Home » Home 21-12-2022

வணக்கம்

இந்த இதழ் நமது மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் - செய்தியாளர்களின் ஆண்டறிக்கைச் சிறப்பிதழாகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இவர்களில் யாருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது. இப்போது வரையிலுமே பலர் நேரில் சந்தித்திராதவர்கள். வேறு வேறு தேசங்களில், வேறு வேறு தொழில்களில், வேறு வேறு வாழ்க்கை முறைகளில் இருப்பவர்கள். எழுத்தார்வமே இவர்களை ஒருங்கிணைத்தது. எழுத்து வகுப்புகளில் அறிமுகமாகி, எழுதத் தேர்ந்த பின்பு மெட்ராஸ் பேப்பருக்கு வந்தவர்கள். இந்த வருடம் தமது முதல் புத்தகத்தையும் எழுதி முடித்தவர்கள்.

வானளாவிய கட்டடங்களே ஆனாலும் ஒவ்வொரு செங்கல்லாகத்தான் வைத்துக் கட்டியாக வேண்டும். அவ்விதத்தில் இந்த எழுத்தாளர்கள் இந்த ஆண்டு எடுத்து வைத்திருக்கும் முதல் கற்கள் இவை.

எப்போதாவது தோன்றும்போது எழுதுவது என்பது வேறு. எழுத்தை ஒரு தினசரிப் பயிற்சியாக, வாழ்க்கை முறையின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்வது என்பது வேறு. இவர்கள் அனைவரும் விரும்பித் தம்மை எழுத்துக்கு ஒப்புக் கொடுத்தவர்கள். தனி வாழ்வின் கெடுபிடிகள், துயரங்கள் எவ்வளவு கனம் மிக்கதாயினும் அதை நகர்த்தி வைத்துவிட்டு எழுத்துப் பணிக்கு முக்கியத்துவம் தருபவர்கள்.

ஓர் உதாரணத்துக்கு ஸஃபார் அஹ்மத் எழுதியிருக்கும் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். சிங்களப் பேரினம் ஆளும் தேசத்தில் சிறுபான்மை இனத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்தால் பயங்கரவாதி என்று முத்திரையிட்டு, அவரை என்ன பாடு படுத்தியிருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். ரத்தக் கண்ணீர் வரச் செய்யும். ஆனால் இப்படியொரு இருப்பியல் நெருக்கடிக்கு இடையில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த சாயலே இல்லாமல் அவர் எழுதுகிற கட்டுரைகளை நினைவுகூர்ந்து பார்க்கலாம். எழுதுதல் என்னும் செயல்பாட்டுக்கு முழுமையாகத் தன்னை ஒப்புக்கொடுக்காத ஒருவருக்கு இது சாத்தியமேயில்லை.

கடந்து போகும் ஆண்டைத் திரும்பிப் பார்ப்பதென்பதை அனைவரும் செய்வார்கள். இந்த இதழில் நீங்கள் படிக்கவிருக்கும் கட்டுரைகள், அடுத்து வரும் ஆண்டை மேலும் ஆக்கபூர்வமாக அமைத்துக்கொள்ள மறைமுகமாகச் சில நுட்பங்களைக் கற்றுத் தரும்.

நிற்க. மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்களின் பதிமூன்று புத்தகங்களை ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனம் வெளியிடுவதை அறிவீர்கள். இதனை ஒரு வாசகர் திருவிழாவாகக் கொண்டாட விரும்புகிறோம். ஜனவரி 11, 2023 புதன்கிழமை மாலை ஐந்து மணிக்கு சென்னை கேகே நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் இச்சந்திப்பு நிகழும். இந்நிகழ்ச்சிக்கென நமது எழுத்தாளர்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் சென்னை வருகிறார்கள். வாசகர்கள் அனைவரையும் இந்நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைக்கிறோம். எழுத்தாளர்களை அங்கே நீங்கள் நேரில் சந்திக்கலாம். புத்தகங்களில் கையெழுத்து பெறலாம். புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். கேள்விகள் கேட்கலாம். விவாதிக்கலாம்.

இது மேடையில் இருப்பவர்கள் மட்டும் பேசும் நிகழ்ச்சியல்ல. வாசகர் பங்களிப்பே முதன்மையாக இருக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். வாருங்கள், சேர்ந்து கொண்டாடுவோம்.

  • சிறப்புப் பகுதி: திரும்பிப் பார்!

