‘மாமியார்’ என்ற சொல்லே வில்லி போலச் சித்திரிக்கப்பட்டது, பார்க்கப்பட்டது எல்லாம் அந்தக் காலம். பழைய பந்தா மாமியார் எல்லாம் இன்று டிவி சீரியல்களோடு...
வணக்கம்
இந்திய சுதந்திரத்துக்கும் சல்மான் ருஷ்டிக்கும் சம வயது. ஹாதி மதார் என்கிற இருபத்து நான்கு வயது மத அடிப்படைவாதி ஒருவன் அம்மூத்த எழுத்தாளரின் மீது கொலை வெறித் தாக்குதல் நிகழ்த்தியிருக்கிறான். பல இடங்களில் கத்திக் குத்து. ருஷ்டியின் ஒரு கண் பார்வை அநேகமாக இனி இல்லாது போகும் என்று தெரிகிறது.
அவன் ருஷ்டியைப் படித்திருப்பானா, அவரைக் குறித்து அவனுக்கு ஏதேனும் தெரிந்திருக்குமா, இஸ்லாத்தையாவது அவன் முழுதும் அறிந்திருப்பானா போன்ற வினாக்களுக்கு விடை இல்லாத காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ருஷ்டிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்த இரானியத் தலைவர் அயாதுல்லா கொமேனி காலமாகியே முப்பத்து மூன்று வருடங்களாகிவிட்டன. நபர்கள் மறையலாம்; அடிப்படைவாதமும் அது உருவாக்கும் கொலை வெறியும் அப்படியேதான் இருக்கின்றன. நாம் வாழும் இக்காலக்கட்டத்தின் ஆகப் பெரிய அபாயம் இதுவே.
நரேந்தர் தபோல்கர், கௌரி லங்கேஷ், கே.கே. கல்புர்கி என்று இந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களின் மரணத்தின் பின்னணியில் இருந்து இயக்கியதும் இதே மத அடிப்படைவாதம்தான். இந்த மதம் அந்த மதம் என்ற பாகுபாடே இதில் இல்லை. ஒரு பெரும் சமூகத்துக்குப் பொதுவான மந்தை மனோபாவத்தை உருவாக்கி, அதை வன்முறையில் ஊற வைத்து, வார்த்தெடுக்கும் பணியையே இவர்கள் காலம் காலமாகச் செய்து வருகிறார்கள். உலகெங்கும் நிகழ்வது இது. எல்லா நாடுகளிலும். எல்லா மதங்களிலும். எல்லா காலக்கட்டங்களிலும்.
அந்த இளைஞன் ருஷ்டியின் ஒரே ஒரு புத்தகத்தையாவது முழுதும் படித்திருந்தால் இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்க வாய்ப்பே இல்லை. மதவாதிகளால் ஒரு சாத்தானாகச் சித்திரிக்கப்படும் அம்மனிதர் எவ்வளவு சிறந்த மனிதநேயம் கொண்டவர் என்பது அவனுக்குப் புரிந்திருக்கும். அமைப்புகளையும் அரசுகளையும் அரசியல் போலிகளையும்தான் அவர் விமரிசித்தாரே தவிர, மனித குலத்தின் மீது அவருக்குள்ள உள்ளார்ந்த அன்பும் அக்கறையும் எல்லையற்றது.
சென்ற ஆண்டு இந்தியாவில் கோவிட் தொற்று உக்கிரமாகப் பரவிக்கொண்டிருந்த சமயம். இங்கே கொத்துக் கொத்தாக நிகழ்ந்துகொண்டிருந்த மரணங்களைக் காணச் சகிக்காமல் சர்வதேச சமூகத்திடம் இந்தியாவுக்கு உதவச் சொல்லி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்த முதல் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.
