சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை...
வணக்கம்
இன்று மகளிர் தினம். இது மகளிர் சிறப்பிதழ். AI முதல் Me too வரை இன்றைய தலைமுறைப் பெண்கள் சம்பந்தப்பட்ட பல நுணுக்கமான பிரச்னைகள் இந்த இதழில் அலசப்பட்டிருக்கின்றன. அரசியலில் கோலோச்சத் தொடங்கியிருக்கும் ரோஜா முதல் மாத நாவல் துறையில் சாதித்த மகளிர் வரை பல்வேறு துறைகளைச் சார்ந்த பெண் சாதனையாளர்கள் இந்த இதழை அலங்கரிக்கிறார்கள்.
இந்த இதழில், இந்தப் பகுதியின் சிறப்பாசிரியராக இருந்து பணியாற்ற ‘லேடீஸ் ஸ்பெஷல்’ மாத இதழின் ஆசிரியர் கிரிஜா ராகவனைக் கேட்டுக்கொண்டோம். மறுக்காமல் ஒப்புக்கொண்டு, சிறப்பாகச் செய்துகொடுத்த அவருக்கு மெட்ராஸ் பேப்பரின் மனமார்ந்த நன்றி.
பத்திரிகை, தொலைக்காட்சி உலகில் சுமார் முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் செயலாற்றி வருபவர் அவர். நிராகரிப்புகள், அவமானங்கள், பொறாமைகள், கவிழ்ப்பு முயற்சிகள் என்று சந்திக்காத இடர்பாடுகளில்லை. எந்தப் பின்புலமும் இல்லாமல் தனது திறமை ஒன்றினால் மட்டுமே அனைத்தையும் வென்று தனது பத்திரிகையை நடத்தி வருகிறார். ஆண்டுதோறும் பல துறைச் சாதனையாளர்களுக்கு அவரது லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழ் சார்பில் அவர் வழங்கும் சக்தி விருதுகள் தமிழ்ச் சூழலில் மிகவும் பிரபலம். பெண்கள் முன்னேற்றத்தை மட்டுமே தன் வாழ்வின் அர்த்தமாகவும் இலக்காகவும் கொண்டு செயல்புரிபவர். இச்சிறப்பிதழை அவர் ஆசிரியராக இருந்து கொண்டு வருவதன் பொருத்தத்தை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இதழைக் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களையும் சந்தாதாரராக்குங்கள். வாசகர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.
சிறப்புப் பகுதி: பெண்ணுலகம்
ருசிகரம்
தொடரும்
80. அத்தையுடன் மனக்கசப்பு இந்திரா காந்தி மற்றும், அவருடைய அத்தை விஜயலட்சுமி பண்டிட் இருவரது அரசியல் நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன், அவர்கள் இருவரையும் ஐக்கிய மாகாணத்தில் இமயமலைப் பகுதியில் உள்ள காளி என்ற கோடை வாசஸ்தலத்துக்குப் போய் வசிக்கும்படி அறிவுறுத்தியது. ஆனால், இருவரும்...
முறைப்படி 1975-ம் ஆண்டில் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். 1972ம் ஆண்டு மாட்சிமை பொருந்திய எலிசபெத் மகராணியை முற்றாய்ப் புறக்கணித்து ஜனநாயகக் குடியரசானதைக் காரணம் காட்டிப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மேலும் இரண்டு ஆண்டுகளாக பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடித்து...
08 – சோவியத்தின் மனமாற்றம் சுதந்திர சோவியத்திற்கு உருக்கொடுத்தார் லெனின். கம்யூனிசமும், சர்வாதிகாரத்துவமும் தான் மூலக்கல். அரசியல் முதற்கொண்டு அதன் எல்லாத் துறைகளின் கட்டமைப்புகளையும் உருவாக்கினார் லெனின். அவற்றை உறுதிப்படுத்தினார் பின்வந்த ஸ்டாலின். இவர்களைப் போன்ற வலிமையான ஆளுமைகள்...
இண்டர்வ்யூவிற்கு ஈ.எம்.ஐ அந்த ஈ-மெயிலுக்காகத் தான் காத்துக்கொண்டிருந்தான் அருண். இதோ, வந்துவிட்டது. அவன் ஆசைப்பட்டபடியே, கேம்பஸ் இண்டர்வ்யூவில் செலக்ட் ஆகியிருந்தான். அருண் பொறியியல் கல்லூரி மாணவன். இறுதி ஆண்டு இன்னும் சில வாரங்களில் முடியவிருக்கிறது. அகமதாபாத் நகரத்துக்கு வெளியே எங்கோவோர்...
ஆர்ப்பாட்டமில்லாமல் பணி செய்து கொண்டிருந்தது இந்திய விண்வெளி நிலையம். முதலாவது ராக்கெட் வெற்றிகரமாக வானுயர்ந்து விட்டது. அதாவது, ‘ஏவும் கலை’ கைவந்தாயிற்று. நாஸாவிலிருந்து கொண்டு வந்த ராக்கெட் அது. அடுத்து, விண் ஓடமொன்றைச் சொந்தமாகத் தயாரிக்க வேண்டும் என்ற இலக்குடன் எத்தனையோ தடைகளுக்கும் பொருளாதாரச்...