நமக்குப் பொதுவாக உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரைச் சென்று பார்க்கிறோம். அவர் நம்மைச் சோதனை செய்துவிட்டு, நம்மிடமும் என்ன செய்கிறது என்று...
வணக்கம்
இந்த இதழின் சிறப்புப் பகுதி, மாற்று மருத்துவம். நம் மக்கள் என்றென்றும் ஒரு மெல்லிய ஐயத்துடனேயே அணுகும் விஷயங்களுள் ஒன்று. மாற்று மருத்துவம் பற்றி எழுதினால் படிப்பார்கள்; யாராவது சொன்னால் கவனமாகக் கேட்டுக்கொள்வார்கள்; பக்க விளைவுகள் இல்லாத இம்மருத்துவ முறையைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்று உறுதி கொள்வார்கள். ஆனால் ஒரு தலைவலி, காய்ச்சல் என்று வந்தால் உடனே அருகிலுள்ள அலோபதி க்ளினிக்குக்குத்தான் போவார்கள். அது சரியானதும் மீண்டும் மாற்று மருத்துவத்தின்பால் காதல் பிறக்கும்.
மக்கள்மீது தவறில்லை. பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு ‘மாற்று மருத்துவம்’ என்று பெயரிட்டு அதை இரண்டாம் பட்சமாக்கியது யாரென்று யோசித்தால் இதன் காரணம் புரிந்துவிடும்.
இந்த இதழில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த விரிவான-செறிவான பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. டாக்டர் சரவணகுமாரின் பேட்டி, அலோபதி மருத்துவமுறையின் முக்கியத்துவத்தை முன்னால் வைத்தே பாரம்பரிய மருத்துவ முறைகளின் சிறப்பை எடுத்துச் சொல்கிறது. டாக்டர் முஹம்மது சலீம், மூலிகைகளின் பெயரால் நடக்கும் மோசடிகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.
மாற்று மருத்துவம் என்பது நம் நாட்டில் மட்டும் நடைமுறையில் உள்ளதல்ல. உலகெங்கும் இது உண்டு. அமெரிக்காவில் இம்மருத்துவத் துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை பத்மா அர்விந்த் விளக்குகிறார். ப்ரானிக் ஹீலிங் குறித்த நசீமாவின் கட்டுரை முற்றிலும் புதியதொரு திறப்பைத் தருகிறது. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இயங்கும் இயற்கை முறை மருத்துவப் பிரிவு எவ்வாறு செயல்படுகிறது என்பதை நேரில் கண்டு ரிப்போர்ட் செய்திருக்கிறார் ஶ்ரீதேவி கண்ணன்.
விளம்பர ஜாலங்களுக்கும் மார்க்கெடிங் மயக்கங்களுக்கும் ஆட்படாமல், உண்மையிலேயே பக்க விளைவுகளற்ற பூரண உடல் நலன் சார்ந்த அக்கறை உள்ளவர்களுக்கு இந்தச் சிறப்புப் பகுதி பல புதிய வாசல்களைத் திறந்து வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புதிய அச்சுறுத்தும் சக்தியாகப் புறப்பட்டிருக்கும் ஹூத்தி இயக்கத்தைக் குறித்த ஓர் அறிமுகத்தினை தீபன் திருமாறன் எழுதியிருக்கிறார். ஹூத்தி அமைப்பினைக் குறித்துத் தமிழில் வெளிவரும் முதல் கட்டுரை இதுவே.
இலங்கை நிலவரம் குறித்துத் தொடர்ந்து நமக்கு எழுதி வரும் ஸஃபார் அஹ்மத், இந்த இதழில் இலங்கை ஜனாதிபதி பதவியின் வானளாவிய அதிகாரங்களைக் குறித்து விளக்கியிருக்கிறார். அதிகாரம் ஒரு புள்ளியில் குவிக்கப்படும்போது நிகழும் அபத்தங்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் சரித்திரம்தோறும் கண்டு வந்திருக்கிறோம். தற்கால உதாரணம், இலங்கை.
