விதியானது சிலரின் வாழ்க்கையில் எக்கச்சக்கமாகக் கபடி விளையாடி விடுகிறது. அப்படியானதொரு விளையாட்டில்தான் இக ஓர் எழுத்தாளனாய் உருவெடுத்தான். எந்தவொரு பத்திரிகைக்கும் ‘வாசகர் கடிதம்’ அல்லது ‘சொல்லக் கேட்டவர்’ என்று துணுக்கோகூட எழுதியறியாதவனாக ‘பெருமாளே’ என்று மனைவி அவனைத் தாக்க, அவனை மனைவி தாக்க என்று...
Author - பால கணேஷ்
இகவுக்கு எலிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அது தும்பிக்கைமுகக் கடவுளின் வாகனம் என்பதால் பிடிக்கும் என்று நீங்கள் நினைத்தீர்களென்றால் உங்களுக்கு பூஜ்யம் மார்க். இகவின் மனைவிக்கு எலிகள் என்றால் கிஞ்சித்தும் பிடிக்காது. எனவே, இகவுக்கு எலிகள் என்றால் மிகப் பிடிக்கும். அப்படியாகப்பட்ட இகவே ஒருசமயம்...
நம் இகவுக்குச் சிறுவயதிலிருந்தே அடியோடு பிடிக்காத விஷயம் ஒன்று உண்டென்றால், அது வீடுகளில் நாய் வளர்ப்பது. அந்த வர்க்கத்தைத் தனது முதல் எதிரியாக என்றும் நினைக்கிறான். அதற்குப் பல காரணங்கள் உண்டு. சிறுவன் இகவின் பக்கத்து வீட்டுக்காரரொருவர் நாய் வளர்த்து வந்தார். அப்புத்திசாலியானவர், நாயைத் தன்...
‘லை டிடெக்டர்’ என்றொரு கருவி இருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே… அதனைப் பயன்படுத்தினால் ஒரு மனித ஜீவன் பொய் பேசுகிறதா, உண்மை பேசுகிறதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்று கேள்வி. மனிதர்களைத் துல்லியமாகப் பொய் பேசவைக்கக் கூடிய ‘லை க்ரியேட்டர்’ என்கிற கருவியையும்...
மனிதனாய்ப் பிறந்த எவனொருவருக்கும் கூடவே இருந்து தொல்லை தருவது அது. எவனொருவனாலும் அதைத் தவிர்த்துவிட்டு வாழ்ந்து விடவும் இயல்வதில்லை. அஃதை முழுமையாக ஒழித்துவிடவும் இன்றளவும் மனிதனால் இயலவில்லை. வெயிட்… வெயிட்… நீங்கள் நினைப்பது தவறு. நான் ஓர் ஆணாதிக்கவாதியாகப் பேசவ்ல்லை. நான் சொல்வது...
அவன் சிறுவயதில் எல்லாரையும் போலத்தான் இருந்தான். புத்தகங்கள் என்று சொன்னால் பாடப் புத்தகங்கள்தவிர வேறெதுவும் தெரியாது அவனுக்கு. சினிமாவென்றால் எம்ஜியார் தவிர வேறெவரும் தெரியாது. அவனுக்கொரு பெயர் வேண்டுமல்லவா? இளங்கணேசன் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த இக என்கிறவன் கல்லூரிப் படிப்பினுள் நுழைந்ததும்...
சென்னைப் புத்தகக் கண்காட்சி கண்ணுக்கெட்டிய தொலைவில் நெருங்கிவிட்டது. எழுத்தாளர்கள் ஓவர்டைம் செய்ய ஆரம்பித்துவிட்டிருப்பார்கள். வாசகர்கள் என்னென்ன வாங்கலாம் என்று லிஸ்ட் போடத் தொடங்கியிருப்பார்கள். என்னடா இது, நாமும்தான் ஏகப்பட்ட அனுபவங்களைச் சேர்த்து வைத்திருக்கிறோம்; ஒரு புத்தகம் எழுதி கையோடு...
மொழி, காலம் தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே பேசப்பட்ட தமிழை இன்று பேசினால் நமக்குப் புரியாது. ஈராயிரம் வருடங்களுக்கு முந்தைய இலக்கியங்கள் இன்றும் நம்மிடம் இருக்கின்றன. ஆனால் உரையுடன் தான் படிக்கிறோம். மொழியின் அடையாளமே வேறாகத் தெரிகிறது. எப்படி இது...
விருந்தின் சிறப்பு பாயசம் என்றால், பாயசத்தின் சிறப்பு முந்திரி என்றால் பத்திரிகை வாசிப்பின் முந்திரி அவற்றில் வெளியாகும் ஜோக்குகள். உரைநடையைப் போல, ஓவியங்களைப் போல, மற்ற அனைத்தையும் போலத் தமிழ் வார மாத இதழ்களில் வெளியான ஜோக்குகளும் காலம் தோறும் தம் முகத்தை மாற்றிக்கொண்டே வந்திருக்கின்றன. சில...
தமிழ்ப் பத்திரிகைகளில் வண்ணத்தில் அச்சிடுவது என்பது ஏறத்தாழ 1930 முதலே வழக்கத்தில் வந்துவிட்டது. ப்ளாக்குகள் எடுத்து அச்சிடுகிற காலம் அது என்பதால் செலவு அதிகம் பிடிக்கும். எனவே, அட்டைப்படங்களை மட்டும் மல்டி கலரில் அச்சிடுவார்கள். பிற பக்கங்கள் சிங்கிள் கலரில் (அ) கறுப்பு வெள்ளையில்...