செப்டம்பர் 2023-லிருந்து தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப் போவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சில குடும்பத் தலைவிகளை தகுதியற்றவர்கள் என அரசு சொல்வதாக வார்த்தைகளைத் திரித்து மீம்கள் பரவத் தொடங்கி விட்டன. “மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் வாழ்வைச் சிறிதேனும் மாற்றிவிடும் என நம்பும், தேவையுள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும்” என முதல்வர் அறிவித்திருக்கிறார். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இனிமேல்தான் வெளியிடப்படும். ஒரு கோடிப் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனர்களாக வாய்ப்பிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...
“காலணி இல்லாமல் நடக்காதே, தரையெல்லாம் கண்ணாடித் துகள்கள்” என்று அமெரிக்காவில் கமலா ஹாரீஸ் பதவி ஏற்ற அன்று சித்திரம் வரையாத பத்திரிகைகள் இல்லை...
எதுக்குன்னு கவலைப்படறது? எதுக்குன்னு வருத்தப்படறது? போ போ போ ன்னு வடிவேலு பாணியிலே நாட்களை தள்ளி விடணும் 🤷🏻♀️😔