சென்ற வாரம் முழுதும் செய்திகளில் மிதிபட்ட பின்லாந்து அதிபர் சன்னா மிரெல்லா மரின் குறித்து பாபுராஜ் நெப்போலியன் எழுதியுள்ள கட்டுரை, ஒரு வெற்றிப் பெண்மணியின் வேறொரு முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அவ்வண்ணமே, சொந்த நாட்டுக்கு ஓர் இடைவெளிக்குப் பிறகு சுற்றுலாவாகச் சென்ற அனுபவங்களை விவரிக்கும் ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை, ஒரு தேசத்தின் மறு முகத்தைத் துலக்கிக் காட்டுகிறது.
மெட்ராஸ் பேப்பர், தமிழில் வெளிவரும் ஒரே சர்வதேச வார இதழ். தமிழில், வேறெந்தப் பத்திரிகைகளிலும் உங்களுக்குப் படிக்கக் கிடைக்காதவை அனைத்தும் இங்கே ரசிக்கக் கிடைக்கும். இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களையும் சந்தாதாரர் ஆக்குங்கள். இது, நாம் சேர்ந்து இழுக்கும் தேர்.
வாசகர்கள் அனைவருக்கும் மெட்ராஸ் பேப்பரின் மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
சிறப்புப் பகுதி: மாற்று மருத்துவம்
தமிழ் இணையம் நன்கு அறிந்த பாரம்பரிய மருத்துவர் சரவணக்குமார். டாக்டர் சரவ் என்றால் உடனே தெரியும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டு அவரது...
துபாய் மாலில் இருக்கும் ஒவ்வொரு கடையிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பெருஞ்சத்தம், என் காதுகளை மட்டுமில்லாமல் அங்கிருந்தவர்களையும்...
பாரம்பரிய மருத்துவம் என்று சொல்லப்படுகிற மாற்றுமுறை மருத்துவம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது; அவற்றால் எல்லாவித நோய்களையும் குணப்படுத்த...
அரசு மருத்துவமனைகளில் மாற்று மருத்துவத் துறை எப்படிச் செயல்படுகிறது? நேரில் பார்த்தறியப் புறப்பட்டோம். தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு...
அமெரிக்காவில் மாற்று மருத்துவத்துறை எப்படிச் செயல்படுகிறது? விவரிக்கிறது இக்கட்டுரை. மேற்கத்திய (அலோபதி) மருத்துவத்திற்குத் துணையாகவும் மாற்றாகவும்...
கையளவு உலகம்
கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக்...
இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும்...
தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு...
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சூடேறி இருக்கிறது. ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளின் நாயகனாக விளங்கியும் டொனால்ட் டிரம்ப், சரியாமல்...
ருசிகரம்
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு ஒருமுறை மொத்தமாக ஏற்றாமல் ஒவ்வொரு வருடமும் கட்டண மாறுபாடுகளைச் செய்கிறது...
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடைகள் அடைக்கப்பட்டு, காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில் அடக்கம்...
தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்துக்கு ஆதரவாக ஆள் சேர்த்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், கடந்த வாரம் தமிழகத்தில் பத்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டு...
தொடரும்
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...
முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...
15. நமக்கு நாமே பண்ணையார் எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ்ப் படங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்ட ஒரு பண்ணையார் இருப்பார். அவரிடம் ஏகப்பட்ட பேர் வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். அந்த வேலையாட்களுடைய வீட்டில் ஏதாவது திருமணம், காதுகுத்து...
15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death...
114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...
110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...
15. திறன்பேசியியல் இணையம் பரவலாயிற்று. இணையத் தேடலும் அத்தியாவசியமாகிவிட்டது. திறன்பேசிகள் அறிமுகமாகியிருந்த காலம். கைப்பேசியில் இணையம் உபயோகிக்கலாம் என்ற அறிவிப்புகள் வந்தனவே ஒழிய, கணினியில் இணையம் கொடுத்த அனுபவத்தை அலைப்பேசியில் முழுமையாக வழங்க முடியாமல் நிறுவனங்கள் தவித்துக்கொண்டிருந்தன. 2007...