஏழு பேருக்கு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய...
Add Comment