மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் ஏன் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை? என்றால், மத்தியில் ஆளும் கட்சி மாநிலத்தில் ஆளாத பட்சத்தில் ஆளுநர் ஓர்...
வணக்கம்
இந்த இதழ் நமது மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் - செய்தியாளர்களின் ஆண்டறிக்கைச் சிறப்பிதழாகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இவர்களில் யாருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது. இப்போது வரையிலுமே பலர் நேரில் சந்தித்திராதவர்கள். வேறு வேறு தேசங்களில், வேறு வேறு தொழில்களில், வேறு வேறு வாழ்க்கை முறைகளில் இருப்பவர்கள். எழுத்தார்வமே இவர்களை ஒருங்கிணைத்தது. எழுத்து வகுப்புகளில் அறிமுகமாகி, எழுதத் தேர்ந்த பின்பு மெட்ராஸ் பேப்பருக்கு வந்தவர்கள். இந்த வருடம் தமது முதல் புத்தகத்தையும் எழுதி முடித்தவர்கள்.
வானளாவிய கட்டடங்களே ஆனாலும் ஒவ்வொரு செங்கல்லாகத்தான் வைத்துக் கட்டியாக வேண்டும். அவ்விதத்தில் இந்த எழுத்தாளர்கள் இந்த ஆண்டு எடுத்து வைத்திருக்கும் முதல் கற்கள் இவை.
எப்போதாவது தோன்றும்போது எழுதுவது என்பது வேறு. எழுத்தை ஒரு தினசரிப் பயிற்சியாக, வாழ்க்கை முறையின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்வது என்பது வேறு. இவர்கள் அனைவரும் விரும்பித் தம்மை எழுத்துக்கு ஒப்புக் கொடுத்தவர்கள். தனி வாழ்வின் கெடுபிடிகள், துயரங்கள் எவ்வளவு கனம் மிக்கதாயினும் அதை நகர்த்தி வைத்துவிட்டு எழுத்துப் பணிக்கு முக்கியத்துவம் தருபவர்கள்.
ஓர் உதாரணத்துக்கு ஸஃபார் அஹ்மத் எழுதியிருக்கும் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். சிங்களப் பேரினம் ஆளும் தேசத்தில் சிறுபான்மை இனத்தில் பிறந்துவிட்ட ஒரே காரணத்தால் பயங்கரவாதி என்று முத்திரையிட்டு, அவரை என்ன பாடு படுத்தியிருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். ரத்தக் கண்ணீர் வரச் செய்யும். ஆனால் இப்படியொரு இருப்பியல் நெருக்கடிக்கு இடையில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த சாயலே இல்லாமல் அவர் எழுதுகிற கட்டுரைகளை நினைவுகூர்ந்து பார்க்கலாம். எழுதுதல் என்னும் செயல்பாட்டுக்கு முழுமையாகத் தன்னை ஒப்புக்கொடுக்காத ஒருவருக்கு இது சாத்தியமேயில்லை.
கடந்து போகும் ஆண்டைத் திரும்பிப் பார்ப்பதென்பதை அனைவரும் செய்வார்கள். இந்த இதழில் நீங்கள் படிக்கவிருக்கும் கட்டுரைகள், அடுத்து வரும் ஆண்டை மேலும் ஆக்கபூர்வமாக அமைத்துக்கொள்ள மறைமுகமாகச் சில நுட்பங்களைக் கற்றுத் தரும்.
நிற்க. மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்களின் பதிமூன்று புத்தகங்களை ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனம் வெளியிடுவதை அறிவீர்கள். இதனை ஒரு வாசகர் திருவிழாவாகக் கொண்டாட விரும்புகிறோம். ஜனவரி 11, 2023 புதன்கிழமை மாலை ஐந்து மணிக்கு சென்னை கேகே நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் இச்சந்திப்பு நிகழும். இந்நிகழ்ச்சிக்கென நமது எழுத்தாளர்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் சென்னை வருகிறார்கள். வாசகர்கள் அனைவரையும் இந்நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைக்கிறோம். எழுத்தாளர்களை அங்கே நீங்கள் நேரில் சந்திக்கலாம். புத்தகங்களில் கையெழுத்து பெறலாம். புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். கேள்விகள் கேட்கலாம். விவாதிக்கலாம்.
