பிருஹன்னளையாக அர்ச்சுனனும், மோகினி அவதாரமாக திருமாலும் இதிகாசங்களில் தங்களை முழுமையாகப் பெண்ணாக உணர்ந்து செயல்பட்ட தருணங்களும் அதைக் கொண்டாடும் விழாக்களும் உண்டு. மாற்றுப்பாலினம் புதிதில்லை. பிறந்த போது பெற்றோர்களாலும் மருத்துவர்களாலும் ஆண் அல்லது பெண் என்று ஓர் அடையாளம் தரப்படுகிறது. அப்படித்தான் சுற்றமும் நட்பும் வளர்க்கிறது. ஆனால், நாளடைவில் ஏதோ ஒரு கட்டத்தில் நான் அதுவல்ல என்று சிலருக்கு தோன்றிவிடுகிறது. சிலர்தான் என்றாலும சிக்கல் பெரிது. கொடுக்கப்பட்ட அடையாளங்களுக்கும் அவர்களாக உணரத் தொடங்கும் அடையாளங்களுக்கும் இடையே பேதங்கள் வருவதைத்தான் மருத்துவ உலகம் Gender dysphoria என அழைக்கிறது. உணரும் பாலின அடையாளத்தை உறுதிப்படுத்தும் சிகிச்சை முறைகள் பாலின உறுதிப்படுத்தும் சிகிச்சைகள் (gender affirmaition treatment) எனப்படும்.
இதைப் படித்தீர்களா?
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி, ரமலான் நோன்புத் தொடக்க...
திருவனந்தபுரத்தில் உள்ள KTCT மேல்நிலைப்பள்ளி அண்மையில் ஒரு புதிய ஆசிரியரைப் பணியில் சேர்த்தார்கள். இந்த ஆசிரியரின் பெயர் ஐரிஸ். தென்னிந்தியப் பெண்...
Add Comment