மும்பையில் பிறந்தவர் என்பதற்கு அப்பால் இந்தியாவுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர் பிரிட்டிஷ் எழுத்தாளர். அமெரிக்காவில் வசிப்பவர். பிரச்னைக்குள்ளான அவரது ‘சாத்தானின் கவிதைகள்’ நாவலை முதல் முதலில் தடை செய்த நாடு இந்தியா. அதன்பின் ஒரு சுற்றுலாப் பயணியாகவோ, இலக்கியக் கூட்டங்களில் பங்கெடுக்கவோகூட அவர் இந்தியாவுக்கு வருவது சிக்கலுக்குள்ளானது. (2012ம் ஆண்டு ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்வதாக இருந்து, மத அடிப்படைவாதிகளின் மிரட்டலால் திட்டத்தைக் கைவிட்ட சம்பவம் ஒன்று உள்ளது.)
இன்றைக்கு அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில்கூட, அவர்மீது நிகழ்த்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டித்து இங்கிருந்து எத்தனைப் பேர் பேசியிருப்பார்கள் என்று சிந்தித்துப் பார்க்கலாம். கலைஞர்களை-எழுத்தாளர்களைக் கொண்டாட வேண்டாம். குறைந்தபட்சம் மதிக்கக்கூடத் தெரியாத - மதிப்பை வெளிக்காட்டினால் சிக்கல் வருமோ என்று அஞ்சி நடுங்கும் சமூகமாக இதனை மாற்றி வைத்திருக்கும் சக்தி எது?
வருத்தப்பட்டு உச்சுக் கொட்ட வேண்டாம். வெட்கித் தலைகுனியவும் வேண்டாம். சிறிது சிந்திக்கலாம். நமது பெரும்பாலான பிரச்னைக்குக் காரணம், சிந்திப்பதை நிறுத்திவிட்டு, எதையாவது அல்லது யாரையாவது கண்மூடித்தனமாகப் பின்பற்றிப் போவதே.
சல்மான் ருஷ்டி நலம் பெற்று மீள நம் பிரார்த்தனைகள்.
சிறப்புப் பகுதி: மாமியார் (எக்ஸ்போர்ட் குவாலிடி)
வெளி நாடுகளுக்கு வரும் மாமியார்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இருக்கட்டும். அவர்களை வரவேற்கத் தயாராகும் என்.ஆர்.ஐ மருமகள்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை...
கடல் தாண்டி வேலை பார்க்கும் மகன்கள். கர்ப்பமாகும் மருமகள்கள். பேறுகாலத்திற்கும் பி்ள்ளை வளர்ப்பி்ற்கும் வேறு நாடு செல்லும் மாமியார்கள். அச்சூழல்...
இந்தக் கொரோனா லாக் டவுன் வந்ததற்காக மகிழ்ச்சி அடைந்த ஜீவன்கள் வெளிநாட்டில் வசிக்கும் மாமியார்கள் தான். அவர்களுக்கென்று பிரத்தியேகமாக ஒரு வாட்ஸ் அப்...
உலகைச் சுற்றி
கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக்...
இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும்...
தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு...
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சூடேறி இருக்கிறது. ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளின் நாயகனாக விளங்கியும் டொனால்ட் டிரம்ப், சரியாமல்...
நம்மைச் சுற்றி
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
தொடரும்
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...
முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...
15. நமக்கு நாமே பண்ணையார் எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ்ப் படங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்ட ஒரு பண்ணையார் இருப்பார். அவரிடம் ஏகப்பட்ட பேர் வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். அந்த வேலையாட்களுடைய வீட்டில் ஏதாவது திருமணம், காதுகுத்து...
15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death...
114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...
110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...
15. திறன்பேசியியல் இணையம் பரவலாயிற்று. இணையத் தேடலும் அத்தியாவசியமாகிவிட்டது. திறன்பேசிகள் அறிமுகமாகியிருந்த காலம். கைப்பேசியில் இணையம் உபயோகிக்கலாம் என்ற அறிவிப்புகள் வந்தனவே ஒழிய, கணினியில் இணையம் கொடுத்த அனுபவத்தை அலைப்பேசியில் முழுமையாக வழங்க முடியாமல் நிறுவனங்கள் தவித்துக்கொண்டிருந்தன. 2007...