Home » அனுபவம் புதிது
ஆண்டறிக்கை

அனுபவம் புதிது

ந. ஜெயரூபலிங்கம்

இவ்வாண்டின் கடைசி வாரத்திற்கு வந்துவிட்டோம். இவ்வாண்டின் ஆரம்பத்தில் ஒரு எழுத்தாளனாக, என்ன செய்யத் திட்டமிட்டேன். அத்திட்டத்தில் எவ்வளவு நிறைவேறியது என்பதைத் திரும்பிப் பார்க்கும் தருணம் இது.

2022 ஜூலையில் ஆரம்பித்த எனது மெட்ராஸ் பேப்பரில் எழுதும் பயணம் இவ்வாண்டும் சிறப்பாகவே தொடர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. ‘தல’ புராணம் எனும் தொடர் இருபத்தேழு அத்தியாயங்கள் கண்டு வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. அத்துடன் அது புத்தக வடிவத்திலும் இம்மாதம் வெளியாகி ஜனவரியில் நடைபெற இருக்கும் சென்னை புத்தகக் காட்சியில் ஜீரோ டிகிரி அரங்கில் விற்பனைக்குத் தயாராகி விட்டது. இத்தொடரை எழுதும்போது வாராவாரம் ஒரு அத்தியாயம் எழுதுவதற்கான ஆய்வுகளை வார நாட்களில் இரவு நேரத்தில் செய்வேன். பின்னர் எடுத்த குறிப்புகளை வைத்துச் சனிக்கிழமை எழுதி முடித்து விடுவேன். ஞாயிற்றுக்கிழமை ஒரு தடவை நானே எடிட் செய்து விட்டு அனுப்பி விடுவேன். கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் தவறாமல் செய்தது ஒருவித ஒழுக்கத்தினை என்னுள் உருவாக்கியது. அது எனக்குத் தொடர்ந்தும் பயனுள்ளதாக இருக்கிறது. இத்தொடர் மட்டுமல்லாது வேறு கட்டுரைகளும் மெட்ராஸ் பேப்பரில் வெளியாகியதும் மகிழ்ச்சி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!