தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...
வணக்கம்
இன்று மகளிர் தினம். இது மகளிர் சிறப்பிதழ். AI முதல் Me too வரை இன்றைய தலைமுறைப் பெண்கள் சம்பந்தப்பட்ட பல நுணுக்கமான பிரச்னைகள் இந்த இதழில் அலசப்பட்டிருக்கின்றன. அரசியலில் கோலோச்சத் தொடங்கியிருக்கும் ரோஜா முதல் மாத நாவல் துறையில் சாதித்த மகளிர் வரை பல்வேறு துறைகளைச் சார்ந்த பெண் சாதனையாளர்கள் இந்த இதழை அலங்கரிக்கிறார்கள்.
இந்த இதழில், இந்தப் பகுதியின் சிறப்பாசிரியராக இருந்து பணியாற்ற ‘லேடீஸ் ஸ்பெஷல்’ மாத இதழின் ஆசிரியர் கிரிஜா ராகவனைக் கேட்டுக்கொண்டோம். மறுக்காமல் ஒப்புக்கொண்டு, சிறப்பாகச் செய்துகொடுத்த அவருக்கு மெட்ராஸ் பேப்பரின் மனமார்ந்த நன்றி.
பத்திரிகை, தொலைக்காட்சி உலகில் சுமார் முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் செயலாற்றி வருபவர் அவர். நிராகரிப்புகள், அவமானங்கள், பொறாமைகள், கவிழ்ப்பு முயற்சிகள் என்று சந்திக்காத இடர்பாடுகளில்லை. எந்தப் பின்புலமும் இல்லாமல் தனது திறமை ஒன்றினால் மட்டுமே அனைத்தையும் வென்று தனது பத்திரிகையை நடத்தி வருகிறார். ஆண்டுதோறும் பல துறைச் சாதனையாளர்களுக்கு அவரது லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழ் சார்பில் அவர் வழங்கும் சக்தி விருதுகள் தமிழ்ச் சூழலில் மிகவும் பிரபலம். பெண்கள் முன்னேற்றத்தை மட்டுமே தன் வாழ்வின் அர்த்தமாகவும் இலக்காகவும் கொண்டு செயல்புரிபவர். இச்சிறப்பிதழை அவர் ஆசிரியராக இருந்து கொண்டு வருவதன் பொருத்தத்தை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இதழைக் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களையும் சந்தாதாரராக்குங்கள். வாசகர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.
சிறப்புப் பகுதி: பெண்ணுலகம்
ருசிகரம்
தொடரும்
97 ஆசனம் ‘பிரஸ்ஸில் இருக்கிறது’ என்று சில மாதங்களுக்கு முன்னால் மீட்சி 6ல் ‘முனியாண்டி’ என்கிற பெயரில் சாரு நிவேதிதா தன்னுடைய பைல்ஸ் பிரச்சனையை வைத்து எழுதியிருந்தான். படித்தபோதே ரொம்ப கெக்கரேபிக்கரே என்று இருப்பதாகப் பட்டது. அவனுக்கு பைல்ஸ் பிரச்சனை இருப்பதென்னவோ உண்மைதான்...
101. தீன் மூர்த்தி இல்லம் பிரதமர் நேருவின் அன்றாட நடவடிக்கைகளில் மகள் இந்திராவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. அது பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். இந்தியா சுதந்திரம் பெற்று தேசப் பிரிவினையின் காரணமாக ஏராளமானவர்கள் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்தார்கள் அல்லவா? அப்போது டெல்லிக்கு வந்த...
உங்களிடம் ஒரு பெரிய வாளி இருக்கிறது. அதை ஒரு குழாயின்கீழ் வைக்கிறீர்கள், குழாயைத் திறந்துவிடுகிறீர்கள். குழாயிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது, வாளியை நிறைக்கிறது. ஆனால், அந்த வாளியில் சில ஓட்டைகளும் இருக்கின்றன. சிறிய ஓட்டைகள், நடுத்தர ஓட்டைகள், பெரிய ஓட்டைகள்… அவை அனைத்திலிருந்தும் தண்ணீர்...
அசையும் பொருளில் இசையும் நானே! அனுதினமும் ஏ.ஐ.யின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதிவிரைவாய் நிகழும் இம்மாற்றங்களைத் தொடர்ந்து கவனிப்பது சிக்கலானது. ஆனாலும் அறிந்து கொள்வது அவசியம். என்ன செய்யலாம்? இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது ஏ.ஐ. இன்டெக்ஸ் ரிப்போர்ட். ஸ்டான்ஃபோர்ட்...
2. நாமகரணம் பெரிய விஷயங்கள் எல்லாமே நடக்கும்போது மிகச்சாதாரணமாக நடந்து விடுகிறது. ஆனால் வரலாற்று நோக்கில் அவற்றின் முக்கியத்துவம் பிரம்மாண்டமாக அமையும்போதுதான், நொடியில் கடந்துவிட்ட அந்த அற்புதத் தருணத்தை நினைத்து நினைத்து மகிழும் வாய்ப்பு மனித குலத்திற்கு அமையும். எல்லாப் பெரிய கண்டுபிடிப்புகளின்...
2. ஆம்பள சாமி, பொம்பள சாமி இன்னொரு சந்நிதித் தெருவுக்குக் குடி போயிருந்தோம். திட்டமிட்டுச் செய்ததல்ல. அப்படி அமைந்தது. அப்பாவுக்கு எப்போது பணி மாறுதல் வரும் என்று சொல்லவே முடியாது. தனது பணிக்காலத்தில் அவர் எத்தனை பள்ளிக்கூடங்களைக் கண்டிருப்பார் என்கிற கணக்கும் எனக்குச் சரியாகத் தெரியாது. அவரது...