இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
வணக்கம்
உடல் எடை ஏற்றம் என்பது இன்று உலகம் முழுதும் பெரும்பாலானவர்கள் கவலை கொள்ளும் பிரச்னை. உட்கார்ந்து செய்யும் வேலைகள் பெருகிவிட்டதே முதன்மைக் காரணம். உழைப்பைத் தர இயலாதபோது உடல் எடை கூடிப் போகிறது. உபரியாகச் சில நோய்கள், சிகிச்சைகள்.
இந்த இதழின் சிறப்புப் பகுதி அதைத்தான் ஆராய்கிறது. பல்வேறு விதமான டயட் முறைகள் இதில் விவாதிக்கப்படுகின்றன. தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான - ஆனால் யாரும் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்க முடியாத பேலியோ டயட் குறித்து நியாண்டர் செல்வன் விரிவாக விளக்கி இருக்கிறார். மாரத்தான் வீரர் பூவராகன், ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவோர் சாப்பிட வேண்டிய விதத்தை விளக்குகிறார். பெண்களுக்கான எடைக் குறைப்பு டயட், மன அழுத்தத்தால் அதிகம் உண்போர் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதிலிருந்து மீளும் வழி என்று இப்பகுதியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் உபயோகமானவை.
இது ஜனாதிபதிகளும் பிரதமர்களும் மாறும் காலம். இலங்கையின் புதிய ஜனாதிபதி ஆகியிருக்கும் பழைய ரணில் விக்கிரமசிங்கே எதிர்கொள்ள வேண்டிய சவால்களை ஸஃபார் அஹ்மத் விளக்குகிறார். அவல நகைச்சுவை என்றால் என்னவென்று மிகத் துல்லியமாகப் புரிய வைக்கும் கட்டுரை அது. இந்தியாவின் புதிய ஜனாதிபதி திரௌபதி முர்முவை பிரபு பாலா அறிமுகம் செய்கிறார். பிரிட்டனின் அடுத்த பிரதமர் தேர்வுக்கான போட்டிக் களத்தில் நிற்கும் இருவரை ஜெயரூபலிங்கம் படம் வரைந்து பாகம் குறிக்கிறார்.
பிரிட்டனிலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் கடந்த வாரம் திடீரென்று வெப்ப நிலை உயர்ந்து, செய்திகளில் பரபரப்பானதை அறிந்திருப்பீர்கள். அது குறித்த விளக்கமான கட்டுரையும், சொல்லி வைத்தாற்போல அதே விஷயத்தைக் கதறக் கதறக் கிண்டலடிக்கும் சிவசங்கரி வசந்தின் நகைச்சுவைக் கட்டுரையும் ஒருசேரப் பிரசுரமாகியிருக்கின்றன. இரண்டையும் அடுத்தடுத்துப் படித்தால் குறைந்தபட்சம் ஒரு புன்னகை, அதிகபட்சம் ஒரு வெடிச் சிரிப்பு நிச்சயம்.
உலக அளவில் முக்கியத்துவம் பெறும் விவகாரங்களைக் குறித்துத் தமிழில் எளிமையாகவும் தொடர்ச்சியாகவும் எழுதும் ஒரே பத்திரிகை மெட்ராஸ் பேப்பர் மட்டுமே. நீங்கள் ரசிக்கும் இப்பத்திரிகையை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி சந்தா செலுத்தச் சொல்லுங்கள். தமிழ் இதழியலில் இது ஒரு புதிய முயற்சி என்பதைப் புரியவையுங்கள்.
ஏனெனில், இது உங்கள் பத்திரிகை.
சிறப்புப் பகுதி: டயட்
சுற்றும் பூமி
அறுசுவை
தொடரும்
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...
முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...
15. நமக்கு நாமே பண்ணையார் எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ்ப் படங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்ட ஒரு பண்ணையார் இருப்பார். அவரிடம் ஏகப்பட்ட பேர் வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். அந்த வேலையாட்களுடைய வீட்டில் ஏதாவது திருமணம், காதுகுத்து...
“வாயை மூடு“ என்று நம்மிடம் யாராவது சொன்னால் நமக்கு கோபம்தான் வரும். ஏனெனில் அது மனிதர்களிடமிருந்து வரும் சாதாரணக் கட்டளை வாக்கியம். ஆனால், அதனையே குருநாதர் பரமசிவேந்திரர், தனது சீடன் சிவராமகிருஷ்ணன் என்கிற சதாசிவப் பிரம்மேந்திரரிடம் சொன்னபோது, அந்தச் சீடனுக்கு ஞானம் வந்தது. ஏனெனில் அது...
15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death...
114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...
110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...
15. திறன்பேசியியல் இணையம் பரவலாயிற்று. இணையத் தேடலும் அத்தியாவசியமாகிவிட்டது. திறன்பேசிகள் அறிமுகமாகியிருந்த காலம். கைப்பேசியில் இணையம் உபயோகிக்கலாம் என்ற அறிவிப்புகள் வந்தனவே ஒழிய, கணினியில் இணையம் கொடுத்த அனுபவத்தை அலைப்பேசியில் முழுமையாக வழங்க முடியாமல் நிறுவனங்கள் தவித்துக்கொண்டிருந்தன. 2007...