கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக்...
வணக்கம்
கோவிட் பரவல் அதிகரித்திருப்பதாகச் செய்தி வருகிறது. மீண்டும் முகக் கவசம் அணியச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அதுவல்லாமல் இன்னொரு புதிய ரக வைரஸ் தாக்குதலும் ஆரம்பமாகியிருக்கிறது. யாரைக் கேட்டாலும் இருமல், தலைவலி, காய்ச்சல். மருந்துக் கடைகளில் கூட்டம் அதிகரித்திருப்பதைக் காண முடிகிறது.
உலகெங்கும் கிருமிகளால் மனிதர்கள் அவதியுறுவதும் மீள்வதும் உலகு தோன்றிய நாளாக உள்ளதுதான். நம் தலைமுறை அதற்கு இன்னொரு சாட்சியாகிறது, அவ்வளவுதான். 2020ம் ஆண்டு பேயாட்டம் ஆடத் தொடங்கிய கோவிட் 19, அடுத்த இரண்டாண்டுகளில் அழித்துச் சென்றவை அநேகம். தொழில் முடங்கியது. வர்த்தகம் விழுந்தது. பணப் புழக்கம் குறைந்தது. பலருக்கு வேலை இல்லாமல் போனது. இழுத்து மூடப்பட்ட பல நிறுவனங்கள் இன்றுவரை திறக்கப்படவேயில்லை. பெரிய நிறுவனங்களில் கட்டாய ஆட்குறைப்பு செய்தார்கள். வேலையில் இருந்தவர்கள் எப்படியாவது அதைத் தக்கவைத்துக்கொள்ள வீட்டிலிருந்தே இரவு பகலாகப் பாடுபட்டார்கள். இங்கே அங்கே என்றில்லை. எங்கும் இதுதான். எல்லா இடங்களிலும் இதுதான். சென்ற வருடம்தான் ஓரளவு அதிலிருந்து மீண்டோம். மீண்டும் இப்போது அதே அச்சுறுத்தல்.
எச்சரிக்கையாக இருங்கள் என்று பொதுவாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். அதற்கு ஒரு பொருளே இல்லாமல் ஆகிவிட்டது. உண்மையில், எச்சரிக்கை உணர்வு என்பது இனி நம் இயல்பாக மாறவேண்டும் போல இருக்கிறது. திரும்பத் திரும்ப முகக் கவசம், திரும்பத் திரும்ப சோப்புப் போட்டுக் கை கழுவுதல், திரும்பத் திரும்ப சானிடைசர். கூட்டம் சேரும் இடத்திலிருந்து விலகி இருத்தல்.
திரையரங்குக்குப் போகாமல் இருக்கலாம். ஆனால் பேருந்து, ரயில் பயணங்களை அன்றாடம் தவிர்க்க முடியுமா? டீக்கடையில் நின்று அரட்டை அடிக்காமல் இருக்கலாம். அலுவலகத்தில் சக ஊழியரிடம் பேசாதிருக்க முடியுமா?
எனவே நாம் செய்யக்கூடியது, தவிர்க்க முடியாதவற்றை மட்டும் செய்வது எனக் கொள்வதுதான். மேற்படி எச்சரிக்கை உணர்வை அந்தத் தருணங்களில் கைக்கொள்ளலாம். இப்போது வந்திருப்பது அல்லது இனி வரப் போவது பழைய கோவிட் அளவுக்கு வீரியம் உள்ளதாக இராது என்று நம்புவது பேதைமை. அப்படி இருக்கக் கூடாது என்று விரும்பலாமே தவிர, அலட்சியப்படுத்துவது ஆபத்தில்தான் முடியும்.
அலுவலகங்கள், பள்ளி-கல்லூரி நிர்வாகங்கள் முகக் கவசத்தை இப்போதே வலியுறுத்தத் தொடங்குவது நல்லது. ஒன்றும் இல்லாவிட்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் ஒன்றும் இருக்காது என்று நாமாக நினைத்துக்கொள்வது சரியல்ல. மருத்துவமனைகளில் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை பெருகத் தொடங்கினால்தான் அரசுத் தரப்பிலிருந்து எச்சரிக்கை வரும். அதைப் பெருகவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டாமே என்பதால்தான் இந்த முன்னறிவிப்பு.
பாதுகாப்பாக இருப்போம். எச்சரிக்கையாக இருப்போம்.
உலகைச் சுற்றி
இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும்...
தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு...
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சூடேறி இருக்கிறது. ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளின் நாயகனாக விளங்கியும் டொனால்ட் டிரம்ப், சரியாமல்...
நம்மைச் சுற்றி
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
மிகத் தீவிரமான விஷ்ணுபக்தனான இந்திரதுய்மன் என்ற அரசன் காட்டிற்கு வேட்டைக்குச் செல்கிறான். அங்கு வசிக்கும் பழங்குடியினரிடம் பேசும்பொழுது அவர்களது...
பிரஹஸ்தன் என்பவன் ஒரு ராமாயணக் கதாபாத்திரம். ராவண சேனையின் தலைமைப் போர் வீரன். ஒரு வகையில் ராவணனுக்கு மாமன் முறை. ராட்சச வீரர்களிலேயே மிகவும் வலுவான...
‘மேக் இன் இந்தியா, ஃபார் தி வேர்ல்ட்’ திட்டத்தின் கீழ், மாதம் ஐம்பதாயிரம் வேஃபர்களைத் தயாரிக்கப் போகிறது இந்தியா. வெனிலா, ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட்...
தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு ஒருமுறை மொத்தமாக ஏற்றாமல் ஒவ்வொரு வருடமும் கட்டண மாறுபாடுகளைச் செய்கிறது...
மேலும் ரசிக்க
ஒவ்வொரு நாளும் செல்போனின் அட்டகாசம், குழந்தைகளின் கவனக்குறைவு, அதனால் விளையும் பிரச்சினைகள் ஆகியவை குறித்து மட்டுமே அதிகம் கேள்விப்படுகிறோம்...
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிர்ணயிக்கும் பல காரணிகளுள் ஒன்று, அந்நாட்டில் உள்ள, உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களின் எண்ணிக்கை. எளிமையாகச்...
கமலஹாசனை நவீன நாஸ்ட்ரடாமஸ் என்று அவர் ரசிகர்கள் பிரஸ்தாபிப்பதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அவர் தென்காசிக்குக் குடும்பத்துடன்...
சமீப நாட்களாக இக ஒருவிதமான அவஸ்தையில் இருந்ததை அவனது திருமதியானவள் கவனிக்கத் தவறவில்லை. பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென்று வானத்தை வெறிப்பான்...
தொடரும்
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...
முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...
15. நமக்கு நாமே பண்ணையார் எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ்ப் படங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்ட ஒரு பண்ணையார் இருப்பார். அவரிடம் ஏகப்பட்ட பேர் வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். அந்த வேலையாட்களுடைய வீட்டில் ஏதாவது திருமணம், காதுகுத்து...
15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death...
114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...
110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...