நமக்குப் பொதுவாக உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரைச் சென்று பார்க்கிறோம். அவர் நம்மைச் சோதனை செய்துவிட்டு, நம்மிடமும் என்ன செய்கிறது என்று...
வணக்கம்
இந்த இதழின் சிறப்புப் பகுதி, மாற்று மருத்துவம். நம் மக்கள் என்றென்றும் ஒரு மெல்லிய ஐயத்துடனேயே அணுகும் விஷயங்களுள் ஒன்று. மாற்று மருத்துவம் பற்றி எழுதினால் படிப்பார்கள்; யாராவது சொன்னால் கவனமாகக் கேட்டுக்கொள்வார்கள்; பக்க விளைவுகள் இல்லாத இம்மருத்துவ முறையைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்று உறுதி கொள்வார்கள். ஆனால் ஒரு தலைவலி, காய்ச்சல் என்று வந்தால் உடனே அருகிலுள்ள அலோபதி க்ளினிக்குக்குத்தான் போவார்கள். அது சரியானதும் மீண்டும் மாற்று மருத்துவத்தின்பால் காதல் பிறக்கும்.
மக்கள்மீது தவறில்லை. பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு ‘மாற்று மருத்துவம்’ என்று பெயரிட்டு அதை இரண்டாம் பட்சமாக்கியது யாரென்று யோசித்தால் இதன் காரணம் புரிந்துவிடும்.
இந்த இதழில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த விரிவான-செறிவான பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. டாக்டர் சரவணகுமாரின் பேட்டி, அலோபதி மருத்துவமுறையின் முக்கியத்துவத்தை முன்னால் வைத்தே பாரம்பரிய மருத்துவ முறைகளின் சிறப்பை எடுத்துச் சொல்கிறது. டாக்டர் முஹம்மது சலீம், மூலிகைகளின் பெயரால் நடக்கும் மோசடிகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.
மாற்று மருத்துவம் என்பது நம் நாட்டில் மட்டும் நடைமுறையில் உள்ளதல்ல. உலகெங்கும் இது உண்டு. அமெரிக்காவில் இம்மருத்துவத் துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை பத்மா அர்விந்த் விளக்குகிறார். ப்ரானிக் ஹீலிங் குறித்த நசீமாவின் கட்டுரை முற்றிலும் புதியதொரு திறப்பைத் தருகிறது. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இயங்கும் இயற்கை முறை மருத்துவப் பிரிவு எவ்வாறு செயல்படுகிறது என்பதை நேரில் கண்டு ரிப்போர்ட் செய்திருக்கிறார் ஶ்ரீதேவி கண்ணன்.
விளம்பர ஜாலங்களுக்கும் மார்க்கெடிங் மயக்கங்களுக்கும் ஆட்படாமல், உண்மையிலேயே பக்க விளைவுகளற்ற பூரண உடல் நலன் சார்ந்த அக்கறை உள்ளவர்களுக்கு இந்தச் சிறப்புப் பகுதி பல புதிய வாசல்களைத் திறந்து வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புதிய அச்சுறுத்தும் சக்தியாகப் புறப்பட்டிருக்கும் ஹூத்தி இயக்கத்தைக் குறித்த ஓர் அறிமுகத்தினை தீபன் திருமாறன் எழுதியிருக்கிறார். ஹூத்தி அமைப்பினைக் குறித்துத் தமிழில் வெளிவரும் முதல் கட்டுரை இதுவே.
இலங்கை நிலவரம் குறித்துத் தொடர்ந்து நமக்கு எழுதி வரும் ஸஃபார் அஹ்மத், இந்த இதழில் இலங்கை ஜனாதிபதி பதவியின் வானளாவிய அதிகாரங்களைக் குறித்து விளக்கியிருக்கிறார். அதிகாரம் ஒரு புள்ளியில் குவிக்கப்படும்போது நிகழும் அபத்தங்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் சரித்திரம்தோறும் கண்டு வந்திருக்கிறோம். தற்கால உதாரணம், இலங்கை.
சென்ற வாரம் முழுதும் செய்திகளில் மிதிபட்ட பின்லாந்து அதிபர் சன்னா மிரெல்லா மரின் குறித்து பாபுராஜ் நெப்போலியன் எழுதியுள்ள கட்டுரை, ஒரு வெற்றிப் பெண்மணியின் வேறொரு முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அவ்வண்ணமே, சொந்த நாட்டுக்கு ஓர் இடைவெளிக்குப் பிறகு சுற்றுலாவாகச் சென்ற அனுபவங்களை விவரிக்கும் ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை, ஒரு தேசத்தின் மறு முகத்தைத் துலக்கிக் காட்டுகிறது.
மெட்ராஸ் பேப்பர், தமிழில் வெளிவரும் ஒரே சர்வதேச வார இதழ். தமிழில், வேறெந்தப் பத்திரிகைகளிலும் உங்களுக்குப் படிக்கக் கிடைக்காதவை அனைத்தும் இங்கே ரசிக்கக் கிடைக்கும். இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களையும் சந்தாதாரர் ஆக்குங்கள். இது, நாம் சேர்ந்து இழுக்கும் தேர்.
