Home » நாய் அஷ்டோத்திரம்
நகைச்சுவை

நாய் அஷ்டோத்திரம்

தேவன்


நானும் என் ராஜமும் மைத்துனியின் கல்யாணத்திற்குச் சென்று விட்டு உத்தமர் கோவிலிலிருந்து ரயிலில் திரும்பி வந்து கொண்டிருந்தோம். ஏதோ ஒரு ஸ்டேஷனில் (பெரிய மனுஷர்களைப் போல் இந்த இடத்தில் எனக்கும் ஞாபகம் வர மறுக்கிறது!) பிளாட்பாரத்தின் எதிர்ப் புறமாக இரண்டு சின்னப் பயல்கள் வண்டிக்குள் தாவினார்கள். எட்டு, ஒன்பது வயதுக்குள்தான் இருக்கும்; அரையில் மிக அழுக்கான – ஜலத்தில் நனையாத – வஸ்திரம்தான் உடுத்தியிருந்தார்கள். நாங்கள் இருப்பதையே அவர்கள் லட்சியம் செய்யவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவுடன் அவர்களில் ஒரு பயல் “இன்னாடா நாய்! இங்கே எங்கேடா வந்தே?” என்று கேட்டான்.

அதற்கு இன்னொரு பயல், “இன்னாடா நாய்! நீ எங்கேடா இங்கே வந்தே?” என்று பதிலுக்கு அவனைத் திருப்பிக் கேட்டான்.

இந்த அறிமுகம் ஆன அப்புறம் அவர்கள் ஒருவரையொருவர் அணைத்தபடி அளவளாவிக் கொண்டு வந்தார்கள். “நாய்!” என்று பரஸ்பரம் கூப்பிட்டுக் கொண்டதில் ஏற்பட்ட ஆனந்தம் அவர்கள் அடுத்த ஸ்டேஷனில், வந்த வழியாகவே வெளியேறும் வரையில் இருந்தது.

இந்த உலகத்தில் ‘நாய்’ என்று அழைக்கப்பட்டுக் கூடச் சிறிதும் கோபம் கொள்ளாமல் வாயைத் திறந்து சிரித்து சந்தோஷத்தைக் காண்பிக்கும் இன்னொரு ஆத்மாவின் ஞாபகம் எனக்கு அப்போது வந்தது. ஒருகால் நாய் என்றால் என்ன என்று தெரிந்த பிறகு, அவ்வாறு அழைக்கப்பட்டதற்காக அந்த ஆத்மாவும் காலால் நம் முகத்தில் உதைக்கலாம். நான் சொல்கிறது பாப்பாக்களைப் பற்றி!

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!