நமக்குப் பொதுவாக உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரைச் சென்று பார்க்கிறோம். அவர் நம்மைச் சோதனை செய்துவிட்டு, நம்மிடமும் என்ன செய்கிறது என்று...
வணக்கம்
இந்த இதழின் சிறப்புப் பகுதி, மாற்று மருத்துவம். நம் மக்கள் என்றென்றும் ஒரு மெல்லிய ஐயத்துடனேயே அணுகும் விஷயங்களுள் ஒன்று. மாற்று மருத்துவம் பற்றி எழுதினால் படிப்பார்கள்; யாராவது சொன்னால் கவனமாகக் கேட்டுக்கொள்வார்கள்; பக்க விளைவுகள் இல்லாத இம்மருத்துவ முறையைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்று உறுதி கொள்வார்கள். ஆனால் ஒரு தலைவலி, காய்ச்சல் என்று வந்தால் உடனே அருகிலுள்ள அலோபதி க்ளினிக்குக்குத்தான் போவார்கள். அது சரியானதும் மீண்டும் மாற்று மருத்துவத்தின்பால் காதல் பிறக்கும்.
மக்கள்மீது தவறில்லை. பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு ‘மாற்று மருத்துவம்’ என்று பெயரிட்டு அதை இரண்டாம் பட்சமாக்கியது யாரென்று யோசித்தால் இதன் காரணம் புரிந்துவிடும்.
இந்த இதழில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த விரிவான-செறிவான பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. டாக்டர் சரவணகுமாரின் பேட்டி, அலோபதி மருத்துவமுறையின் முக்கியத்துவத்தை முன்னால் வைத்தே பாரம்பரிய மருத்துவ முறைகளின் சிறப்பை எடுத்துச் சொல்கிறது. டாக்டர் முஹம்மது சலீம், மூலிகைகளின் பெயரால் நடக்கும் மோசடிகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.
மாற்று மருத்துவம் என்பது நம் நாட்டில் மட்டும் நடைமுறையில் உள்ளதல்ல. உலகெங்கும் இது உண்டு. அமெரிக்காவில் இம்மருத்துவத் துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை பத்மா அர்விந்த் விளக்குகிறார். ப்ரானிக் ஹீலிங் குறித்த நசீமாவின் கட்டுரை முற்றிலும் புதியதொரு திறப்பைத் தருகிறது. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இயங்கும் இயற்கை முறை மருத்துவப் பிரிவு எவ்வாறு செயல்படுகிறது என்பதை நேரில் கண்டு ரிப்போர்ட் செய்திருக்கிறார் ஶ்ரீதேவி கண்ணன்.
விளம்பர ஜாலங்களுக்கும் மார்க்கெடிங் மயக்கங்களுக்கும் ஆட்படாமல், உண்மையிலேயே பக்க விளைவுகளற்ற பூரண உடல் நலன் சார்ந்த அக்கறை உள்ளவர்களுக்கு இந்தச் சிறப்புப் பகுதி பல புதிய வாசல்களைத் திறந்து வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புதிய அச்சுறுத்தும் சக்தியாகப் புறப்பட்டிருக்கும் ஹூத்தி இயக்கத்தைக் குறித்த ஓர் அறிமுகத்தினை தீபன் திருமாறன் எழுதியிருக்கிறார். ஹூத்தி அமைப்பினைக் குறித்துத் தமிழில் வெளிவரும் முதல் கட்டுரை இதுவே.
இலங்கை நிலவரம் குறித்துத் தொடர்ந்து நமக்கு எழுதி வரும் ஸஃபார் அஹ்மத், இந்த இதழில் இலங்கை ஜனாதிபதி பதவியின் வானளாவிய அதிகாரங்களைக் குறித்து விளக்கியிருக்கிறார். அதிகாரம் ஒரு புள்ளியில் குவிக்கப்படும்போது நிகழும் அபத்தங்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் சரித்திரம்தோறும் கண்டு வந்திருக்கிறோம். தற்கால உதாரணம், இலங்கை.
சென்ற வாரம் முழுதும் செய்திகளில் மிதிபட்ட பின்லாந்து அதிபர் சன்னா மிரெல்லா மரின் குறித்து பாபுராஜ் நெப்போலியன் எழுதியுள்ள கட்டுரை, ஒரு வெற்றிப் பெண்மணியின் வேறொரு முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அவ்வண்ணமே, சொந்த நாட்டுக்கு ஓர் இடைவெளிக்குப் பிறகு சுற்றுலாவாகச் சென்ற அனுபவங்களை விவரிக்கும் ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை, ஒரு தேசத்தின் மறு முகத்தைத் துலக்கிக் காட்டுகிறது.
மெட்ராஸ் பேப்பர், தமிழில் வெளிவரும் ஒரே சர்வதேச வார இதழ். தமிழில், வேறெந்தப் பத்திரிகைகளிலும் உங்களுக்குப் படிக்கக் கிடைக்காதவை அனைத்தும் இங்கே ரசிக்கக் கிடைக்கும். இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களையும் சந்தாதாரர் ஆக்குங்கள். இது, நாம் சேர்ந்து இழுக்கும் தேர்.
வாசகர்கள் அனைவருக்கும் மெட்ராஸ் பேப்பரின் மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
சிறப்புப் பகுதி: மாற்று மருத்துவம்
தமிழ் இணையம் நன்கு அறிந்த பாரம்பரிய மருத்துவர் சரவணக்குமார். டாக்டர் சரவ் என்றால் உடனே தெரியும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டு அவரது...
