‘மாமியார்’ என்ற சொல்லே வில்லி போலச் சித்திரிக்கப்பட்டது, பார்க்கப்பட்டது எல்லாம் அந்தக் காலம். பழைய பந்தா மாமியார் எல்லாம் இன்று டிவி சீரியல்களோடு...
வணக்கம்
இந்திய சுதந்திரத்துக்கும் சல்மான் ருஷ்டிக்கும் சம வயது. ஹாதி மதார் என்கிற இருபத்து நான்கு வயது மத அடிப்படைவாதி ஒருவன் அம்மூத்த எழுத்தாளரின் மீது கொலை வெறித் தாக்குதல் நிகழ்த்தியிருக்கிறான். பல இடங்களில் கத்திக் குத்து. ருஷ்டியின் ஒரு கண் பார்வை அநேகமாக இனி இல்லாது போகும் என்று தெரிகிறது.
அவன் ருஷ்டியைப் படித்திருப்பானா, அவரைக் குறித்து அவனுக்கு ஏதேனும் தெரிந்திருக்குமா, இஸ்லாத்தையாவது அவன் முழுதும் அறிந்திருப்பானா போன்ற வினாக்களுக்கு விடை இல்லாத காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ருஷ்டிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்த இரானியத் தலைவர் அயாதுல்லா கொமேனி காலமாகியே முப்பத்து மூன்று வருடங்களாகிவிட்டன. நபர்கள் மறையலாம்; அடிப்படைவாதமும் அது உருவாக்கும் கொலை வெறியும் அப்படியேதான் இருக்கின்றன. நாம் வாழும் இக்காலக்கட்டத்தின் ஆகப் பெரிய அபாயம் இதுவே.
நரேந்தர் தபோல்கர், கௌரி லங்கேஷ், கே.கே. கல்புர்கி என்று இந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களின் மரணத்தின் பின்னணியில் இருந்து இயக்கியதும் இதே மத அடிப்படைவாதம்தான். இந்த மதம் அந்த மதம் என்ற பாகுபாடே இதில் இல்லை. ஒரு பெரும் சமூகத்துக்குப் பொதுவான மந்தை மனோபாவத்தை உருவாக்கி, அதை வன்முறையில் ஊற வைத்து, வார்த்தெடுக்கும் பணியையே இவர்கள் காலம் காலமாகச் செய்து வருகிறார்கள். உலகெங்கும் நிகழ்வது இது. எல்லா நாடுகளிலும். எல்லா மதங்களிலும். எல்லா காலக்கட்டங்களிலும்.
அந்த இளைஞன் ருஷ்டியின் ஒரே ஒரு புத்தகத்தையாவது முழுதும் படித்திருந்தால் இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்க வாய்ப்பே இல்லை. மதவாதிகளால் ஒரு சாத்தானாகச் சித்திரிக்கப்படும் அம்மனிதர் எவ்வளவு சிறந்த மனிதநேயம் கொண்டவர் என்பது அவனுக்குப் புரிந்திருக்கும். அமைப்புகளையும் அரசுகளையும் அரசியல் போலிகளையும்தான் அவர் விமரிசித்தாரே தவிர, மனித குலத்தின் மீது அவருக்குள்ள உள்ளார்ந்த அன்பும் அக்கறையும் எல்லையற்றது.
சென்ற ஆண்டு இந்தியாவில் கோவிட் தொற்று உக்கிரமாகப் பரவிக்கொண்டிருந்த சமயம். இங்கே கொத்துக் கொத்தாக நிகழ்ந்துகொண்டிருந்த மரணங்களைக் காணச் சகிக்காமல் சர்வதேச சமூகத்திடம் இந்தியாவுக்கு உதவச் சொல்லி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்த முதல் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.
மும்பையில் பிறந்தவர் என்பதற்கு அப்பால் இந்தியாவுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர் பிரிட்டிஷ் எழுத்தாளர். அமெரிக்காவில் வசிப்பவர். பிரச்னைக்குள்ளான அவரது ‘சாத்தானின் கவிதைகள்’ நாவலை முதல் முதலில் தடை செய்த நாடு இந்தியா. அதன்பின் ஒரு சுற்றுலாப் பயணியாகவோ, இலக்கியக் கூட்டங்களில் பங்கெடுக்கவோகூட அவர் இந்தியாவுக்கு வருவது சிக்கலுக்குள்ளானது. (2012ம் ஆண்டு ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்வதாக இருந்து, மத அடிப்படைவாதிகளின் மிரட்டலால் திட்டத்தைக் கைவிட்ட சம்பவம் ஒன்று உள்ளது.)
இன்றைக்கு அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில்கூட, அவர்மீது நிகழ்த்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டித்து இங்கிருந்து எத்தனைப் பேர் பேசியிருப்பார்கள் என்று சிந்தித்துப் பார்க்கலாம். கலைஞர்களை-எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டாம். குறைந்தபட்சம் மதிக்கக்கூடத் தெரியாத - மதிப்பை வெளிக்காட்டினால் சிக்கல் வருமோ என்று அஞ்சி நடுங்கும் சமூகமாக இதனை மாற்றி வைத்திருக்கும் சக்தி எது?
