Home » கத்தியின்றி ரத்தமின்றி -15
சைபர் க்ரைம் தொடரும்

கத்தியின்றி ரத்தமின்றி -15

மானே… தேனே… பொன்மானே

மொபைல் திரையின் நீல ஒளி ஹரிணியின் முகமெங்கும் படர்ந்திருந்தது. இருள் சூழ்ந்த அந்த அறையில் தோன்றியிருந்த அச்சிறு ஒளித்தீவு அவளது ஆர்வம் ததும்பும் முகத்தை இன்னும் பிரகாசமாக்கிக் காட்டியது. அவனது அடுத்த மெசேஜிற்காகக் காத்துக்கொண்டிருந்தாள் ஹரிணி.

அந்த இடைவெளியிலும் அவனிடமிருந்து வந்திருந்த பழைய மெசேஜ்களைத் திரும்பத் திரும்ப வாசித்துப் பார்த்தாள். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒரு சிறு மகிழ்ச்சி அலை அவளுள் எழுந்து அடங்கியது. அது ஏனென்று அவளுக்குப் புரியவில்லை. ஆனாலும் இது இன்னும் வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.

அவன் சில தினங்களுக்கு முன் ஓர் ஆன்லைன் கேமில்தான் அவளுக்கு அறிமுகமானான். தொலைவிலிருக்கும் பல நபர்கள் கூடி விளையாடும் ஒரு மொபைல் விளையாட்டு அது. கொஞ்சம் அறிவு. மீதமெல்லாம் ப்ராபப்ளிட்டி. அதிர்ஷ்டம். உடன் விளையாடுவோரிடம் சாட் செய்யலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!