ஷாரன் சதுரங்க விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று கனவு காண்கிறார். திறமையும் இருக்கிறது. தேசிய அளவில் விளையாடத் தேர்வாகி இருக்கிறார். போட்டிகளுக்கு அவரால் உடனே கிளம்பிவிட முடியாது. முதலில் ஷாரனின் அப்பா கிளம்பிப் போவார். தன் மகளின் சக்கர நாற்காலி உள்ளே வருவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பார். ஒன்றிரண்டு படிகள் என்றால்கூடப் பரவாயில்லை. இரண்டு மூன்று மாடிகள் என்றால் மிகவும் சிரமம். போட்டி நடக்கும் பெரிய ஹாலின் கதவு சிறியதாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். கழிவறைகள், அதன் கதவின் அளவு, அங்கே செல்வதற்கான வழி, லிஃப்ட் என எல்லாவற்றையும் சரிபார்த்த பிறகுதான் அவர் மகள் அந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
இதைப் படித்தீர்களா?
சுதந்திரம் அடைந்து எழுபத்தெட்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் மாநிலங்களுள் ஒன்று, மாநில சுயாட்சி குறித்துத் தனது சட்ட...
2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தஹாவுர் ராணாவை அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாக நாடு கடத்தியுள்ளனர் இந்திய...
Add Comment