இது மேடையில் இருப்பவர்கள் மட்டும் பேசும் நிகழ்ச்சியல்ல. வாசகர் பங்களிப்பே முதன்மையாக இருக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். வாருங்கள், சேர்ந்து கொண்டாடுவோம்.
சிறப்புப் பகுதி: திரும்பிப் பார்!
முன்னால் பார்!
துபாய் என்றதும் ஆயிரெத்தெட்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். பிரமாண்டமான கட்டடங்கள் கொண்ட ஷேக் ஜாயித் சாலையைக் கடக்காமல் துபாயை யாரும் தரிசித்திருக்க...
ஐக்கிய அமெரிக்கக் குடியரசு அதிபர் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதிபர் பைடன், இஸ்ரேல் காஸா போர் குறித்து எடுக்கும் முடிவுகள் அவரின்...
தேர்வுக்கூடத்தி்ல் டீச்சரிடம் பேப்பர்களை ஒப்படைக்கக் கடைசி ஐந்து நிமிடம் என்று மணி அடித்ததும் இன்னும் தீவிரமாக எழுதுவார்கள் சில மாணவர்கள். அப்படி...
ஒரு நிறைமாதக் கர்ப்பிணி. பிரசவ வலியும் வந்துவிட்டது. அவசர ஊர்தியையும் அழைத்தாயிற்று. ஆனால் அந்த வண்டி வரக் கூடிய அளவு சீரான பாதை இல்லை...
தொடரும்
டிஜிட்டல் அரஸ்ட் அக்டோபர் மாதத்தின் அதிகாலைப் பொழுது. ஃபரீதாபாத்தில் வானம் தூறிக் கொண்டிருந்தது. வழக்கத்தைவிடச் சற்று முன்னதாகவே எழுந்துவிட்டாள் அனிதா. இருபத்தி மூன்று வயதாகிறது அவளுக்கு. தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் வேலை. வேலை பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்ற சராசரி ஐ.டிக்காரர்களின்...
“ஒரு மில்லியன் பூக்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அந்தப் பெண்ணைக் கொண்டாடித் தீர்க்க வேண்டும்”. வாலண்டினா தெரஸ்கோவா என்கிற இளம் பெண், விண்ணுக்குப் போனதைக் கொண்டாடத் தயாராகியது நிகிதா குருசேவின் சோவியத். வான மைதானத்தில் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த பனிப்போரில் சோவியத் தேசம் மிகுந்த பெருமிதத்தோடு...
79. நேரு, இந்திரா கைது காந்திஜி தன் உரையில் ‘செய் அல்லது செத்துமடி’ என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டாலும், இறுதியாக அவர் தனக்கே உரிய கடிவாளத்தைப் போடத் தவறவில்லை. போராட்டத்தில் இறங்கலாம். ஆனால், அதில் வன்முறைகளுக்குத் துளியும் இடமில்லை! நம்முடைய போராட்டம் நூறு சதவிதம் அஹிம்சை வழியில்தான் நடக்க...
07 – போரால் மீண்டெழுந்த சோவியத் நாள்: 22 – ஜூன் – 1941. இடம்: கதின் கிராமம், பெலாரஸ் எட்டு வயது விக்டர் ஆண்ட்ரீவிச், வைக்கோல் களஞ்சியத்தில் அம்மாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். கிராமத்திலிருந்த அனைவரும் அங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டிருந்தது...
78 எதிர்கொள்ளல் 2 யார் கண்னிலும் படும் முன் போய்விடவேண்டும் என்று ஜீன்ஸ் குர்தா ஜோல்னா பையுடன் விறுவிறுவென லிஃப்டை பார்க்க நடந்தவன், ‘யாரை சார் பாக்கணும்.’ என்று வழிமறிக்கப்பட்டான். ‘இந்த டிபார்ட்மெண்ட்டுதான். எல்டிசி.’ ‘அப்படியா சார். நான் யாரோ வடநாட்டு...
1970-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவைப் பிரதமர் பதவிக்குக் கொண்டுவரக் கம்யூனிஸ்டுகள், தேசியவாதிகள், பவுத்தத் துறவிகள் என்ற பெரும் பட்டாளம் களமிறங்கி லிபரல்வாத ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்குச் சாவுமணி அடித்ததைக் கடந்த வாரம் பார்த்தோம். கம்யூனிஸச் சித்தாந்தப் பின்புலத்தை...