Home » Home 21-12-2022

வணக்கம்

இந்த இதழ் நமது மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் - செய்தியாளர்களின் ஆண்டறிக்கைச் சிறப்பிதழாகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இவர்களில் யாருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது. இப்போது வரையிலுமே பலர் நேரில் சந்தித்திராதவர்கள். வேறு வேறு தேசங்களில், வேறு வேறு தொழில்களில், வேறு வேறு வாழ்க்கை முறைகளில் இருப்பவர்கள். எழுத்தார்வமே இவர்களை ஒருங்கிணைத்தது. எழுத்து வகுப்புகளில் அறிமுகமாகி, எழுதத் தேர்ந்த பின்பு மெட்ராஸ் பேப்பருக்கு வந்தவர்கள். இந்த வருடம் தமது முதல் புத்தகத்தையும் எழுதி முடித்தவர்கள்.

வானளாவிய கட்டடங்களே ஆனாலும் ஒவ்வொரு செங்கல்லாகத்தான் வைத்துக் கட்டியாக வேண்டும். அவ்விதத்தில் இந்த எழுத்தாளர்கள் இந்த ஆண்டு எடுத்து வைத்திருக்கும் முதல் கற்கள் இவை.

எப்போதாவது தோன்றும்போது எழுதுவது என்பது வேறு. எழுத்தை ஒரு தினசரிப் பயிற்சியாக, வாழ்க்கை முறையின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்வது என்பது வேறு. இவர்கள் அனைவரும் விரும்பித் தம்மை எழுத்துக்கு ஒப்புக் கொடுத்தவர்கள். தனி வாழ்வின் கெடுபிடிகள், துயரங்கள் எவ்வளவு கனம் மிக்கதாயினும் அதை நகர்த்தி வைத்துவிட்டு எழுத்துப் பணிக்கு முக்கியத்துவம் தருபவர்கள்.

ஓர் உதாரணத்துக்கு ஸஃபார் அஹ்மத் எழுதியிருக்கும் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். சிங்களப் பேரினம் ஆளும் தேசத்தில் சிறுபான்மை இனத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்தால் பயங்கரவாதி என்று முத்திரையிட்டு, அவரை என்ன பாடு படுத்தியிருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். ரத்தக் கண்ணீர் வரச் செய்யும். ஆனால் இப்படியொரு இருப்பியல் நெருக்கடிக்கு இடையில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த சாயலே இல்லாமல் அவர் எழுதுகிற கட்டுரைகளை நினைவுகூர்ந்து பார்க்கலாம். எழுதுதல் என்னும் செயல்பாட்டுக்கு முழுமையாகத் தன்னை ஒப்புக்கொடுக்காத ஒருவருக்கு இது சாத்தியமேயில்லை.

கடந்து போகும் ஆண்டைத் திரும்பிப் பார்ப்பதென்பதை அனைவரும் செய்வார்கள். இந்த இதழில் நீங்கள் படிக்கவிருக்கும் கட்டுரைகள், அடுத்து வரும் ஆண்டை மேலும் ஆக்கபூர்வமாக அமைத்துக்கொள்ள மறைமுகமாகச் சில நுட்பங்களைக் கற்றுத் தரும்.

நிற்க. மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்களின் பதிமூன்று புத்தகங்களை ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனம் வெளியிடுவதை அறிவீர்கள். இதனை ஒரு வாசகர் திருவிழாவாகக் கொண்டாட விரும்புகிறோம். ஜனவரி 11, 2023 புதன்கிழமை மாலை ஐந்து மணிக்கு சென்னை கேகே நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் இச்சந்திப்பு நிகழும். இந்நிகழ்ச்சிக்கென நமது எழுத்தாளர்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் சென்னை வருகிறார்கள். வாசகர்கள் அனைவரையும் இந்நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைக்கிறோம். எழுத்தாளர்களை அங்கே நீங்கள் நேரில் சந்திக்கலாம். புத்தகங்களில் கையெழுத்து பெறலாம். புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். கேள்விகள் கேட்கலாம். விவாதிக்கலாம்.

இது மேடையில் இருப்பவர்கள் மட்டும் பேசும் நிகழ்ச்சியல்ல. வாசகர் பங்களிப்பே முதன்மையாக இருக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். வாருங்கள், சேர்ந்து கொண்டாடுவோம்.

சிறப்புப் பகுதி: திரும்பிப் பார்!

முன்னால் பார்!