வாசகர்கள் அனைவருக்கும் மெட்ராஸ் பேப்பரின் மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
சிறப்புப் பகுதி: மாற்று மருத்துவம்
தமிழ் இணையம் நன்கு அறிந்த பாரம்பரிய மருத்துவர் சரவணக்குமார். டாக்டர் சரவ் என்றால் உடனே தெரியும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டு அவரது...
துபாய் மாலில் இருக்கும் ஒவ்வொரு கடையிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பெருஞ்சத்தம், என் காதுகளை மட்டுமில்லாமல் அங்கிருந்தவர்களையும்...
பாரம்பரிய மருத்துவம் என்று சொல்லப்படுகிற மாற்றுமுறை மருத்துவம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது; அவற்றால் எல்லாவித நோய்களையும் குணப்படுத்த...
அரசு மருத்துவமனைகளில் மாற்று மருத்துவத் துறை எப்படிச் செயல்படுகிறது? நேரில் பார்த்தறியப் புறப்பட்டோம். தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு...
அமெரிக்காவில் மாற்று மருத்துவத்துறை எப்படிச் செயல்படுகிறது? விவரிக்கிறது இக்கட்டுரை. மேற்கத்திய (அலோபதி) மருத்துவத்திற்குத் துணையாகவும் மாற்றாகவும்...
கையளவு உலகம்
கடந்த வருடம் ஜூலை 9ம் தேதி அறுபத்தொன்பது இலட்சம் மக்களால் ஐம்பத்திரண்டு சதவீதப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே...
கீவ்வின் புறநகர்ப் பகுதி. ஊழியர்கள் இருவர் ஆரஞ்சு நிற மேலங்கியோடு ஒரு ரஷ்யக் கல்வெட்டைக் கருவியைக் கொண்டு சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பத்து...
‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச்...
கடந்த மே 19-ஆம் தேதி இஸ்ரேலியர்கள் தமது கொடி நாளைக் (FLAG DAY) கொண்டாடினார்கள். அதாவது 1948-ல் இஸ்ரேலின் குடிமக்களாக அவர்கள் அதிகாரபூர்வமாக...
ருசிகரம்
உங்க ஊரில் மயில் குரைத்ததா? எங்கள் ஊரில் யானை ஊளையிட்டது. ‘கோட் – வேர்ட்’ கரெக்ட் என்று கூறி பெட்டிகளை மாற்றிக் கொண்டு எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்து...
ராஜராஜ சோழன், ஜவாஹர்லால் நேரு, மௌண்ட் பேட்டன், ஆகஸ்ட் 15, திருவாவடுதுறை ஆதீனம், பரிசுப் பொருள் கண்டெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் சிறிது நகர்த்தி...
முதலில் நாம் அறிமுகம் செய்து கொள்ளலாம். மன்னியுங்கள்… நாம் என்றா சொன்னேன்..? இல்லையில்லை, நான் என்னை யார் என்று சொல்லி அறிமுகம் செய்து கொள்ளப்...
உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக்...
தொடரும்
52 போதும் அப்பாவைப் பற்றி, தன் பால்யத்தைப் பற்றி என்றாவது ஒருநாள் நாவலாக எழுதவேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ‘ஓட்டைப் படகு’ என பெயர்கூட வைத்திருப்பதாகவும் சிற்றுண்டி உண்கையில் தன்னிச்சையாகப் பேசிக்கொண்டிருந்தான். சமையற்கார மாமாவுக்கு பதில் கமலா மாமி இட்லி வைத்தார். பனியன் அணிந்து...
மரபணுத் தொகுப்பின் உறுதித்தன்மையை பாதிக்கும் காரணிகள் உயிரிகளின் மரபணுத் தொகுப்பானது இருவிதமான காரணிகளினால் பாதிக்கப்படக்கூடும். ஒன்று புறக்காரணிகள் (exogenous) மற்றொன்று அகக்காரணிகள் (endogenous). வேதியியல் கூறுகள், கதிர்வீச்சு, சூரியனின் புற ஊதாக் கதிர்கள், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுப் பொருட்கள்...
53. ஆங்கிலேயரின் அலட்சியம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின்...
தலைமைப் பண்புகள் ஒரு நாட்டில் பிறந்து, இன்னொரு நாட்டில் குடியேறி, அவரவர் துறையில் சிறந்து விளங்கிய இருபத்தைந்து தலைமைச் செயலதிகாரிகள் பற்றி இதுவரை பார்த்தோம். இதில் ஒன்பது பெண்களும் பதினாறு ஆண்களும் அடங்குவர். உலக மக்கள் தொகையில் பாதியாக இருந்தாலும் உலகிலுள்ள பெரிய நிறுவனங்களைப் பார்க்கும் போது...
27 நெல்லை தந்த அறிவியல் தமிழ் நாயகர்கள் பெரும்பாலும் தமிழறிஞர்களாக சென்ற இரு நூற்றாண்டுகளில் முகிழ்ந்தவர்கள், தமிழிலக்கியங்கள், தமிழ்மொழி, தமிழர் வாழ்வியல் போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும் தோய்வும் கொண்டவர்களாக இருந்தவர்கள். அவர்களே பல இலக்கியங்களைப் படைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; அல்லது...