சென்னை வண்டலூரை அடுத்து கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டிருக்கிறது. 88 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தப் பேருந்து நிலையத்தை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சுமார் 394 கோடி பொருட்செலவில் கட்டியிருக்கிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் திறப்பு விழாக் கண்டிருக்கிறது. கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் இதைத் திறந்து வைத்தார். டிசம்பர் 31-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியிருக்கும் இந்தப் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்காக என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன, சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பதை அறிய கிளாம்பாக்கத்திற்கு விசிட் செய்தோம்.
இதைப் படித்தீர்களா?
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற...
Add Comment