துபாய் மாலில் இருக்கும் ஒவ்வொரு கடையிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பெருஞ்சத்தம், என் காதுகளை மட்டுமில்லாமல் அங்கிருந்தவர்களையும்...
பாரம்பரிய மருத்துவம் என்று சொல்லப்படுகிற மாற்றுமுறை மருத்துவம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது; அவற்றால் எல்லாவித நோய்களையும் குணப்படுத்த...
அரசு மருத்துவமனைகளில் மாற்று மருத்துவத் துறை எப்படிச் செயல்படுகிறது? நேரில் பார்த்தறியப் புறப்பட்டோம். தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு...
அமெரிக்காவில் மாற்று மருத்துவத்துறை எப்படிச் செயல்படுகிறது? விவரிக்கிறது இக்கட்டுரை. மேற்கத்திய (அலோபதி) மருத்துவத்திற்குத் துணையாகவும் மாற்றாகவும்...
கையளவு உலகம்
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கி ஓராண்டு நெருங்குகிறது. இதோ அதோ என்கிறார்களே தவிர போர் முடிவதற்கான அறிகுறியே இல்லை. ஜெயித்துவிடுவோம்...
‘புது அப்பா’ என்கிற பதவியுயர்வு தந்த உவகையுடன் மாடிப்படிகளில் வேகமாய் ஏறுகிறான் அந்த இளைஞன். கையில், குழந்தை பிறந்த நேரம் குறிக்கப்பட்ட...
பென்கிவிர் வருகையால் இஸ்ரேலில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பாலஸ்தீன மக்கள் இனித் தங்களுக்கு விடிவுகாலமே வரப் போவதில்லை என்று துவண்டு...
அவரது பெயர் கைஸ் சையத். டியூனிசியாவின் பல்கலைக்கழகங்கள் ஆணையத்தின் இயக்குநர். பல கல்லூரிகளுக்கு விசிட்டிங் பேராசிரியர். 2014-ம் ஆண்டு டியூனிசியா...
உலகவாசிகள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி ஒன்று என்றால், சீனர்களுக்கு மட்டும் அது இல்லை. ஏனென்றால் சீனர்களின் ஆண்டு 354 நாட்கள் கொண்டது...
ருசிகரம்
‘…இது என்னுடைய இடம், என்னுடைய மண் என்று திடமாக அமர வேண்டும். ஞாபகத்தில் கொள்ளுங்கள்… பாரதியோ, உவேசாவோ, இராமானுஜரோ, கணிதமேதை இராமானுஜமோ, வாஜ்பாயோ...
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கி ஓராண்டு நெருங்குகிறது. இதோ அதோ என்கிறார்களே தவிர போர் முடிவதற்கான அறிகுறியே இல்லை. ஜெயித்துவிடுவோம்...
தற்போது ஐபோனின் பாதி விலையில் தரமான, உயர்ரக ஆன்ட்ராய்ட் செல்பேசிகள் சாம்சங், கூகிள் நிறுவனங்களிடமிருந்து வருகின்றன. இவை ஐபோனோடு நேருக்கு நேர் நிற்கக்...
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வசிஷ்யதே ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி – ஈசாவாஸ்ய உபநிடதம் ‘இறைவன்...
தொடரும்
பொதி சுமக்கும் மனிதர் 1991-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஆஸ்டின் நகரத்தில் ராஜேஷ் எனும் இந்திய இளைஞன் சோர்வுடன் தனது அபார்ட்மெண்டிற்குள் நுழைந்தான். அவனது சோர்வுக்கான காரணம் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்து முடித்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிறது. ஆனாலும்...
35. புதுக் கட்சி லக்னௌவில் பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. சி.ஆர்.தாஸ், காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தின் நடைமுறை குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சி.ஆர்.தாசின் கருத்துக்களை ஆதரித்தார். மோதிலால் நேருவோ, காந்திஜி தலைமையேற்று...
34 வம்பு வண்ணதாசன் பேச்சைக் கேட்டுத் திரும்பிவந்திருக்கக் கூடாதோ என்று தோன்றிற்று. போபோ போய் வேலையைப் பார் என்பதைப்போல விரட்டாதகுறையாய் அனுப்பிவைத்த ஏசி மீது எரிச்சலாய் வந்தது. இந்த ஆபீஸ் அந்த ஆபீஸ் அந்த ஏசி இந்த அதிகாரி என்று எவனும் வேறில்லை. எண்ணத்தில் செயல்பாட்டில் அதிகாரத்தில் எல்லாம் ஒன்றுதான்...
உ.வே.சாமிநாதய்யர் 1800’களின் மத்தி வரை தமிழ்நாட்டின் தமிழிலக்கியங்கள் என்று அறியப்பட்ட நூல்கள் அனைத்தும் சுவடிகள் வடிவில்தான் இருந்தன. சுவடிகள் பனையோலையின் மூலம் உருவாக்கப்பட்டன. சுவடிகளை உருவாக்கப் பனையோலைகளை எடுத்து, ஒரே அகலமுள்ள ஓலைகளை முதலில் தேருவார்கள்; பின்னர் அவற்றை வெந்நீரில்...
நரம்புச் சிதைவு ஸ்டெம் செல்களைக் கொண்டு பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளை மீளுருவாக்கம் செய்யும் மருத்துவ முறைகள், அதுவும் அரசினால் அனுமதிக்கப்பட்ட ஒரு சில சிகிச்சை முறைகள் மட்டுமே தற்போது நடைமுறையில் உள்ளன. பெரும்பான்மையானவை ஆய்வு நிலையிலேயே உள்ளன. clinical trials எனப்படும் இத்தகைய சுமார் 5000 ஆய்வுகள்...