நான் அங்கு சுகமா, நீ இங்கு சுகமே, நலம், நலமறிய ஆவல் என்பது தமிழ்த் திரையுலகில் ஒரு புகழ்பெற்ற பாட்டு. பார்க்காமலேயே காதல் என்ற பொருண்மையில் வெளிவந்த அந்தத் திரைப்படத்தில் நாயகனும், நாயகனும் அஞ்சல்கள் வழியே மட்டும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு இருக்கும் போது அவர்களிடையே இணக்கம் வந்து நேசம் மலர்ந்து விடுவதாகக் கதை. திரைப்படம் வந்த காலத்தில் வித்தியாசமான திரைப்படம் என்று அது சிறிது நன்றாக ஓடியது. மக்களுக்கு நாயகனும், நாயகியும் அஞ்சல்கள் வழியாக மட்டும் ஒருவரை அறிந்து கொண்டு, நேசிக்கத் தொடங்குகிறார்கள் என்பது, திரைப்படம் வந்த காலத்தின் புதுமையாகத் தோன்றியதால் அத்திரைப்படம் வெற்றி பெற்றி விட்டது.
இதைப் படித்தீர்களா?
தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...
“காலணி இல்லாமல் நடக்காதே, தரையெல்லாம் கண்ணாடித் துகள்கள்” என்று அமெரிக்காவில் கமலா ஹாரீஸ் பதவி ஏற்ற அன்று சித்திரம் வரையாத பத்திரிகைகள் இல்லை...
Add Comment