இன்று பெரியவர்களைத் தாண்டி பத்து வயதுக் குழந்தைகளுக்கும் தனியாக ஒரு செல்பேசியைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. சமீபத்தில் இயக்குநர் செல்வராகவன் நடித்து வெளிவந்த ‘பகாசுரன்’ படம் வளர்ந்த பெண்களுக்கே செல்பேசியால் வரும் ஆபத்தை வெளிச்சம் போட்டாலும், குழந்தைகளுக்கு எதற்குச் செல் எனப் பட்டிமன்றம் நடத்தினாலும், அவர்களைத் தனிப்பயிற்சி முடிந்தவுடன் கூட்டிவர, வீட்டுப்பாடம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க, விளையாட என்று அதற்கு ஆயிரம் அத்தியாவசியக் காரணங்கள் வந்துவிட்டன. அப்படிக் கொடுக்கும் போது பெற்றோர் என்ன கவனிக்க வேண்டும் என்று பார்க்கலாம். அப்படிக் கொடுக்கும் போது என்ன மாதிரிச் செயலிகள் இருக்க வேண்டும், செல்பேசியை எந்தளவு கட்டுப்படுத்த வேண்டும், அவர்களின் பயன்பாட்டை எவ்வளவு கண்காணிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு பெற்றோருக்கும், அவர்கள் வாழும் சூழ்நிலை, வயது என்பதைப் பொறுத்து மாறுபடும் என்பதை நினைவில் கொள்க.
இதைப் படித்தீர்களா?
சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை...
நீலகிரியில் வடகிழக்குப் பருவமழையைப் பார்த்தவன் எவனும் நாத்திகனாக இருக்கமுடியாது. காற்றும், மழையும் இணைந்து பிரவகிக்கும்போது மனது இயற்கையின்...
Add Comment