Home » சாது மிரண்டால் நாடு கொள்ளாது!
வரலாறு

சாது மிரண்டால் நாடு கொள்ளாது!

சாதுக்களில், நாக சாதுக்கள் என்று ஒரு பிரிவினர் உண்டு. கும்பமேளாவின் சுவாரஸ்யமான அம்சமே ஆயுதமேந்தி இவர்கள் கூடுவது தான். இந்தியாவில் ஆயுதமேந்தும் சாதுக்கள் இவர்கள் மட்டும்தான். ஈசனிடம் பக்தி கொண்ட துறவிகள்தான் ஆயுதமேந்தி நிற்கிறார்கள். இந்தியாவின் புனித மனிதர்களாக நாகாக்கள் மதிக்கப்படுகிறார்கள். இவர்கள் பூரண நிர்வாணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சடைமுடியுடன் சாம்பல் பூசப்பட்ட உடலுடன் தோற்றமளிப்பார்கள்.

சமஸ்கிருதத்தில் நாகா என்ற வார்த்தைக்கு நிர்வாணம் என்று பொருள். (வடகிழக்கு இந்தியாவில் வாழும் நாகா பழங்குடியினர் வேறு. அவர்களும் இவர்களும் ஒன்றல்லர்.) அவர்கள் மேனிதான் திறந்திருக்குமே தவிர அவர்களுடைய வாழ்க்கை மற்றும் துறவு சார்ந்த ஒழுக்க விதிமுறைகள் ரகசியமானவை. நாக சாதுக்கள் நுட்பமான துறவு வாழ்க்கைக்காக ஆடை உட்பட உலகின் அனைத்து இன்பங்களையும் துறந்தவர்கள்- ஆயுதங்களைத் தவிர. இந்த வகை நிர்வாணம் பார்வையாளர்களுக்குத் திகிலூட்டும். இன்னும் அவர்கள் மறைவிடத்தில் செய்து காட்டும் சாகசங்களைப் பார்த்தால் கிலி பிடிக்கும். ஆனால் காமம் இல்லாத வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வையை வழங்கும். ஆடை இல்லை. ஆனால் இவர்கள் கையில் ஆயுதம் இருக்கிறது. இதை வைத்து என்னவெல்லாம் செய்திருப்பார்கள்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!