வருத்தப்பட்டு உச்சுக் கொட்ட வேண்டாம். வெட்கித் தலைகுனியவும் வேண்டாம். சிறிது சிந்திக்கலாம். நமது பெரும்பாலான பிரச்னைக்குக் காரணம், சிந்திப்பதை நிறுத்திவிட்டு, எதையாவது அல்லது யாரையாவது கண்மூடித்தனமாகப் பின்பற்றிப் போவதே.
சல்மான் ருஷ்டி நலம் பெற்று மீள நம் பிரார்த்தனைகள்.
சிறப்புப் பகுதி: மாமியார் (எக்ஸ்போர்ட் குவாலிடி)
வெளி நாடுகளுக்கு வரும் மாமியார்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இருக்கட்டும். அவர்களை வரவேற்கத் தயாராகும் என்.ஆர்.ஐ மருமகள்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை...
கடல் தாண்டி வேலை பார்க்கும் மகன்கள். கர்ப்பமாகும் மருமகள்கள். பேறுகாலத்திற்கும் பி்ள்ளை வளர்ப்பி்ற்கும் வேறு நாடு செல்லும் மாமியார்கள். அச்சூழல்...
இந்தக் கொரோனா லாக் டவுன் வந்ததற்காக மகிழ்ச்சி அடைந்த ஜீவன்கள் வெளிநாட்டில் வசிக்கும் மாமியார்கள் தான். அவர்களுக்கென்று பிரத்தியேகமாக ஒரு வாட்ஸ் அப்...
உலகைச் சுற்றி
செப்டம்பர் 10 ஞாயிறு இரவு. லிபியாவின் கடற்கரை நகரமான டெர்னாவில் ஒரே மழை. ‘டேனியல்’ புயல் மையம் கொண்டிருந்ததால் 9-ஆம் தேதியிலிருந்தே மழை கொட்டிக்...
அமெரிக்காவில் 18 வயது நிரம்பியவுடன் அனைவரும் உடனே செய்யும் முதல் வேலை, கார் ஓட்டுநருக்கான முழுச் சலுகைகளுடன் கூடிய உரிமத்தைப் பெறுவதே. அப்போதே...
இப்படியொரு நிலைமை தனக்கு உண்டாகும் என்று சலாஹுதீன் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆயுதமேந்தியவர். ஆள் பேரைச் சொன்னால் அண்டை அயலில் அத்தனை பேரும்...
தேசியகீதம் முழங்க, ரஷ்யாவின் மூவர்ணக்கொடி கம்பத்தில் தவழ்ந்தேறியது. வலதுகைச் சட்டையில் ஜீ முத்திரையோடு வரிசையில் சிறுவர் சிறுமியர். தேசியக்கொடிக்கு...
நம்மைச் சுற்றி
உக்கிரமாக அரசியல் பேசுகிறோம். தீவிரமாக சமூகப் பிரச்னைகளைப் பேசுகிறோம். சாதி, மதம், சநாதனம் அது இதுவென்று ஒவ்வொரு நாளும் விவாதம் செய்ய விதவிதமாக...
தொடரும்
அத்தியாயம் ஒன்று தப்பித்தவறி இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வென்றிருந்தால் உலகம் எப்படியிருந்திருக்கும்? இந்தக் கற்பனையை வைத்து 1962ம் ஆண்டு பிலிப்.கே.டிக் எழுதிய நாவல் ‘The Man in High Castle’. அண்மையில் அமேஸான் ப்ரைமிலும் தொடராய் வந்து ஒரு கலக்குக் கலக்கியது. கற்பனையாய் இருந்தாலும்...
68 ஈட்டி இல்லாததற்காக ஏங்குவதோ இழந்ததை எண்ணி அழுவதோ அவன் இயல்பிலேயே இல்லை என்றாலும் கையில் காசில்லாமல் போகும்போதெல்லாம் டிவி வாங்கித் தருகிறேன் என்று ஆயிரம் ரூபாயை அபேஸ் பண்ணிவிட்டு ஓடிய ரங்கன் துரைராஜ் நினைவு வருவதை மட்டும் அவனால் தவிர்க்க முடியவில்லை. அப்போதும் வருத்தத்தைவிட கோபம்தான் பொங்கி...
43 ஔவை துரைசாமிப்பிள்ளை (05.09.1902 – 03.04.1981) ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளில் மணிமேகலைக் காப்பியத்துக்குப் புதிய முறையிலான உரை ஒன்றை நாவலர் வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதிக் கொண்டிருந்தார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த முயற்சி நடைபெற்றது. எழுதிக் கொண்டிருந்த நாட்டார்...
69. மீண்டும் காங்கிரஸ் தலைமை கவலையுடன் நேருவும், இந்திராவும் லண்டனிலிருந்து திரும்பியபோது, கமலா நேருவின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. இந்திரா தன்னுடைய பள்ளிக்குப் புறப்பட்டார். அம்மாவின் உடல்நிலை, கடினமான இலக்கணத்துடன் கூடிய ஜெர்மன் மொழிப் படிப்பு, கடுப்படிக்கும் ஜெர்மன்...