Home » கத்தியின்றி ரத்தமின்றி – 5
சைபர் க்ரைம் தொடரும்

கத்தியின்றி ரத்தமின்றி – 5

ஆறுமுகத்தைப் போலவே அவரது காருக்கும் வயதாகிக் கொண்டிருந்தது. ஆர்த்தோ டாக்டர் ஆறுமுகம் என்றால் தேனி சுற்றுவட்டாரத்தில் அறியாதவர்களே இல்லை. பிரபல எலும்பு மருத்துவர். அவரது ஊர் வீரம் விளைந்த மண்ணாக இருந்ததால் எப்போதும் அவர் பிஸியாகவே இருந்தார். அவரைவிட அவரது கார் பிரபலம். ‘அம்பாசிடர் ஆறுமுகம்’ என்பதுதான் அவருக்கு ஊர் வைத்த பெயர். நல்லவர்.

அந்த ஊரில் ஓடும் ஒரு சில அம்பாசிடர் கார்களில் அவரது கார்தான் முன்தோன்றிய மூத்த கார். பேருந்து கூடச் செல்லாத சில கிராமங்களுக்கும் ஆர்த்தோ ஆறுமுகம் செல்வார். அவரது அம்பாசிடர் சத்தத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள் கூட்டம்.

அவர் எப்போதும் காருக்கு ட்ரைவர் வைத்ததில்லை. செல்ஃப் ட்ரைவிங் தான். இப்போதெல்லாம் அம்பாசிடர் ஓட்டுவது அவருக்குச் சற்றுக் களைப்பாய் இருக்கிறது. வயதாகிக் கொண்டிருந்ததால் முதுகு வலியும் வேண்டா விருந்தாளியாய் அடிக்கடி வருகிறது. படுத்துகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!