நம் குரல்

என்ன செய்யப் போகிறார் மோடி?

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவின் வரலாறு மிக நீண்டது. ரஷ்யாவின் இதர நட்பு நாடுகளுடன் நமக்கு உரசலும் விரிசலும் ஏற்பட்ட காலங்களில்கூட ரஷ்ய உறவு...

உலகம்

அடையாளங்களை அழித்தொழிப்போம்!

ஜல்லிக்கட்டுப் போராட்டம் – அன்றைய சூழலில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதா? உண்மையில் தமிழனின் கலாசார அடையாளத்தை மீட்டெடுக்க உருவெடுத்தது...

சமூகம்

ஒரு பேரழிவின் மிச்சங்கள்

அவர் யார் என்று தெரியாது. அவரது பெயர் தெரியாது. அவரது மொழி தெரியாது. அம்முதிய பெண்மணி தரையில் அமர்ந்து ஒரு கல்லைத் தொட்டுக் கண்ணீர் வடித்துக்...

ஆளுமை

லிண்டா யாக்கரினோ: புதிய தலைவியும் பெரிய சவால்களும்

ட்விட்டரைச் சர்ச்சைக்குரியதாகவும் பரபரப்பாகவும் வைத்திருப்பவர் எலான் மஸ்க். இவர் தற்போது ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாகியை நியமித்திருக்கிறார்...

  • தொடரும்

    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 51

    51 வாழ்வும் ஆரம்ப வரிகளும் ‘மாயவரம் ஜங்ஷனில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பியபோது, வண்டியில் மூன்றாவது ஆத்மா ஒன்று என் தோல் பையையும் துணிப் பையையும் நடுவே நகர்த்தி, என் இடத்தில் உட்கார்ந்து பூரி உருளைக்கிழங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தது’னு அக்பர் சாஸ்திரிய ஆரம்பிப்பார் ஜானகிராமன்...

    Read More
    தல புராணம் தொடரும்

    ‘தல’ புராணம் – 26

    கடின உழைப்பாளி நிறைய எதிர்பார்ப்புகளோடு இரண்டரை மணி நேரத்துக்கும் மேலான நீண்ட பேருந்துப் பயணம் செய்தார் ஒரு இளைஞர். போன இடத்தில் மற்றவர்களைப் பார்த்தால் கோட்டும் சூட்டும் டையுமாக இருக்கிறார்கள். பயணத்தினால் வந்த களைப்புடன் ஜீன்ஸ் அணிந்து வந்திருக்கும் தன் கோலத்தைப் பார்க்க அவருக்கே கஷ்டமாக இருந்தது...

    Read More
    உயிருக்கு நேர் தொடரும்

    உயிருக்கு நேர் -26

    26. பண்டிதமணி கதிரேசன் செட்டியார் (16.09.1881 – 24.10.1953) தமிழினம் என்பதற்கு உலகம் அறிந்த ஒரு உரைகல் வாக்கியம் உண்டு. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பதுதான் அது. உலகம் முழுக்கப் புகழ்பெற்ற அந்த வாக்கியத்தின் பொருள், எந்த ஊரும் எந்தன் ஊரே, உலகத்தில் வாழும் எந்த ஒரு மானுடரும்...

    Read More
    கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

    கடவுளுக்குப் பிடித்த தொழில் – 26

    இறப்பினைத் தள்ளிப் போட முடியுமா? இறப்பினைக் கண்டு அஞ்சாதவர் இந்த உலகில் இருக்க முடியாது. ஒரு சில பேர் இருக்கக்கூடும். ஆனால் பெரும்பாலானோர்க்கு இறக்கும் நாள் தெரிந்துவிட்டால் வாழ்க்கை நரகம்தான். அனைவரையும் ஆட்டிப் படைக்கக்கூடிய இறப்பினைத் தள்ளிப் போட முடியுமா? ஒரு நாள், இரு நாள் இல்லை… பல...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை -52

    52. கல்கத்தா மாநாடு ஜவஹர்லால் நேரு, அத்தனை துடிப்புடன் செயல்பட்டதற்கு என்ன காரணம்? சைமன் கமிஷனுக்கு நாடெங்கும் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பு, ஜவஹர்லால் நேருவுக்கு மக்கள் மனதில் எழுந்துள்ள சுதந்திர உணர்ச்சியை எடுத்துக் காட்டியது. அறிவுஜீவிகள் தொடங்கி, இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துத்...

    Read More
    error: Content is protected !!