    முன்னால் பார்!

    நம் குரல்

    வாழைப்பழ சோம்பேறிகள்

    தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...

    உலகம்

    கால விரயத் தேர்தல்

    ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரால் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்ய முடியும்.? நிச்சயமாய் வெல்ல முடியாது என்று தெரியும். ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும்...

    தமிழ்நாடு

    பத்து ஓட்டு பஜார்

    கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த நமது செய்தியாளர்களின் தேர்தல் நாள் குறிப்புகளின் தொகுப்பு இது. வாக்கினும் மீன்...

    உலகம்

    இந்தா வைத்துக்கொள், பிரதமர் பதவி!

    உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும் அதி முக்கியமான வர்த்தகக் கேந்திரமாகவும் விளங்கும் சிங்கப்பூரில் ஒரு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு...

  • தொடரும்

    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 97

    97 ஆசனம் ‘பிரஸ்ஸில் இருக்கிறது’ என்று சில மாதங்களுக்கு முன்னால் மீட்சி 6ல் ‘முனியாண்டி’ என்கிற பெயரில் சாரு நிவேதிதா தன்னுடைய பைல்ஸ் பிரச்சனையை வைத்து எழுதியிருந்தான். படித்தபோதே ரொம்ப கெக்கரேபிக்கரே என்று இருப்பதாகப் பட்டது. அவனுக்கு பைல்ஸ் பிரச்சனை இருப்பதென்னவோ உண்மைதான்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 101

    101. தீன் மூர்த்தி இல்லம் பிரதமர் நேருவின் அன்றாட நடவடிக்கைகளில் மகள் இந்திராவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. அது பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். இந்தியா சுதந்திரம் பெற்று தேசப் பிரிவினையின் காரணமாக ஏராளமானவர்கள் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்தார்கள் அல்லவா? அப்போது டெல்லிக்கு வந்த...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை – 2

    உங்களிடம் ஒரு பெரிய வாளி இருக்கிறது. அதை ஒரு குழாயின்கீழ் வைக்கிறீர்கள், குழாயைத் திறந்துவிடுகிறீர்கள். குழாயிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது, வாளியை நிறைக்கிறது. ஆனால், அந்த வாளியில் சில ஓட்டைகளும் இருக்கின்றன. சிறிய ஓட்டைகள், நடுத்தர ஓட்டைகள், பெரிய ஓட்டைகள்… அவை அனைத்திலிருந்தும் தண்ணீர்...

    Read More
    aim தொடரும்

    aIm it -2

    அசையும் பொருளில் இசையும் நானே! அனுதினமும் ஏ.ஐ.யின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதிவிரைவாய் நிகழும் இம்மாற்றங்களைத் தொடர்ந்து கவனிப்பது சிக்கலானது. ஆனாலும் அறிந்து கொள்வது அவசியம். என்ன செய்யலாம்? இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது ஏ.ஐ. இன்டெக்ஸ் ரிப்போர்ட். ஸ்டான்ஃபோர்ட்...

    Read More
    G தொடரும்

    G இன்றி அமையாது உலகு – 2

    2. நாமகரணம் பெரிய விஷயங்கள் எல்லாமே நடக்கும்போது மிகச்சாதாரணமாக நடந்து விடுகிறது. ஆனால் வரலாற்று நோக்கில் அவற்றின் முக்கியத்துவம் பிரம்மாண்டமாக அமையும்போதுதான், நொடியில் கடந்துவிட்ட அந்த அற்புதத் தருணத்தை நினைத்து நினைத்து மகிழும் வாய்ப்பு மனித குலத்திற்கு அமையும். எல்லாப் பெரிய கண்டுபிடிப்புகளின்...

    Read More
    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 2

    2. ஆம்பள சாமி, பொம்பள சாமி இன்னொரு சந்நிதித் தெருவுக்குக் குடி போயிருந்தோம். திட்டமிட்டுச் செய்ததல்ல. அப்படி அமைந்தது. அப்பாவுக்கு எப்போது பணி மாறுதல் வரும் என்று சொல்லவே முடியாது. தனது பணிக்காலத்தில் அவர் எத்தனை பள்ளிக்கூடங்களைக் கண்டிருப்பார் என்கிற கணக்கும் எனக்குச் சரியாகத் தெரியாது. அவரது...

    Read More
    error: Content is protected !!